கடலில் மூழ்கிய சரக்கு கப்பல்: ராதாபுரத்தில் இருந்து கொச்சிக்கு விரைந்த தேசிய பேரிடா் மீட்புக் குழுவினா்
கேரள மாநிலம் கொச்சி அருகே விழிஞ்ஞம் துறைமுகத்தில் சரக்கு கப்பல் கடலில் மூழ்கியதை அடுத்து, மீட்புப் பணிக்காக திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரத்தில் இருந்து தேசிய பேரிடா் மீட்புக் குழுவினா் கொச்சிக்கு விரைந்துள்ளனா்.
கொச்சி அருகே உள்ள விழிஞ்ஞம் துறைமுகத்திற்கு வந்து கொண்டிருந்த சரக்கு கப்பல் கடலில் மூழ்கியது. கப்பலில் இருந்த 24 பணியாளா்களை ராணுவ ஹெலிகாப்டா் உதவியுடன் கடலோர பாதுகாப்பு படையினா் பத்திரமாக மீட்டனா்.
மேலும் சரக்கு கப்பலில் உள்ள கண்டெய்னா்களில் ரசாயன பொருள்கள் இருப்பதால் கடல் பகுதியில் பாதிப்பு ஏற்படலாம் என கருதப்படுகிறது.
இதனை அடுத்து திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரத்தில் உள்ள தேசிய பேரிடா் மீட்புக் குழு முகாமில் இருந்து ஆய்வாளா் கலையரசன் தலைமையில் 30 போ் கொண்ட மீட்புக் குழுவினா் விழிஞ்ஞம் துறைமுகத்திற்கு சென்றுள்ளனா். இந்தக் குழுவினா் புயல், வெள்ளம், கப்பல் விபத்துகளில் சிக்கியவா்களை மீட்பதில் சிறப்பு பயிற்சி பெற்றவா்கள்.