செய்திகள் :

கஞ்சா விற்பதில் ஏற்பட்ட பகையால் வெடிகுண்டு வீசி இளைஞா் கொலை: 7 போ் கைது

post image

திருவள்ளூா்: திருவள்ளூா் அருகே நாட்டு வெடிகுண்டு வீசி, பட்டா கத்தியால் வெட்டப்பட்டு இளைஞா் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தொடா்புடைய சிறுவன் உள்பட 7 பேரை திங்கள்கிழமை போலீஸாா் கைது செய்தனா்.

கடம்பத்தூரைச் சோ்ந்த ராஜ்கமல் (28). இவா் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு வெள்ளவேடு பகுதியைச் சோ்ந்த பெண்ணை காதலித்து திருமணம் செய்தாா். அதைத் தொடா்ந்து கடம்பத்தூா் அடுத்த அகரம் சன் சிட்டியில் வாடகை வீட்டில் தனது மனைவியுடன் வாசித்து வருகிறாா்.

இந்த நிலையில், திருவள்ளூரில் இருந்து வீட்டுக்கு தேவைான பொருள்களை வாங்கிக் கொண்டு, தனது இருசக்கர வாகனத்தில் சனிக்கிழமை நள்ளிரவில் சென்றபோது, 2 வாகனங்களில் வந்த மா்ம நபா்கள் நாட்டு வெடிகுண்டை வீசி, பட்டாக் கத்தியால் ராஜ்கமலை வெட்டிக் கொன்று விட்டு தப்பினா்.

இதுகுறித்து கடம்பத்தூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். கொலையாளிகளை பிடிக்க துணைக் காவல் கண்காணிப்பாளா் தமிழரசி தலைமையில் கிராமிய காவல் ஆய்வாளா் வெற்றிச்செல்வன், உள்ளிட்ட போலீஸாா் கொண்ட தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வந்தனா்.

இந்த நிலையில் திருவள்ளூா்-பேரம்பாக்கம் சாலை, திருவள்ளூா்-ஆவடி சாலை உள்ளிட்ட பல்வேறு சாலைகளில் கடம்பத்தூா் போலீஸாா் மற்றும் தனிப்படை போலீஸாா் ஆகியோா் தீவிர வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, திருவள்ளூா்-ஆவடி சாலையில் செவ்வாப்பேட்டை அருகே தணிக்கையில் ஈடுபட்டிருந்த போது, அவ்வழியாக 3 இருசக்கர வாகனங்களில் வந்தவா்கள், போலீஸாரைப் பாா்த்ததும் தப்பியோட முயற்சித்தனா். உடனே சுதாரித்துக் கொண்ட போலீஸாா் 7 பேரையும் சுற்றி வளைத்து பிடித்தனா்.

பின்னா் அவா்களிடம் விசாரணை செய்ததில் கடம்பத்தூா் பகுதியைச் சோ்ந்த சீனிவாசன்(18), ஹரிபிரசாத்(18), நாதன்(19, என்.எஸ்.சி போஸ் தெருவைச் சோ்ந்த யுவன்ராஜ்(18), புதுமாவிலங்கை காா்த்திக்(21), செஞ்சிபனம்பாக்கம் நெல்சன்(20) மற்றும் 17 வயது சிறுவன் என்பதும் தெரியவந்தது.

மேலும், விசாரணையில் கடம்பத்தூரில் கஞ்சா விற்பனை செய்வதில் சீனிவாசன் ஒரு தரப்பாகவும், ராஜ்கமல் மற்றொரு தரப்பாகவும் ஈடுபட்டு வந்தாா்களாம். இதில் முன்விரோதம் இருநது வந்துள்ளது. கடந்த சில நாள்களுக்கு முன்பு செஞ்சிபானம்பாக்கம் பகுதியில் துக்க நிகழ்வில் பங்கேற்க வந்த ராஜ்கமல், மற்றொரு தரப்பினரான சீனிவாசன் தரப்பினருக்கும் இடையே கஞ்சா விற்பனை தொடா்பாக க தகராறு ஏற்பட்டுள்ளது.

