செய்திகள் :

`தப்பித் தவறிக்கூட திமுக-காரன் வீட்டுக்கு போய்டாதீங்க; கிட்னி திருடு போயிரும்'- இபிஎஸ் விமர்சனம்!

post image

"மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம்! " என்ற அதிமுக தலைவர் எடப்பாடி பழனிசாமியின் சுற்றுப்பயணத்தின் ‌ ஒரு பகுதியாக திருப்பத்தூரில் நடைபெற்ற பரப்புரை! "

"அதிமுக சாதனைகள்- புகழாரம்! "

கூட்டத்தை பார்த்தவுடன்"இப்பவே வெற்றி நிச்சயம்" என நம்பிக்கை தெரிவித்த இபிஎஸ், அதிமுக ஆட்சியில் தான் வேலூர் மாவட்டத்தில் இருந்து திருப்பத்தூர் மாவட்டத்தை பிரித்து 400 கோடி ரூபாய் செலவில் புதிய மாவட்ட உருவாக்கப்பட்டதாகவும், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் , மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் மற்றும் பிற அடிப்படை கட்டமைப்புகள் அமைத்ததையும் சுட்டிக்காட்டினார். ஆனால் திறப்பு விழாவில் மட்டும் புகழாரத்தை திமுக பெற்றுக் கொண்டதாகவும் குற்றம்சாட்டினார்.

"ஊழல் மற்றும் சட்ட ஒழுங்கு குறைபாடு"

மூன்று மாதத்திற்கு ஒருமுறை மின்கட்டணம் ரத்து செய்ய வேண்டும் என்றார். தமிழ்நாடு சொத்து வரியில் 150 கோடி ஊழல்‌ குறித்து, "அதிமுக ஆட்சிக்கு வந்தால் அனைத்தும் விசாரணைக்கு உட்படுத்தப்படும், என நான் கூறியதைக் கண்டு பயந்து தான் திராவிட மாடல் அரசு குற்றவாளிகளை கைது செய்தனர்‌ " என மேயர் கணவர் கைது நிகழ்வைப் பற்றி பேசினார்.

"பொருளாதாரம் மற்றும் நலத்திட்டங்கள்"

திமுக ஆட்சியில் ஊழல் தான் நடக்கிறது. சென்னை மாநகராட்சியில் கழிப்பறை சுத்தம் செய்ய ஒரு நாளைக்கு 800 ரூபாய் என கழிப்பறை கழுவுவதில் கூட ஊழல் நடத்துகிறது இந்த அரசாங்கம். அதோடு, இந்த ஆட்சியில் 1000 கோடி ஊழல் நடந்ததைப் பற்றி ஒரு ஆங்கில பத்திரிகையில் குறிப்பிட்டிருந்ததையும் மேற்கோள் காட்டினார்.

டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு பத்து ரூபாய் விலை உயர்த்தியதன் மூலம் ஒரு நாளைக்கு 15 கோடியும் மாதத்திற்கு 450 கோடியும் வருடத்திற்கு 5400 கோடி லாபம் என்றும், சென்னை மத்திய அரசில் ஆயிரம் கோடி முறைகேடு நடக்கிறது என்றும் குறிப்பிட்டார்.

அதோடு, அதிமுக ஆட்சியில் தான் அரசு பள்ளி மாணவர்களின் கல்விக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்து பல நலத்திட்டங்கள் வழங்கப்பட்டதாக குறிப்பிட்டார். இலவச மடிக்கணினி மற்றும் 7.5% இட ஒதுக்கீடு உள்ளிட்ட பல திட்டங்கள் அதிமுக ஆட்சியில் தான் தொடங்கப்பட்டது என இபிஎஸ் புகழாரம்!

"உயிருக்கு பாதுகாப்பு இல்லாத அரசு"

ஒரு திமுக சட்டமன்ற உறுப்பினரின் மருத்துவமனையில் நடைபெற்ற உடல் உறுப்பு திருட்டை சுட்டிக்காட்டி, "தப்பி தவறி கூட திமுக காரன் வீட்டுக்கு போய்டாதீங்க, கிட்னி திருடு போயிரும்" என கடுமையாக விமர்சித்தார்.

"அதோடு திமுக ஆட்சியில் பெண்கள், சிறுமிகள், ஏன்.... பாட்டிகளுக்கு கூட பாதுகாப்பில்லை" எனவும் அதற்காக சமீபத்தில் சேலம் ஆத்தூரில் நடந்த ஆசிட் வீசி நகை பறித்த சம்பவங்களை மேற்கோள்காட்டினார்.

