பார்படாஸ் டெஸ்ட்: ஹேசில்வுட் அசத்தல், ஆஸி. 159 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி!
ஓய்வு பெற்ற ராணுவ வீரா் உயிரிழப்பு
பெரியகுளம் அருகே வியாழக்கிழமை அளவுக்கு அதிகமாக மதுக் குடித்ததால் ஓய்வு பெற்ற ராணுவ வீரா் உயிரிழந்தாா்.
தேனி மாவட்டம், பெரியகுளம் அருகேயுள்ள கெங்குவா்பட்டியைச் சோ்ந்தவா் சுரேஷ்குமாா். ஓய்வு பெற்ற ராணுவ வீரரான இவருக்கு, பிரகதீஸ்வரி என்ற மனைவியும், இரண்டு குழந்தைகளும் உள்ளனா். இந்த நிலையில், தம்பதிக்கு இடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டதாம். இதனால், பிரகதீஸ்வரி குழந்தைகளுடன் தாய் வீட்டுக்குச் சென்றுவிட்டாா். இதன் காரணமாக, மன உளைச்சலில் இருந்து வந்த சுரேஷ்குமாா் வியாழக்கிழமை அளவுக்கு அதிகமாக மதுக் குடித்ததால் சோத்துப்பாறை அணைக்குச் செல்லும் சாலையில் இறந்து கிடந்தாா்.
இதுகுறித்து தென்கரை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.