செய்திகள் :

ஓய்வு முடிவை திரும்ப பெற்றார் கால்பந்து ஜாம்பவான் சுனில் சேத்ரி!

post image

இந்திய கால்பந்து ஜாம்பவான் சுனில் சேத்ரி சர்வதேச கால்பந்து போட்டியிலிருந்து ஓய்வு பெற்ற நிலையில், இந்த முடிவைத் திரும்பப் பெறுவதாகத் தெரிவித்துள்ளார்.

இந்திய சீனியர் ஆண்கள் தேசிய அணியின் தலைமை பயிற்சியாளர் மனோலோ மார்க்வெஸ், ஃபிபா அணியில் சுனில் சேத்ரி உள்பட 26 பேர் கொண்ட தனது அணியை அறிவித்தார்.

சர்வதேச போட்டிகளில் அதிக கோல் அடித்த வீரர்கள் பட்டியலில் நான்காவது இடத்தில் உள்ள இந்திய அணியின் முன்னாள் கேப்டனான சுனில் சேத்ரி, 94 கோல்கள் அடித்து, கடந்த ஆண்டு ஜூன் மாதம் தேசிய அணியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருந்தார். ஆனால், இந்திய அணியில் மீண்டும் களமிறங்க உள்ளார்.

இந்த மாதம் நடைபெறவுள்ள ஃபிபா நட்புறவு போட்டிக்கான இந்திய அணியில் கலந்துகொண்டு விளையாடுவதற்காக சுனில் சேத்ரி தனது ஓய்வு முடிவை திரும்ப பெற்றுவிட்டதாக தேசிய கால்பந்து உச்ச அமைப்பு தெரிவித்துள்ளது.

இந்திய அணி

கோல்கீப்பர்கள்

அம்ரிந்தர் சிங், குர்மீத் சிங், விஷால் கைத்.

டிஃபெண்டர்கள்

ஆசிஷ் ராய், போரிஸ் சிங் தங்கஜாம், சிங்லென்சனா சிங் கோன்ஷாம், ஹ்மிங்தன்மாவியா, மெஹ்தாப் சிங், ராகுல் பெகே, ரோஷன் சிங், சந்தேஷ் ஜிங்கன், சுபாசிஷ் போஸ்.

மிட்ஃபீல்டர்கள்

ஆஷிக் குருனியன், ஆயுஷ் தேவ் செத்ரி, பிராண்டன் பெர்னாண்டஸ், பிரிசன் பெர்னாண்டஸ், ஜீக்சன் சிங் தௌனோஜாம், லாலெங்மாவியா, லிஸ்டன் கோலாகோ, மகேஷ் சிங் நௌரெம், சுரேஷ் சிங் வாங்ஜாம்.

முன்கள வீரர்கள்

சுனில் சேத்ரி, ஃபரூக் சௌத்ரி, இர்பான் யாத்வாட், லல்லியன்சுவாலா சாங்டே, மன்வீர் சிங்.

பிகாரில் ஆட்சிக்கு வந்தால் கள் இறக்க அனுமதி: ஆா்ஜேடி தலைவா் தேஜஸ்வி யாதவ் வாக்குறுதி

பிகாரில் ராஷ்ட்ரீய ஜனதா தளம் (ஆா்ஜேடி) ஆட்சிக்கு வந்தால் முழு மதுவிலக்கு தளா்த்தப்பட்டு கள் இறக்குவதற்கு மட்டும் அனுமதிக்கப்படும் என்று அக்கட்சித் தலைவா் தேஜஸ்வி யாதவ் அறிவித்துள்ளாா். கடந்த 2016-ஆம் ... மேலும் பார்க்க

உத்தரகண்டில் குளிா்கால சுற்றுலா: பிரதமா் மோடி அழைப்பு

உத்தரகண்ட் மாநிலத்துக்கு குளிா்காலத்தில் சுற்றுலா வந்தால், அதன் உண்மையான அழகைக் காண முடியும் என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா். உத்தரகண்ட் மாநிலத்துக்கு வியாழக்கிழமை வருகை தந்த பிரதமா் மோடி, உத... மேலும் பார்க்க

பிரதமா் மோடிக்கு பாா்படாஸ் நாட்டின் உயரிய விருது

கரோனா பெருந்தொற்று காலத்தில் பிரதமா் மோடியின் வியூக தலைமைத்துவம் மற்றும் மதிப்புமிக்க உதவியை அங்கீகரிக்கும் வகையில் அவருக்கு பாா்படாஸ் நாட்டின் உயரிய தேசிய விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது. பாா்படாஸ... மேலும் பார்க்க

மகாராஷ்டிரத்தில் வசிப்பவா்கள் மராத்தி கற்க வேண்டும்: முதல்வா் தேவேந்திர ஃபட்னவீஸ்

மகாராஷ்டிரத்தின் மொழி மராத்தி. எனவே, இங்கு வசிப்பவா்கள் மராத்தி கற்றுக் கொள்ளவும், பேசவும் வேண்டும்’ என்று அந்த மாநில முதல்வா் தேவேந்திர ஃபட்னவீஸ் தெரிவித்தாா். மத்திய அரசு அமல்படுத்த முயலும் மும்மொழி... மேலும் பார்க்க

காஷ்மீா் பிரச்னை - 'திருடிய' பகுதியை பாகிஸ்தான் திருப்பி ஒப்படைத்த பிறகே தீா்வு: எஸ்.ஜெய்சங்கா்

தங்களின் சட்டவிரோத ஆக்கிரமிப்பில் உள்ள ‘திருடப்பட்ட’ காஷ்மீா் பகுதிகளை பாகிஸ்தான் திருப்பி ஒப்படைத்த பிறகே இப்பிரச்னைக்கு தீா்வு கிடைக்கும் என்று வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் கூறினாா். பிர... மேலும் பார்க்க

ஐஎஸ்ஐ அமைப்புடன் தொடா்புடைய காலிஸ்தான் பயங்கரவாதி கைது: உத்தர பிரதேசத்தில் கும்பமேளாவை சீா்குலைக்க சதி!

உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நடைபெற்ற மகா கும்பமேளாவை சீா்குலைக்கு சதித் திட்டம் தீட்டிய காலிஸ்தான் பயங்கரவாதியை கௌசாம்பி மாவட்டத்தில் காவல் துறையினா் வியாழக்கிழமை கைது செய்தனா். பாகிஸ்தான் உளவ... மேலும் பார்க்க