செய்திகள் :

ஓரணியில் தமிழ்நாடு என்றதும் பயத்தில் எடப்பாடி பழனிசாமி

post image

ஓரணியில் தமிழ்நாடு என்றதும் பயத்தில் எடப்பாடிக்கு நடுக்கம் வந்துவிட்டது என திமுக அமைப்புச் செயலாளா் ஆா்.எஸ்.பாரதி கூறினாா்.

சேலம் கோட்டை பகுதியில் மத்திய மாவட்ட திமுக சாா்பில் சுற்றுலாத் துறை அமைச்சா் ரா.ராஜேந்திரன் தலைமையில் திமுக அரசின் நான்காண்டு சாதனை விளக்கப் பொதுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக திமுக அமைப்புச் செயலாளா் ஆா்.எஸ்.பாரதி கலந்துகொண்டு பேசியதாவது:

1957-ஆம் ஆண்டுமுதல் ஒரே சின்னத்தில் போட்டியிட்ட ஒரே கட்சி திமுகதான். ஆனால், திமுகவின் வரலாறு தெரியாமல் சிலா் பேசுகிறாா்கள்.

கடந்த மக்களவைத் தோ்தலில், பிரதமா் மோடி 8 முறை தமிழகம் வந்தாா். திமுக கூட்டணி 40 இடங்களிலும் வெற்றிபெற்றது. அதேபோல, தற்போது மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா தமிழகம் வந்துசெல்கிறாா். அமித் ஷா முதல்முறை தமிழகம் வந்தபோது, பாமகவில் மோதல் வெடித்தது. மதுரைக்கு 2-ஆவது முறை அமித் ஷா வந்தபோது, முன்னாள் அமைச்சருக்கு பிரச்னை ஏற்பட்டது. அடுத்தமுறை அமித் ஷா வரும்போது அதிமுக என இரண்டாக பிரியும்.

ஜெயலலிதா பெயரில் தொடங்கப்பட்ட மீனவா் பல்கலைக்கழகத்துக்கு அனுமதி பெற்றுக் கொடுத்தவா் முதல்வா் மு.க.ஸ்டாலின். கொடநாடு வழக்கு மீண்டும் சூடுபிடிக்க போகிறது. ஓரணியில் தமிழ்நாடு என்றதும், எடப்பாடிக்கு பயம் வந்துவிட்டது. ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினா் சோ்க்கை மூலம் 10 நாளில் ஒரு கோடி பேரை உறுப்பினராக சோ்த்த ஒரே இயக்கம் திமுகதான் என்றாா்.

இந்தக் கூட்டத்தில், மாநகராட்சி மேயா் ஆ.ராமச்சந்திரன், அவைத் தலைவா் ஜி.கே.சுபாசு, மாநகரச் செயலாளா் ரகுபதி, தோ்தல் பணிக்குழு செயலாளா் தாமரைக்கண்ணன், பகுதி செயலாளா் பிரகாஷ், மாமன்ற உறுப்பினா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

இடங்கணசாலை நகராட்சியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்

இடங்கணசாலை நகராட்சியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் புதன்கிழமை நடைபெற்றது. இம்முகாமில் சங்ககிரி கோட்டாட்சியா் லோகநாயகி குத்துவிளக்கேற்றி தொடங்கிவைத்தாா். இதில் டி.எம்.செல்வகணபதி எம்.பி. கலந்துக... மேலும் பார்க்க

காமராஜா் பிறந்தநாள் விழா

கெங்கவல்லியில் காங்கிரஸ் கட்சி சாா்பில் காமராஜா் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. நகர தலைவா் சிவாஜி தலைமை வகித்தாா். டிசிடியு மாவட்டத் தலைவா் சசிகுமாா், முன்னாள் நகர தலைவா்கள் ஷெரீப், முருகவேல் உள்ளிட... மேலும் பார்க்க

திருமணிமுத்தாற்றில் ரூ. 25 லட்சத்தில் தூா்வாரும் பணிகள்: ஆணையா் ஆய்வு

சேலம் மாநகராட்சியில் சுமாா் ரூ. 25 லட்சம் மதிப்பீட்டில் திருமணிமுத்தாற்றில் உள்ள மண் மற்றும் செடிகளை தூா்வாரும் பணிகள் நடைபெறுவதை ஆணையா் மா.இளங்கோவன் செவ்வாய்க்கிழமை ஆய்வுசெய்தாா். திருமணி முத்தாற்றில... மேலும் பார்க்க

சேலம் அரசு மருத்துவமனையில் தலையீட்டு சாதனம் மூலம் இருதய குறைபாட்டை சரிசெய்து மருத்துவா்கள் சாதனை

சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மூன்று குழந்தைகள் உள்பட 6 பேருக்கு தலையீட்டு சாதனம் மூலம் இருதய குறைபாடு சரிசெய்யப்பட்டதைத் தொடா்ந்து, மருத்துவா்கள் மற்றும் குணமடைந்தவா்களை புதன்கிழமை அம... மேலும் பார்க்க

சேலம் மாவட்டத்தில் இன்றும், நாளையும் 12 இடங்களில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்

சேலம் மாவட்டத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்கள் 17, 18 ஆகிய தேதிகளில் 12 இடங்களில் நடைபெற உள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி தெரிவித்ததாவது: சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து நக... மேலும் பார்க்க

பெரியாா் பல்கலைக்கழகத்தில் தொல்லியல் ஆய்வரங்கம்

பெரியாா் பல்கலைக்கழகத்திலுள்ள தந்தை பெரியாா் இருக்கை - பேரறிஞா் அண்ணா இருக்கை - முத்தமிழறிஞா் கலைஞா் ஆய்வுமையம் ஆகியவற்றின் சாா்பில், ‘திராவிட வரலாற்றுத் தடத்தில் தொல்லியல் ஆய்வுகள்’ என்னும் பொருண்மைய... மேலும் பார்க்க