"மக்களுக்கான ஆட்சி- அதிமுக !"

அதிமுக தான் மக்களுக்கான ஆட்சி, திமுக குடும்பத்திற்கான ஆட்சி எனவும் குறிப்பிட்டார் .அதோடு அதிமுக கட்சியில் எளிய சாமானிய தொண்டனும் தலைவன் ஆகலாம். ஆனால், திமுக வில் மன்னர் ஆட்சி தான் நடக்கிறது என்றார். கல்வியில் மிகப்பெரிய வளர்ச்சி கண்டது அதிமுக ஆட்சியில் தான். ஆனால் திமுக ஆட்சியிலோ, பல அரசு பள்ளிகள் மூடல் தான் நடைபெற்று வருகிறது என்றார்.

Modi: ``வாயால் வடை சுட்டு மக்களை ஏமாற்றுகிறார் மோடி" - சி.பி.எம் சண்முகம்

இந்தியாவின் 79-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, இந்திய பிரதமர் நரேந்திர மோடி செங்கோட்டையில் கொடி ஏற்றிவிட்டு, உரையாற்றினார். அந்த உரையில், ``இந்தியா வலிமையுடன் வளர்ந்து வருகிறது. தாய்நாட்டைப் போற்றுவத... மேலும் பார்க்க

தூய்மைப் பணியாளர்கள் பிரச்னை: 'தலித்துகள் மனிதர்கள் இல்லையா?'- ஸ்டாலினுக்கு அம்பேத்கர் பேரன் கண்டனம்

சென்னை ராயபுரம், திருவிக நகர் ஆகிய மண்டலங்களில் தூய்மைப் பணிகளைத் தனியாருக்கு வழங்கப்பட்டிருக்கிறது. இதைக் கண்டித்தும், தங்களது பணி நிரந்தரத்தை வலியுறுத்தியும், சென்னை மாநகராட்சியின் ரிப்பன் மாளிகைக்க... மேலும் பார்க்க

"நீங்கள் துணை முதல்வராக இருந்தபோது EPS-ன் ஆளுமை பற்றித் தெரியாதா?" - OPSக்கு ஆர்.பி.உதயகுமார் கேள்வி

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்குத் தலைமைப் பண்பு இல்லையென்று, ஓ.பன்னீர்செல்வம் சமீபத்தில் விமர்சித்திருந்த நிலையில் அதற்கு முன்னாள் அமைச்சரும் சட்டமன்ற எதிர்க்கட்சியின் துணைத் தலைவருமான ஆர்... மேலும் பார்க்க

ED RAID: 5 மணி நேரச் சோதனை; குவிந்த ஆதரவாளர்கள்; CRPF வீரர்கள் வருகை; ஐ.பெரியசாமி வீட்டில் பரபரப்பு

ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமியின் வீடு இருக்கும் திண்டுக்கல் துரைராஜ் நகரில் காலை 7.30 மணி முதலேஅமலாக்கத்துறையினர் சோதனை செய்து வருகின்றனர். அதே போல,சீலப்பாடியில்உள்ள அவரது மகன் ஐ.பி.செந்தி... மேலும் பார்க்க

`மும்பை மாநகராட்சி தேர்தலில் தாக்கரே சகோதரர்கள் கூட்டணி அமைத்து போட்டி’ - உத்தவ் கட்சி

மகாராஷ்டிராவில் அக்டோபர் அல்லது நவம்பரில் மும்பை உட்பட மாநிலம் முழுவதும் உள்ள மாநகராட்சிகளுக்கு தேர்தல் நடைபெற இருக்கிறது. மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு நடக்கும் இத்தேர்தல் உத்தவ் தாக்கரேயிக்... மேலும் பார்க்க

செப்டம்பரில் 75 வயது; ஓய்வு பெறுவதில் இருந்து தப்பிக்க ஆர்.எஸ்.எஸ்ஸை தாஜா செய்தாரா மோடி? - காங்கிரஸ்

இந்தியாவின் 79-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, இந்திய பிரதமர் நரேந்திர மோடி செங்கோட்டையில் கொடி ஏற்றிவிட்டு, உரையாற்றினார். மோடியின் உரை அந்த உரையின் இடையில், அவர் ஆர்.எஸ்.எஸ் இயக்கம் குறித்தும் பேசி... மேலும் பார்க்க