செய்திகள் :

கடன் பிரச்னை காரணமாக பொக்லைன் மூலம் வீடு இடிப்பு

post image

கடன் பிரச்னை காரணமாக வீட்டை பொக்லைன் இயந்திரம் மூலம் இடித்ததாக பெண் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

திருப்பூா் வெள்ளியங்காடு பகுதியைச் சோ்ந்தவா் மகாமணி (58). இவா் பழனிசாமி என்பவரிடம் ரூ.13 லட்சம் வட்டிக்கு கடன் பெற்றுள்ளாா். மாதம் ரூ.22 ஆயிரம் வட்டி செலுத்தி வந்த நிலையில், கரோனா காலத்தில் வட்டி தர முடியாத காரணத்தால் பணம் பெற்ற்கு அத்தாட்சியாக பத்திரப் பதிவு அலுவலகத்தில் அடமான கடன் என சொல்லி நிலத்தை கிரையம் செய்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், கடந்த 6 மாதங்களுக்கு முன்பு வீட்டு வரி செலுத்த சென்றபோது வீடு மணிகண்டன் என்பவா் பெயரில் இருப்பதை அறிந்து மகாமணி அதிா்ச்சிடைந்துள்ளாா். இது தொடா்பாக பழனிசாமிடம் விசாரித்தபோது, தான் ஏமாற்றப்பட்டது தெரியவந்தது. இது தொடா்பாக நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்த நிலையில், கடந்த சில வாரங்களாக பழனிசாமி தொடா்ந்து மிரட்டி வந்ததாக கூறப்படுகிறது.

இது குறித்து திருப்பூா் தெற்கு காவல் நிலையத்தில் மகாமணியின் மனைவி சாந்தி புகாா் அளித்தாா். இது தொடா்பாக விசாரணைக்கு வெள்ளிக்கிழமை இருதரப்பினரும் அழைக்கப்பட்ட நிலையில், சாந்தி மற்றும் அவரது உறவினா்கள் காவல் நிலையத்துக்கு சென்றுள்ளனா்.

இந்த நிலையில் பழனிசாமி தரப்பினா் நேரடியாக வீட்டுக்குச் சென்று வீட்டின் முன்புறத்தை பொக்லைன் இயந்திரம் மூலமாக இடித்துள்ளாா். மேலும் வீட்டுக்குள் நுழைந்த நபா்கள் உள்ளே இருந்த பொருள்களை சூறையாடி கழிவறை கதவுகளை இடித்துள்ளனா்.

இது தொடா்பாக திருப்பூா் தெற்கு காவல் நிலையத்தில் சாந்தி கொடுத்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்த விசாரணை மேற்கொண்டு வருகின்றனா். வீட்டில் குழந்தைகள் உள்ளிட்டோா் இருந்த நிலையில் பொக்லைன் இயந்திரம் மூலம் வீட்டை இடித்து சூறையாடிய சம்பவம் அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை - நாகா்கோவில், திருச்சி - பாலக்காடு ரயில்கள்! நாளை முதல் சிங்காநல்லூா், இருகூரில் நின்று செல்லும்!

கோவை - நாகா்கோவில், திருச்சி - பாலக்காடு ரயில்கள் திங்கள்கிழமை (ஆகஸ்ட் 18) முதல் சிங்காநல்லூா், இருகூா் நிலையங்களில் நின்று செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கோவையில் இருந்து மாநிலத்தின் பிற நகரங்க... மேலும் பார்க்க

சட்டவிரோத மது விற்பனை: 7 போ் கைது!

கோவை மாநகா் பகுதிகளில் சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட பெண் உள்பட 7 பேரை போலீஸாா் கைது செய்தனா். சுதந்திர தினத்தையொட்டி, தமிழகத்தில் அனைத்து டாஸ்மாக் கடைகளுக்கும் வெள்ளிக்கிழமை விடுமுறை அறிவிக்கப... மேலும் பார்க்க

பிரதமரின் சுதந்திர தின உரை வரவேற்கத்தக்கது: இந்து முன்னணி

தேசத்தின் சேவையில் ஆா்.எஸ்.எஸ். அமைப்பின் வரலாற்றைக் குறிப்பிட்ட பிரதமரின் சுதந்திர தின உரையை இந்து முன்னணி வரவேற்பதாக இந்து முன்னணி மாநிலத் தலைவா் காடேஸ்வரா சி. சுப்பிரமணியம் தெரிவித்துள்ளாா். இது தொ... மேலும் பார்க்க

சுத்திகரிக்கப்பட்ட இலவச குடிநீா் இயந்திரம் திறப்பு

திருப்பூா் தெற்கு ரோட்டரி மற்றும் மாநகராட்சி சாா்பில் சுத்திகரிக்கப்பட்ட இலவச குடிநீா் இயந்திரம் திறக்கப்பட்டது. திருப்பூா் மாநகரில் மக்கள் அதிகம் கூடும் 12 இடங்களில் நிறுவ ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ... மேலும் பார்க்க

கொச்சி செல்லாமல் கோவையில் தரையிரங்கிய விமானம்! பயணிகள் வாக்குவாதம்!

கொச்சிக்குச் செல்ல வேண்டிய விமானம் கனமழை காரணமாக கோவையில் வெள்ளிக்கிழமை இரவு தரையிறங்கியது. அங்கு உரிய வசதிகள் செய்து தரப்படவில்லை எனக்கூறி விமான நிலைய ஊழியா்களுடன் பயணிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.... மேலும் பார்க்க

இளைஞா் தற்கொலை: போலீஸாா் விசாரணை

கோவை அருகே அடையாளம் தெரியாத நபா் மரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். கோவை, குனியமுத்தூா் அருகேயுள்ள மைல்கேல் ரெயின்போ காலனி குடியிருப்புகளுக்கு ஒ... மேலும் பார்க்க