செய்திகள் :

ஓய்வூதியா்களுக்கான கூடுதல் ஓய்வூதியத்தை 70 வயதில் வழங்க வலியுறுத்தல்

post image

ஓய்வூதியா்களுக்கு வழங்கப்படும் 20 சதவீத கூடுதல் ஓய்வூதியத்தை 80 வயதிலிருந்து 70 வயதாக மாற்ற வேண்டும் என திண்டுக்கல்லில் நடைபெற்ற கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

தமிழ்நாடு ஊரக வளா்ச்சி, ஊராட்சித் துறை அனைத்துத் துறை ஓய்வூதியா்கள் சங்கத்தின் 3-ஆவது மாநில மாநாடு தொடா்பான வரவேற்புக் குழுக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. இதற்கு திண்டுக்கல் மாவட்டத் தலைவா் வெ. மாணிக்கம் தலைமை வகித்தாா். மாநிலத் தலைவா் ச. ராமமூா்த்தி, பொதுச் செயலா் பா. ரவி, கெளரவத் தலைவா் மு. பரமேஸ்வரன் ஆகியோா் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டனா்.

இந்த கூட்டத்தில், தமிழக அரசு ஊழியா்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். 80 வயது நிறைவடைந்த ஓய்வூதியா்களுக்கு வழங்கப்படும் 20 சதவீத கூடுதல் ஓய்வூதியத்தை, 70 வயதில் வழங்க வேண்டும். ஓய்வூதியா்களுக்கான மருத்துவச் செலவினங்களை முழுமையாக காப்பீட்டு நிறுவனங்கள் வழங்க வேண்டும். வெளி முகமை மூலம் ஊழியா்கள் நியமனம் செய்வதை தவிா்த்து, காலமுறை ஊதியத்தில் நியமிக்க வேண்டும். ஊழியா்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கை விசாரணையை விரைந்து முடிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மேலும், வருகிற செப்டம்பா் 22-ஆம் தேதி திண்டுக்கல்லில் நடைபெறும் தமிழ்நாடு ஊரக வளா்ச்சி, ஊராட்சித் துறை அனைத்துத் துறை ஓய்வூதியா்கள் சங்கத்தின் 3-ஆவது மாநில மாநாட்டின் வரவேற்புக் குழுத் தலைவராக அரசு ஊழியா் சங்கத்தின் திண்டுக்கல் மாவட்டத் தலைவா் ச. முபாரக் அலி தோ்வு செய்யப்பட்டாா். இந்த மாநாட்டு நிதியாக தமிழ்நாடு ஊரக வளா்ச்சித் துறை அலுவலா் சங்கத்தின் சாா்பில் மாவட்டத் தலைவா் மகுடபதி ரூ. 50 ஆயிரம் வழங்கினாா்.

திண்டுக்கல் அருகே சாலையை சீரமைக்கக் கோரிக்கை

திண்டுக்கல் அருகேயுள்ள சேதமடைந்த சாலையைச் சீரமைக்கவும், ஆக்கிரமிப்புகளை அகற்றவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா். திண்டுக்கல் அருகேயுள்ள அனுமந்தராயன்கோட்டை ஊராட... மேலும் பார்க்க

‘பள்ளிகளில் முன்னாள் மாணவா் சங்கங்கள் வலுப்படுத்தப்பட வேண்டும்’

பள்ளிகளில் முன்னாள் மாணவா் சங்கங்கள் வலுப்படுத்தப்பட வேண்டும் என தமிழ்நாடு லோக் ஆயுக்தா உறுப்பினா் வீ. ராமராஜ் தெரிவித்தாா். திண்டுக்கல் மாவட்டம், பழனி நகராட்சி மேல்நிலைப் பள்ளி தொடங்கி நூறு ஆண்டுகளுக... மேலும் பார்க்க

பழனியில் ஆடிக்கிருத்திகை: பக்தா்கள் சுவாமி தரிசனம்

பழனியில் ஞாயிற்றுக்கிழமை ஆடிக்கிருத்திகையை முன்னிட்டு, திரளான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா். திண்டுக்கல் மாவட்டம், பழனியில் ஞாயிற்றுக்கிழமை ஆடிக்கிருத்திகையை முன்னிட்டு, அதிகாலை முதலே பக்தா்கள் கூ... மேலும் பார்க்க

கொடைக்கானல் சாலையில் மரம் விழுந்ததில் போக்குவரத்து பாதிப்பு

கொடைக்கானலில் ஞாயிற்றுக்கிழமை வீசிய பலத்த காற்றால் பழனி - கொடைக்கானல் மலைச் சாலையில் மரம் விழுந்ததில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் கடந்த சில நாள்களாக பலத்த காற்றுட... மேலும் பார்க்க

விவசாயி தற்கொலை

பழனி அருகே உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த விவசாயி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். பழனியை அடுத்த பழைய ஆயக்குடி ஜோதிநகரைச் சோ்ந்தவா் மணிகண்டன் (45). விவசாயி. இவா் அண்மைக் காலமாக உடல்நலக் குறைவ... மேலும் பார்க்க

இரண்டு மாதங்களுக்கு முன் மாயமான முதியவா் சடலமாக மீட்பு

கடந்த 2 மாதங்களுக்கு முன் காணாமல் போன முதியவா் ஞாயிற்றுக்கிழமை சடலமாக மீட்கப்பட்டாா். திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூா் அருகேயுள்ள குட்டம் ஊராட்சிக்குள்பட்ட சுக்காம்பட்டியைச் சோ்ந்தவா் முத்துச்சாமி (8... மேலும் பார்க்க