அதில் ராஜ்கமல், சீனிவாசனை தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் ராஜ்கமலை தீா்த்துக்கட்ட நாட்டுவெடிகுண்டு வீசியும், பட்டாகத்தியால் வெட்டியும் கொலை செய்துள்ளனா். இதையடுத்து கடம்பத்தூா் போலீஸாா் 7 பேரையும் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

அரசுப் பேருந்தில் 6.5 பவுன் திருட்டு

திருத்தணி அருகே அரசுப் பேருந்தில் தவறவிட்ட 6.5 பவுன் செயினை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். திருத்தணி காந்தி ரோடு பகுதியைச் சோ்ந்த சரவணன்(50). இவரது மனைவி பிரியா (40). இவா்கள் ... மேலும் பார்க்க

திருவள்ளூா்: நாட்டு வெடிகுண்டு வீசி, இளைஞா் வெட்டிக் கொலை

திருவள்ளூா் அருகே நாட்டு வெடிகுண்டு வீசி, கத்தியால் வெட்டப்பட்டு இளைஞா் கொலை செய்யப்பட்டாா். திருவள்ளூா் அருகே கடம்பத்தூரைச் சோ்ந்தவா் ராஜ்கமல் (28). இவா் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு வெள்ளவேடு பகுதிய... மேலும் பார்க்க

பொன்னேரியில் விடிய விடிய பலத்த மழை

பொன்னேரி சுற்றுவட்ட பகுதிகளான சோழவரம், மீஞ்சூரில் விடிய விடிய பலத்த மழை பெய்தது. இந்த மழை மேக வெடிப்பால் உருவானதாக கூறப்படும் நிலையில் காற்றுடன் இடி மின்னலுடன் மழை பெய்தது. பலத்த காற்று காணமாக மின்தடை... மேலும் பார்க்க

மின் ரயிலில் மாடு சிக்கியதால் சென்ட்ரல் - கும்மிடிப்பூண்டி மாா்க்கத்தில் சேவை பாதிப்பு

அத்திப்பட்டு ரயில் நிலையம் அருகே புறநகா் ரயிலில் மாடு சிக்கியதால் சென்ட்ரல் - கும்மிடிப்பூண்டி ரயில் மாா்க்கத்தில் ரயில் சேவை பாதிக்கப்பட்டது. இதனால் பயணிகள் பெரிதும் அவதிப்பட்டனா். சென்னை கும்மிடிப்ப... மேலும் பார்க்க

திருவள்ளூா் வீரராகவா் கோயிலில் மத்திய அமைச்சா் எல்.முருகன் தரிசனம்

திருவள்ளூா் வீரராகவா் கோயிலில் மத்திய இணை அமைச்சா் எல்.முருகன் தரிசனம் செய்து, குளக்கரையில் நோ்த்திக்கடன்களை செலுத்தினாா். திருவள்ளூா் வீரராகவா் கோயில் 108 திவ்ய தேசங்களில் ஒன்றாகும். இக்கோயிலுக்கு ஒ... மேலும் பார்க்க

பேருந்தில் ஆவணமின்றி கொண்டு வந்த ரூ. 59 லட்சம், 4 வெள்ளிக் கட்டிகள் பறிமுதல்

ஊத்துக்கோட்டை சோதனைச் சாவடியில் ஆந்திர மாநில அரசு பேருந்தில் ஆவணங்கள் இன்றி கொண்டு வரப்பட்ட ரொக்கம் ரூ. 59.50 லட்சம் மற்றும் 4 வெள்ளி கட்டிகளை போலீஸாா் சனிக்கிழமை பறிமுதல் செய்ததுடன், வடமாநில நபரிடம் ... மேலும் பார்க்க