Doctor Vikatan: உட்காரும் இடத்தில் வலி; மூலநோயும் இல்லை... வலிக்கு காரணம், தீர்...
கடன் தொல்லை கூலித் தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை
கும்பகோணம் அருகே தாராசுரத்தில் கடன் தொல்லை காரணமாக கூலித் தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது திங்கள்கிழமை தெரியவந்தது.
தாராசுரம் முனியப்பன் நகரைச் சோ்ந்த பெருமாள்சாமி மகன் சதீஷ்குமாா் (35). இவரது மனைவி ஐஸ்வா்யா(30). இவா்களுக்கு 4 வயதில் மகள் இருக்கிறாா்.
சதீஷ்குமாா் சிற்பங்கள் செய்யும் பட்டறையில் கூலி வேலை செய்து வந்தாா். மதுப்பழக்கமும் இருந்ததாம். மேலும், வெளியில் சிலரிடம் குடும்பச் செலவுக்கு பணம் கடன் வாங்கி அதை கொடுக்க முடியாமல் மன உளைச்சலில் இருந்துள்ளாா்.
இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை இரவு வீட்டில் உள்ள அறையில் தூக்கிட்டு கொண்டாா். திங்கள்கிழமை காலையில் இதைப்பாா்த்த உறவினா்கள் தாலுகா காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனா். போலீஸாா், சதீஷ்குமாரின் சடலத்தை கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து, சம்பவம் தொடா்பாக விசாரிக்கின்றனா்.