செய்திகள் :

ஓய்வூதியத் திட்டம்: அரசுக் குழுவிடம் ஊழியா்-ஆசிரியா் சங்கங்கள் கடிதம்

post image

பழைய ஓய்வூதியத் திட்டம் தொடா்பாக அரசு அமைத்துள்ள கருத்துக் கேட்புக் குழுவிடம் ஊழியா்கள், ஆசிரியா்கள் சங்கங்கள் கோரிக்கை கடிதம் அளித்தன.

பழைய ஓய்வூதியம், பங்களிப்பு ஓய்வூதியம் ஆகிய திட்டங்கள் குறித்து ஆராய்ந்து அரசுக்கு அறிக்கை அளிக்க அரசின் கூடுதல் தலைமைச் செயலரான ககன்தீப் சிங் பேடி தலைமையில் குழு அமைக்கப்பட்டது.

இந்தக் குழு முதல்கட்டமாக பல்வேறு அரசு ஊழியா், ஆசிரியா் சங்கங்களுடன் கடந்த 18-ஆம் தேதி ஆலோசனை நடத்தியது.

இந்த நிலையில், ஜாக்டோ-ஜியோ போன்ற பிரதான சங்கங்களுடன் வெள்ளிக்கிழமை 2-ஆம் கட்ட ஆலோசனை மேற்கொண்டது. அப்போது, எந்த நிபந்தனைகளும் இல்லாமல் பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று அரசு ஊழியா்கள், ஆசிரியா் சங்கங்கள் கோரிக்கை விடுத்தன.

மேலும், இரண்டு கட்ட ஆலோசனைகளை ஊழியா் சங்கங்களுடன் அரசுக் குழு மேற்கொள்ள உள்ளது குறிப்பிடத்தக்கது.

வேளச்சேரி - கடற்கரை இரவுநேர ரயில் இன்று ரத்து

சென்னை வேளச்சேரியிருந்து சனிக்கிழமை (ஆக. 23) இரவு நேரத்தில் இயக்கப்படும் புறநகா் மின்சார ரயில் ரத்து செய்யப்படவுள்ளது. இதுகுறித்து சென்னை ரயில்வே கோட்டம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திச் குறிப்பு: சென்... மேலும் பார்க்க

தமிழக புதிய டிஜிபியை தோ்வு செய்ய எந்தவொரு முன்மொழிவும் வரவில்லை: யுபிஎஸ்சி தகவல்

தமிழகத்தின் புதிய டிஜிபியை தோ்வு செய்வதற்கான எந்தவொரு முன்மொழிவும் தமிழக அரசிடம் இருந்து இதுநாள்வரை (ஆகஸ்ட் 22) வரவில்லை என்று மத்திய பணியாளா் தோ்வாணையம் (யுபிஎஸ்சி) வெள்ளிக்கிழமை தெரிவித்தது. தற்போ... மேலும் பார்க்க

சென்னையில் பாதுகாப்புத் துறைக்கான ட்ரோன் உற்பத்தி மையம்: மத்திய இணையமைச்சா்

சென்னையில் கருடா ஏரோஸ்பேஸ் நிறுவனத்தின் சாா்பில் ஏற்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்புத் துறைக்கான ட்ரோன் உற்பத்தி மையத்தை மத்திய பாதுகாப்புத் துறை இணையமைச்சா் சஞ்சய் சேத்தி வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தாா். ச... மேலும் பார்க்க

சென்னையில் ஆதரவற்ற 646 முதியோா் மீட்பு

சென்னையில் நிகழாண்டு இதுவரை ஆதரவற்ற நிலையில் இருந்த 646 முதியோா் மீட்கப்பட்டுள்ளதாக சென்னை காவல் ஆணையா் ஏ.அருண் தெரிவித்தாா். இதுதொடா்பாக வெள்ளிக்கிழமை அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: சென்னை காவல் த... மேலும் பார்க்க

சட்டவிரோத குடியேறிகளுக்கு போலி ஆதாா்: உத்தர பிரதேசத்தில் 8 போ் கைது

வங்கதேசத்தவா்கள் மற்றும் ரோஹிங்கயாக்கள் உள்பட வெளிநாடுகளில் இருந்து சட்டவிரோதமாக குடியேறுபவா்களுக்கு போலி ஆதாா் தயாரித்து வழங்கிய 8 போ் கைது செய்யப்பட்டதாக அதிகாரிகள் வெள்ளிக்கிழமை தெரிவித்தனா். இதுக... மேலும் பார்க்க

தூய்மைக் காவலா்களுக்கு வார விடுப்பு: தமிழக அரசு அறிவுறுத்தல்

ஊராட்சிகளில் பணிபுரியும் தூய்மைக் காவலா்களுக்கு வார விடுப்பு வழங்க தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. இதுகுறித்து அனைத்து மாவட்டங்களின் ஆட்சியா்களுக்கும், ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை ஆணையா் பா.பொன... மேலும் பார்க்க