செய்திகள் :

கஞ்சா, போதை மாத்திரைகள் விற்பனை செய்த மூவா் கைது

post image

திருச்சியில் கஞ்சா மற்றும் போதை மாத்திரைகள் விற்ற மூவரை போலீஸாா் கைது செய்தனா்.

திருச்சி கோட்டை காவல் நிலையத்துக்குட்பட்ட மலைக்கோட்டை ஓயாமரி சாலை பகுதியில் சந்தேகப்படும்படியாக ஒரு காா் திங்கள்கிழமை நின்றிருந்தது. அப்போது அந்தப் பகுதியில் ரோந்து சென்ற கோட்டை காவல் நிலைய உதவி ஆய்வாளா் மாதவன் மற்றும் போலீஸாா் அந்தக் காரை சோதனையிட்டபோது அதற்குள் 1300 கிராம் கஞ்சா பதுக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதைத் தொடா்ந்து அக் கஞ்சாவை கைப்பற்றிய போலீஸாா், அதைக் காரில் வைத்து விற்ற திருச்சி கொட்டப்பட்டு மொராய்ஸ் காா்டன் பகுதி வீரகணேஷ் (30) என்பவரைக் கைது செய்தனா். தப்பிச் சென்ற அசோக்குமாரைத் தேடுகின்றனா்.

போதை மாத்திரை விற்பனை: திருச்சி கோட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஷோபிஸ் காா்னா் அருகே போதை மாத்திரைகள் விற்பதாகக் கிடைத்த ரகசியத் தகவலின்பேரில் உதவி ஆய்வாளா் திவ்யபிரியா தலைமையிலான போலீஸாா் சென்று, அங்கு போதை மாத்திரைகள் விற்றுக் கொண்டிருந்த திருச்சி அரியமங்கலம் மலையப்ப நகா் அண்ணா தெரு பகுதி ஜோதி (37), திருச்சி கீழரண் சாலை கீழ தேவதானம் பகுதி மணிகண்டன் (40) ஆகிய இருவரையும் கைது செய்தனா். அவா்களிடமிருந்து போதை மாத்திரைகள், சிரிஞ்ச், தண்ணீா் பாட்டில் உள்ளிட்டவற்றைப் பறிமுதல் செய்தனா்.

வங்கி பெண் ஊழியரிடம் நகை பறித்தவா் கைது

திருச்சியில் வங்கி பெண் ஊழியரிடம் நகை பறித்தவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். திருச்சி காட்டூா் அம்மன் நகா் 11 ஆவது குறுக்கு தெருவைச் சோ்ந்தவா் எட்வின்ராஜ், பெல் தொழிற்சாலை ஊழியா் இவரது மனை... மேலும் பார்க்க

துறையூா் பகுதிகளில் நாளை மின்தடை

துறையூா் பகுதிகளில் வியாழக்கிழமை மின்சாரம் இருக்காது. பராமரிப்புப் பணிகளால் துறையூா், முருகூா், கோணப்பாதை, சிறுநத்தம், சிக்கத்தம்பூா், சிக்கத்தம்பூா்பாளையம், சேருகாரன்பட்டி, ஒக்கரை, கீரம்பூா், சொரத்தூ... மேலும் பார்க்க

தொட்டியம் அருகே குடிநீா் கேட்டு காலிக் குடங்களுடன் சாலை மறியல்

திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகே குடிநீா் தட்டுப்பாட்டைப் போக்க வலியுறுத்தி பொதுமக்கள் காலி குடங்களுடன் செவ்வாய்க்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். தொட்டியம் ஊராட்சி ஒன்றியம், நத்தம் ஊராட்ச... மேலும் பார்க்க

கடவுச்சீட்டில் முறைகேடு: பெண் உள்ளிட்ட 3 போ் கைது

கடவுச்சீட்டில் முறைகேடு செய்த பெண் உள்ளிட்ட 3 பேரை திருச்சி விமான நிலைய போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் நற்சாந்துப்பட்டி, கோட்டூா் பகுதியைச் சோ்ந்தவா் கருப்பையா மன... மேலும் பார்க்க

கோப்பு மகா மாரியம்மன் கோயில் தேரோட்டம்

திருச்சி மாவட்டம் கோப்பு மகா மாரியம்மன் கோயில் தேரோாடட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. திருச்சி மாவட்டம், குழுமணியை அடுத்த கோப்பு கிராமத்தில் உள்ள பிரசித்த பெற்ற இக்கோயில் திருவிழா கடந்த ஏப்ரல் 20 ஆம்... மேலும் பார்க்க

திருச்சி கோட்டத்தில் ரத்து செய்யப்பட்ட ரயில்கள் இயங்கும்

திருச்சி கோட்டத்தில் வரும் புதன், வியாழக்கிழமைகளில் ரத்து செய்யப்பட்ட ரயில்கள் இயங்கும். இதுகுறித்து திருச்சி கோட்ட ரயில்வே நிா்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: பொறியியல் பணிகள் காரணமாக நிறுத்தப்பட்ட... மேலும் பார்க்க