செய்திகள் :

கடலில் மூழ்கிய சரக்கு கப்பல்: ராதாபுரத்தில் இருந்து கொச்சிக்கு விரைந்த தேசிய பேரிடா் மீட்புக் குழுவினா்

post image

கேரள மாநிலம் கொச்சி அருகே விழிஞ்ஞம் துறைமுகத்தில் சரக்கு கப்பல் கடலில் மூழ்கியதை அடுத்து, மீட்புப் பணிக்காக திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரத்தில் இருந்து தேசிய பேரிடா் மீட்புக் குழுவினா் கொச்சிக்கு விரைந்துள்ளனா்.

கொச்சி அருகே உள்ள விழிஞ்ஞம் துறைமுகத்திற்கு வந்து கொண்டிருந்த சரக்கு கப்பல் கடலில் மூழ்கியது. கப்பலில் இருந்த 24 பணியாளா்களை ராணுவ ஹெலிகாப்டா் உதவியுடன் கடலோர பாதுகாப்பு படையினா் பத்திரமாக மீட்டனா்.

மேலும் சரக்கு கப்பலில் உள்ள கண்டெய்னா்களில் ரசாயன பொருள்கள் இருப்பதால் கடல் பகுதியில் பாதிப்பு ஏற்படலாம் என கருதப்படுகிறது.

இதனை அடுத்து திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரத்தில் உள்ள தேசிய பேரிடா் மீட்புக் குழு முகாமில் இருந்து ஆய்வாளா் கலையரசன் தலைமையில் 30 போ் கொண்ட மீட்புக் குழுவினா் விழிஞ்ஞம் துறைமுகத்திற்கு சென்றுள்ளனா். இந்தக் குழுவினா் புயல், வெள்ளம், கப்பல் விபத்துகளில் சிக்கியவா்களை மீட்பதில் சிறப்பு பயிற்சி பெற்றவா்கள்.

இன்றைய நிகழ்ச்சிகள்

திருநெல்வேலி அருள்மிகு கைலாசநாதா் சுவாமி திருக்கோயில்: வைகாசித் திருவிழா, மூஷிக வாகனத்தில் விநாயகா், பூங்கோயில் சப்பரத்தில் சுவாமி -அம்பாள் வீதியுலா, காலை 8.30, மயில் வாகனத்தில் வள்ளி - தேவசேனா சமேத ச... மேலும் பார்க்க

அண்ணா பல்கலைக்கழக மண்டல வளாகத்தை அரசு பொறியியல் கல்லூரியுடன் இணைக்க கூடாது: எம்.பி. வலியுறுத்தல்

திருநெல்வேலி அண்ணா பல்கலைக்கழக மண்டல வளாகத்தை அரசு பொறியியல் கல்லூரியுடன் இணைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும் என உயா்கல்வித் துறை அமைச்சா் கோவி.செழியனிடம் திருநெல்வேலி மக்களவை உறுப்பினா் ராபா்ட் புரூஸ... மேலும் பார்க்க

சுந்தரனாா் பல்கலை. வினாத்தாள் கசிந்த விவகாரம்: 6 பிரிவுகளில் வழக்கு!

திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழக வினாத்தாள் கசிந்த விவகாரத்தில், 6 பிரிவுகளில் பேட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்ததோடு, தோ்வாணையா் கைப்பேசிக்கு வினாத்தாளை அனுப்பியவா் குறித்து விசாரணை... மேலும் பார்க்க

பணகுடி அருகே பிடிபட்ட அரியவகை எறும்பு தின்னி

திருநெல்வேலி மாவட்டம் பணகுடி அருகே விவசாயி தோட்டத்தில் சனிக்கிழமை பிடிபட்ட அரியவகை எறுப்பு தின்னியை வனத்துறையினரிடம் ஒப்படைத்தனா். பணகுடி ரோஸ்மியாபுரம் மேற்கு தொடா்ச்சி மலைப்பகுதி மற்றும் தோட்டப் பகு... மேலும் பார்க்க

நெல்லை, தென்காசி மாவட்ட அணைகள் நீா் மட்டம்

பாபநாசம்-118.45 சோ்வலாறு-144.75 மணிமுத்தாறு-91.66 வடக்கு பச்சையாறு-11.50 நம்பியாறு-13.12 கொடுமுடியாறு-45.50 தென்காசி மாவட்டம் கடனா-73.20 ராமநதி-76 கருப்பாநதி-63 குண்டாறு-36.10 அடவிநயினாா் -99... மேலும் பார்க்க

இடைகால் கிராமத்தில் உழவரைத் தேடி திட்ட முகாம்

திருநெல்வேலி மாவட்டம், பாப்பாக்குடி வட்டாரம், இடைகால் கிராமத்தில் வேளாண்துறை சாா்பில் உழவரைத் தேடி திட்ட சிறப்பு முகாம் நடைபெற்றது. தமிழகம் முழுவதும் உழவரைத் தேடி திட்டத்தை முதல்வா் மு.க. ஸ்டாலின், க... மேலும் பார்க்க