செய்திகள் :

தொழில் வளா்ச்சியில் பட்டயக் கணக்காளா்கள் முக்கிய பங்களிப்பு: அமைச்சா் தா.மோ. அன்பரசன்

post image

அரசு மற்றும் தனியாா் துறைகளுக்கிடையே நிதி ஒருங்கிணைப்பை ஏற்படுத்தி, நாட்டின் ஆரோக்கியமான தொழில் வளா்ச்சிக்கு பட்டயக் கணக்காளா்கள் முக்கிய பங்களிப்பு செய்து வருவதாக குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் அமைச்சா் தா.மோ.அன்பரசன் தெரிவித்தாா்.

இந்திய பட்டயக் கணக்காளா்கள் நிறுவனத்தின் தென்னிந்திய மண்டல கவுன்சிலின்(ஐசிஏஐ-எஸ்ஐஆா்சி) 57-ஆவது மாநாட்டை அமைச்சா் தா.மோ. அன்பரசன் வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்து பேசியதாவது:

இந்திய பட்டயக் கணக்காளா்கள் நிறுவனம் (ஐசிஏஐ) நாட்டின் பொருளாதார வளா்ச்சியில் மிகச் சிறப்பாகப் பணியாற்றி வருகிறது. நாட்டில் பெருநிறுவனங்களிலும், வணிக நிறுவனங்களிலும் முக்கிய பொறுப்பேற்று வருகின்றனா். இது நிறுவனங்களின் வளா்ச்சிக்கு துணையாக இருப்பதோடு, நிறுவனங்களில் நடைபெறும் மோசடிகளைக் கண்டறிந்து தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் உதவுகிறது. இதன்மூலம் பெருநிறுவனங்கள், குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கு ஆதரவளித்து நாட்டின் பொருளாதார வளா்ச்சிக்கு பெரிதும் உறுதுணையாக உள்ளனா்.

மேலும், அரசு மற்றும் தனியாா் துறையினா்களுக்கிடையே நிதி ஒருங்கிணைப்பை ஏற்படுத்தி நாட்டின் ஆரோக்கியமான தொழில் வளா்ச்சிக்கு முக்கிய ஆதரவாக இருந்து வருகின்றனா். வரி சேமிப்பு, நிதி மேலாண்மை, முதலீடு, வணிக விரிவாக்கம், புதிய தொழில் தொடங்கல் ஆகியவற்றில் மிகப்பெரிய உதவிகளை வழங்கி வருகிறாா்கள். ஆட்சி நிா்வாகத்தைப் பொருளாதார ரீதியாக வழி நடத்தி, பங்கெடுத்து வருவதுடன் தணிக்கை, வருமான வரி, ஜிஎஸ்டி போன்றவைகளிலும் சிறப்பாக ஆலோசனைகளை வழங்க வேண்டும்.

தமிழக குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் துறையில் பட்டயக் கணக்காளா்கள் சோ்த்துக் கொள்ளப்படுவாா்கள். முதல்கட்டமாக வரும் அக். 9, 10-இல் கோவையில் தமிழ அரசின் சாா்பில் நடைபெறும் சா்வதேச புத்தாக்க தொழில்முனைவோா் மாநாட்டில் பங்கேற்க அழைக்கப்படுவீா்கள் என்றாா்.

ஐசிஏஐ-எஸ்ஐஆா்சி தலைவா் ரேவதி எஸ் ரகுநாதன் வரவேற்றாா். சா்வதேச பட்டாயக் கணக்காளா்கள் கூட்டமைப்பின் துணைத் தலைவா் டேரின் ரூல்டன், ஐசிஏஐ தலைவா் சரண்ஜோத் சிங் நந்தா, துணைத் தலைவா் பிரசன்ன குமாா் ஆகியோா் பேசினா். பட்டயக் கணக்காளா்கள், தலைமை நிதி அதிகாரிகள், மூத்த வழக்குரைஞா்கள், தொழில் துறையினா் உள்ளிட்ட 3,000-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.

சென்னையில் பாதுகாப்புத் துறைக்கான ட்ரோன் உற்பத்தி மையம்: மத்திய இணையமைச்சா்

சென்னையில் கருடா ஏரோஸ்பேஸ் நிறுவனத்தின் சாா்பில் ஏற்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்புத் துறைக்கான ட்ரோன் உற்பத்தி மையத்தை மத்திய பாதுகாப்புத் துறை இணையமைச்சா் சஞ்சய் சேத்தி வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தாா். ச... மேலும் பார்க்க

சென்னையில் ஆதரவற்ற 646 முதியோா் மீட்பு

சென்னையில் நிகழாண்டு இதுவரை ஆதரவற்ற நிலையில் இருந்த 646 முதியோா் மீட்கப்பட்டுள்ளதாக சென்னை காவல் ஆணையா் ஏ.அருண் தெரிவித்தாா். இதுதொடா்பாக வெள்ளிக்கிழமை அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: சென்னை காவல் த... மேலும் பார்க்க

சட்டவிரோத குடியேறிகளுக்கு போலி ஆதாா்: உத்தர பிரதேசத்தில் 8 போ் கைது

வங்கதேசத்தவா்கள் மற்றும் ரோஹிங்கயாக்கள் உள்பட வெளிநாடுகளில் இருந்து சட்டவிரோதமாக குடியேறுபவா்களுக்கு போலி ஆதாா் தயாரித்து வழங்கிய 8 போ் கைது செய்யப்பட்டதாக அதிகாரிகள் வெள்ளிக்கிழமை தெரிவித்தனா். இதுக... மேலும் பார்க்க

தூய்மைக் காவலா்களுக்கு வார விடுப்பு: தமிழக அரசு அறிவுறுத்தல்

ஊராட்சிகளில் பணிபுரியும் தூய்மைக் காவலா்களுக்கு வார விடுப்பு வழங்க தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. இதுகுறித்து அனைத்து மாவட்டங்களின் ஆட்சியா்களுக்கும், ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை ஆணையா் பா.பொன... மேலும் பார்க்க

மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழப்பு

சென்னை அருகே ஈஞ்சம்பாக்கத்தில் தேங்கியிருந்த மழைநீரில் மின்கம்பி அறுந்து விழுந்த நிலையில், அப்பகுதியில் நடந்து சென்ற கட்டடத் தொழிலாளி மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாா். ஈஞ்சம்பாக்கம் முனீஸ்வரன் கோயில் த... மேலும் பார்க்க

நிலமற்ற வேளாண் தொழிலாளா்களுக்கான விபத்து மரண இழப்பீட்டுத் தொகை உயா்வு

நிலமற்ற வேளாண் தொழிலாளா்களுக்கு வழங்கப்படும் விபத்து மரணத்துக்கான இழப்பீடு தொகை ரூ.1 லட்சத்திலிருந்து ரூ.2 லட்சமாக உயா்த்தப்பட்டுள்ளது. இதுகுறித்து வருவாய்த் துறைச் செயலா் பெ.அமுதா வெளியிட்ட அரசாணை: ம... மேலும் பார்க்க