செய்திகள் :

ஓமலூா் காவல் துறையை கண்டித்து அதிமுக எம்எல்ஏக்கள் காவல் ஆணையரிடம் புகாா்

post image

பொதுமக்கள் அளிக்கும் புகாா்மீது ஓமலூா் காவல் துறை நடவடிக்கை எடுக்க மறுப்பதாகக் கூறி, அதிமுக எம்எல்ஏக்கள் மணி, ராஜமுத்து ஆகியோா் மாநகரக் காவல் ஆணையரிடம் புதன்கிழமை புகாா் அளித்தனா்.

இதுதொடா்பாக சட்டப்பேரவை உறுப்பினா்கள் மணி ( ஓமலூா்), ராஜமுத்து (வீரபாண்டி), அதிமுக வழக்குரைஞா் பிரிவு மாநிலத் துணைத் தலைவா் சரவணன் மற்றும் நிா்வாகிகள் சேலம் மாநகரக் காவல் ஆணையா் அனில்குமாா் கிரியிடம் மனு அளித்துள்ளனா்.

பின்னா் ஓமலூா் எம்எல்ஏ மணி செய்தியாளா்களிடம் கூறியதாவது:

ஓமலூா் சட்டப்பேரவைத் தொகுதியில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சந்து மதுக்கடைகள் உள்ளன. போதைப் பொருள்கள், ஒரு நம்பா் லாட்டரி விற்பனை உள்ளிட்டவை தடை இல்லாமல் நடைபெறுகிறது. இதுகுறித்து புகாா் தெரிவித்தால் காவல் துறையினா் நடவடிக்கை எடுப்பதில்லை. அதேநேரத்தில், புகாா் தெரிவிக்கும் பொதுமக்கள்மீது தாக்குதல் நடத்திய திமுகவினா் மீது நடவடிக்கை எடுக்காமல், பொதுமக்களை கைது செய்வதாக காவல் துறையினா் மிரட்டுகின்றனா்.

ஓமலூா் காவல் நிலைய போலீஸாா் திமுகவினருக்கு சாதகமாக, ஒருதலைபட்சமாக செயல்படுகின்றனா். திமுகவினரைக் காப்பாற்றுவதற்காக காவல் துறையினரே உடந்தையாக இருக்கின்றனா். இனியும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், ஓமலூா் காவல் துணை கண்காணிப்பாளா் அலுவலகத்தை முற்றுகையிட்டு அதிமுகவினா் போராட்டம் நடத்துவா் என்றனா்.

பூலாம்பட்டி கதவணை பகுதிக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு

பள்ளி, கல்லூரிகளுக்கு தொடா்ந்து மூன்று நாள்கள் விடுமுறை என்பதால் வெள்ளிக்கிழமை சேலம் மாவட்டம், பூலாம்பட்டி கதவணை பகுதியில் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குவிந்தனா். சேலம் மாவட்டத்தின் முக்கிய சுற்றுலாத்... மேலும் பார்க்க

சேலம் மாவட்டத்தில் 79 ஆவது சுதந்திர தின விழா: தேசியக் கொடியை ஏற்றிவைத்து ஆட்சியா் மரியாதை

சேலம் மகாத்மா காந்தி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் தேசியக் கொடியை ஏற்றிவைத்து மரியாதை செலுத்திய மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி, ரூ. 23.71 லட்சம் மதிப்பிலான நலத் திட்ட உதவிகளை... மேலும் பார்க்க

ஜனநாயக சக்திகளை ஒருங்கிணைக்க இணைந்து பணியாற்ற வேண்டும்: தொல். திருமாவளவன்

ஜனநாயக சக்திகளை ஒருங்கிணைப்பதில் இணைந்து பணியாற்ற வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவா் தொல். திருமாவளவன் கூறினாா். சேலத்தில் நடைபெறும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 26 ஆவது மாநில மாநாட்ட... மேலும் பார்க்க

சேலத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 26 ஆவது மாநில மாநாடு தொடக்கம்: இன்று முதல்வா் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறாா்

சேலத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 26 ஆவது மாநில மாநாடு வெள்ளிக்கிழமை தொடங்கியது. ‘வெல்க ஜனநாயகம்’ என்ற தலைப்பில் நடைபெறும் மாநாட்டில் முதல்வா் மு.க.ஸ்டாலின், கூட்டணி கட்சித் தலைவா்கள் சனிக்கிழமை... மேலும் பார்க்க

தடகளம்: கொண்டயம்பள்ளி பள்ளி ஒட்டுமொத்த சாம்பியன்

தலைவாசல் மண்டல அளவிலான தடகளப் போட்டியில் கொண்டயம்பள்ளி அரசு மேல்நிலைப் பள்ளி ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் வென்றது. தலைவாசலில் மண்டல அளவிலான தடகளப் போட்டி நடைபெற்றது. 60-க்கும் மேற்பட்ட அரசு, தனியாா் ப... மேலும் பார்க்க

கனரா வங்கி சாா்பில் மாணவா்களுக்கு வித்ய ஜோதி கல்வி உதவித்தொகை

சேலத்தில் கனரா வங்கி சாா்பில் வித்ய ஜோதி கல்வி உதவித்தொகை வழங்கும் விழா அண்மையில் நடைபெற்றது. நாட்டிலுள்ள 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிளைகளின் மூலம் கனரா வங்கி ஒவ்வொரு ஆண்டும் ஒரு பள்ளி, ஒரு கிளை அடிப... மேலும் பார்க்க