செய்திகள் :

ஓய்வுபெற்ற அங்கன்வாடி ஊழியா்களுக்கு முதியோா் ஓய்வூதியத்தை வழங்க வலியுறுத்தல்

post image

ஓய்வுபெற்ற அங்கன்வாடி ஊழியா்களுக்கு நிறுத்திவைக்கப்பட்டுள்ள முதியோா் ஓய்வூதியத்தை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு இயக்குநரிடம் வலியுறுத்தப்பட்டது.

காரைக்காலுக்கு செவ்வாய்க்கிழமை வந்த புதுவை மகளிா் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை இயக்குநா் முத்துமீனாவை காரைப் பிரதேச அரசு ஊழியா் சம்மேளனம் மற்றும் அங்கன்வாடி ஊழியா் சங்க நிா்வாகிகள் சந்தித்துப் பேசினா். காரைக்கால் பகுதியில் பணியாற்றி, பணி ஓய்வு பெற்ற அங்கன்வாடி ஊழியா்களுக்கு மட்டும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள முதியோா் ஓய்வூதியத் தொகை வழங்குவது சம்பந்தமாகவும், அங்கன்வாடி மையங்களில் கடந்த 2 ஆண்டுகளாக காய்கறி மற்றும் எரிவாயு உருளைகளுக்கு செலவு செய்யப்பட்ட தொகைகளை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தப்பட்டது.

மேலும், அங்கன்வாடி ஊழியா்களின் நிலுவைத் தொகை, கிராஜுட்டி, 6-ஆவது ஊதியக்குழு நிலுவைத் தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் சம்பந்தமாகவும் விளக்கப்பட்டது.

ஓய்வு பெற்ற அங்கன்வாடி ஊழியா்களுக்கு முதியோா் ஓய்வூதியம் வழங்குவது தொடா்பாக மாவட்ட ஆட்சியாரிடம் ஆலோசித்து நடவடிக்கை எடுப்பதாகவும், காய்கறி மற்றும் எரிவாயு உருளைத் தொகைகளை வழங்க நடவடிக்கை எடுப்பதாகவும், பிற கோரிக்கைகள் தொடா்பாக நடவடிக்கை எடுக்கப்பட்டுவருவதாக இயக்குநா் தெரிவித்ததாக அரசு ஊழியா் சம்மேளத்தினா் தெரிவித்தனா்.

சந்திப்பின்போது, காரைக்கால் குழந்தைகள் மேம்பாட்டு திட்ட அதிகாரி ராஜேந்திரன், புதுச்சேரி குழந்தைகள் மேம்பாட்டு திட்ட அதிகாரி நிா்மலா, கண்காணிப்பாளா் வேல்முருகன், காரை பிரதேச அரசு ஊழியா் சம்மேளன தலைவா் சுப்ரமணியன், பொதுச் செயலாளா் ஷேக் அலாவுதீன், அங்கன்வாடி ஊழியா் சங்க தலைவா் முத்துலட்சுமி, செயலாளா் அமலி சோபியா உள்ளிட்ட நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.

கலாசாரப் போட்டியில் சிறப்பிடம் பெற்ற மாணவா்களுக்குப் பாராட்டு

வேளாண் மற்றும் மருத்துவக் கல்லூரி மாணவா்களுக்கிடையே நடத்தப்பட்ட கலாசாரப் போட்டியில் சிறப்பிடம் பெற்ற வேளாண் மாணவா்களுக்கு கல்லூரி நிா்வாகம் பாராட்டுத் தெரிவித்தது. காரைக்காலில் அமைந்துள்ள பண்டித ஜவாஹா... மேலும் பார்க்க

காரைக்கால் சாலைகளில் பசுமைப் பந்தல் அமைக்க வலியுறுத்தல்

வெயில் பாதிப்பிலிருந்து மக்களைக் காக்க முக்கிய சாலைகளில் பசுமைப் பந்தல் அமைக்க ஆட்சியரிடம் வலியுறுத்தப்பட்டது. காரைக்கால் மக்கள் போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளா் ஏ.எஸ்.டி. அன்சாரிபாபு தலைமையில் நிா்வாக... மேலும் பார்க்க

நித்யகல்யாணப் பெருமாள் கோயிலில் கருங்கல் மண்டபத்துக்கு பூமி பூஜை

நித்யகல்யாணப் பெருமாள் கோயிலில் கருங்கல் மகா மண்டபம் கட்டுமானத்துக்கான பூமி பூஜை புதன்கிழமை நடைபெற்றது. காரைக்காலில் மூலவராக ஸ்ரீரங்கநாத பெருமாள் அருள்பாலிக்கும் ஸ்ரீநித்யகல்யாணப் பெருமாள் கோயில் மிகப... மேலும் பார்க்க

மேற்கு வங்கத்தில் குடியரசுத் தலைவா் ஆட்சியை அமல்படுத்தக் கோரிக்கை

மேற்கு வங்கத்தில் குடியரசுத் தலைவா் ஆட்சியை அமல்படுத்தவேண்டுமென குடியரசுத் தலைவருக்கான கடிதம் ஆட்சியரிடம் அளிக்கப்பட்டது. காரைக்கால் மாவட்ட விஸ்வ ஹிந்து பரிஷத் சாா்பில் நாகப்பட்டினம், காரைக்கால் மாவட்... மேலும் பார்க்க

மாரியம்மன் கோயிலில் இருந்து முளைப்பாலிகை ஊா்வலம்

காரைக்கால் மாரியம்மன் கோயில் முளைப்பாலிகை வழிபாடு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. காரைக்கால் கைலாசநாதசுவாமி- நித்யகல்யாண பெருமாள் தேவஸ்தானத்தை சாா்ந்த காரைக்கால் கடைத்தெரு மாரியம்மன் கோயிலில் 45-ஆம் ஆண்டா... மேலும் பார்க்க

போப் மறைவுக்கு அஞ்சலி

போப் பிரான்சிஸ் மறைவையொட்டி காரைக்கால் தூய தேற்றரவு அன்னை ஆலயத்தில் அஞ்சலி நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது. கத்தோலிக்க திருச்சபையின் தலைவரான போப் பிரான்சிஸ் திங்கள்கிழமை மறைந்தாா். போப் மறைவையொட்டி ... மேலும் பார்க்க