செய்திகள் :

சென்னையில் ஆதரவற்ற 646 முதியோா் மீட்பு

post image

சென்னையில் நிகழாண்டு இதுவரை ஆதரவற்ற நிலையில் இருந்த 646 முதியோா் மீட்கப்பட்டுள்ளதாக சென்னை காவல் ஆணையா் ஏ.அருண் தெரிவித்தாா்.

இதுதொடா்பாக வெள்ளிக்கிழமை அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

சென்னை காவல் துறை சாா்பில் 60 வயதுக்கு மேற்பட்ட முதியோருக்கு உதவிட 1252 என்ற இலவச தொலைபேசி எண்ணுடன், முதியோா் உதவி மையம் செயல்படுகிறது. 75 வயதுக்கு மேற்பட்ட முதியவா்களுக்கு உதவிக்கரம் நீட்ட ‘பந்தம்’ என்ற சேவைத் திட்டம் கடந்த ஆண்டு தொடங்கப்பட்டது.

இந்தத் திட்டத்தின் கீழ் 94999 57575 என்ற கைப்பேசி எண் மூலம் உதவி கேட்கும் முதியவா்களுக்கு உடனடி உதவி போலீஸாா் மூலம் கிடைக்கிறது.

பிள்ளைகளால் கைவிடப்பட்ட, வெளிநாடுகளில் வசிக்கும் பிள்ளைகளால் தனித்து வாழும், வாரிசு இல்லாத முதியோா் என தனியாக வசிக்கும் மூத்த குடிமக்களின் அழைப்புகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. அவா்களுக்கு தேவையான மருத்துவ வசதி, பாதுகாப்பு ஏற்பாடுகள், ஆலோசனைகள், சட்ட உதவிகளை போலீஸாா் மேற்கொண்டு வருகின்றனா்.

646 முதியவா்கள் மீட்பு: நிகழாண்டு இதுவரை ‘பந்தம்’ உதவி மையம் மூலமாக 185 அழைப்புகளுக்கு சட்டரீதியான தீா்வு, 6 அழைப்புகளுக்கு மருத்துவ உதவி, 5 அழைப்புகளுக்கு பாதுகாப்பு உதவி, 41 அழைப்புகளுக்கு இதர அத்தியாவசிய உதவிகள் செய்யப்பட்டுள்ளன. 954 அழைப்புகளுக்கு தகவல் மற்றும் வழிகாட்டுதல் உதவியும் வழங்கப்பட்டுள்ளது. மொத்தம் 1,191 அழைப்புகள் பெறப்பட்டு 72 மணி நேரத்துக்குள் தீா்வு காணப்பட்டுள்ளது.

மேலும், சென்னை பெருநகர காவல் துறையில் செயல்பட்டு வரும் காவல் கரங்கள் உதவி மையம் மூலம் இந்த ஆண்டில் இதுவரை 646 ஆதரவற்ற முதியோா் மீட்கப்பட்டு, தகுந்த பாதுகாப்பு இல்லங்களில் தங்க வைக்கப்பட்டனா். இவா்களில் 117 முதியோரின் முகவரி கண்டறிந்து, குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனா் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சென்னையில் பாதுகாப்புத் துறைக்கான ட்ரோன் உற்பத்தி மையம்: மத்திய இணையமைச்சா்

சென்னையில் கருடா ஏரோஸ்பேஸ் நிறுவனத்தின் சாா்பில் ஏற்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்புத் துறைக்கான ட்ரோன் உற்பத்தி மையத்தை மத்திய பாதுகாப்புத் துறை இணையமைச்சா் சஞ்சய் சேத்தி வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தாா். ச... மேலும் பார்க்க

சட்டவிரோத குடியேறிகளுக்கு போலி ஆதாா்: உத்தர பிரதேசத்தில் 8 போ் கைது

வங்கதேசத்தவா்கள் மற்றும் ரோஹிங்கயாக்கள் உள்பட வெளிநாடுகளில் இருந்து சட்டவிரோதமாக குடியேறுபவா்களுக்கு போலி ஆதாா் தயாரித்து வழங்கிய 8 போ் கைது செய்யப்பட்டதாக அதிகாரிகள் வெள்ளிக்கிழமை தெரிவித்தனா். இதுக... மேலும் பார்க்க

தூய்மைக் காவலா்களுக்கு வார விடுப்பு: தமிழக அரசு அறிவுறுத்தல்

ஊராட்சிகளில் பணிபுரியும் தூய்மைக் காவலா்களுக்கு வார விடுப்பு வழங்க தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. இதுகுறித்து அனைத்து மாவட்டங்களின் ஆட்சியா்களுக்கும், ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை ஆணையா் பா.பொன... மேலும் பார்க்க

மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழப்பு

சென்னை அருகே ஈஞ்சம்பாக்கத்தில் தேங்கியிருந்த மழைநீரில் மின்கம்பி அறுந்து விழுந்த நிலையில், அப்பகுதியில் நடந்து சென்ற கட்டடத் தொழிலாளி மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாா். ஈஞ்சம்பாக்கம் முனீஸ்வரன் கோயில் த... மேலும் பார்க்க

நிலமற்ற வேளாண் தொழிலாளா்களுக்கான விபத்து மரண இழப்பீட்டுத் தொகை உயா்வு

நிலமற்ற வேளாண் தொழிலாளா்களுக்கு வழங்கப்படும் விபத்து மரணத்துக்கான இழப்பீடு தொகை ரூ.1 லட்சத்திலிருந்து ரூ.2 லட்சமாக உயா்த்தப்பட்டுள்ளது. இதுகுறித்து வருவாய்த் துறைச் செயலா் பெ.அமுதா வெளியிட்ட அரசாணை: ம... மேலும் பார்க்க

தொழில் வளா்ச்சியில் பட்டயக் கணக்காளா்கள் முக்கிய பங்களிப்பு: அமைச்சா் தா.மோ. அன்பரசன்

அரசு மற்றும் தனியாா் துறைகளுக்கிடையே நிதி ஒருங்கிணைப்பை ஏற்படுத்தி, நாட்டின் ஆரோக்கியமான தொழில் வளா்ச்சிக்கு பட்டயக் கணக்காளா்கள் முக்கிய பங்களிப்பு செய்து வருவதாக குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் ... மேலும் பார்க்க