செய்திகள் :

கடலூர்: பள்ளி `ஷூ'வில் தஞ்சமடைந்த பாம்பு… கவனிக்காமல் அணிந்த 12 வயது சிறுவனுக்கு ஏற்பட்ட சோகம்!

post image

கடலூர் மாவட்டம் திட்டக்குடி தொழுதூரைச் சேர்ந்த கண்ணன் – ராதா தம்பதியினருக்கு இரண்டு மகன்கள். கண்ணன் வெளிநாட்டில் பணிபுரிந்து வரும் நிலையில், இளைய மகன் கௌசிக்குடன் தொழுதூரில் வசித்து வருகிறார் ராதா. கௌசிக் அதே பகுதியிலுள்ள ஒரு தனியார் பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வருகிறார். இன்று காலை வழக்கம்போல பள்ளிக்கு கிளம்பிய சிறுவன் கௌசிக், ஷூவை அணிந்திருக்கிறார்.

சிறுவன் கௌசிக் அணிந்த ஷூ

ஷூவுக்குள் கால் விட்ட அடுத்த விநாடியே காலை எடுத்த கௌசிக், வலியில் அலறித் துடித்திருக்கிறார். அவரது அலறலைக் கேட்டு ஓடி வந்த ராதாவிடம், ஷூவுக்குள் இருந்த ஏதோ தன்னை கடித்துவிட்டதாக கூறியிருக்கிறார் கௌசிக். அதனால் ஷூவை பார்த்தபோது அதற்குள் பாம்பு இருந்தது தெரியவர, அதிர்ந்து போயிருக்கிறார் ராதா.

அதற்குள் மயங்கி விழுந்த சிறுவன் கௌசிக்கை, அக்கம்பக்கத்தினரின் உதவியுடன் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். அங்கு அவசர சிகிச்சைப் பிரிவில் சிறுவன் கௌசிக்குக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சிறுவனின் வீடு

பாம்பு, தேள், பூரான் உள்ளிட்ட விஷப் பூச்சிகளுக்கு ஷூவின் அமைப்பு ஒரு பாதுகாப்பான கூட்டைப் போல தோன்றும். அதனால்தான் அவை எளிதில் அதற்குள் தஞ்சமடைந்து விடுகின்றன. அதை கவனிக்காமல் அணியும்போது அவை கடித்து விடுகின்றன.

அதனால் பள்ளி மாணவர்கள் ஷூ அணிவதற்கு முன்பு, பெற்றோர்கள் அதை கவனமாக ஆய்வு செய்ய வேண்டும். அதேபோல ஷூ அணியும் அனைவரும் இந்த விவகாரத்தில் கவனமாக இருக்க வேண்டும்.

ஆபரேஷன் சிந்தூரில் பணியாற்றிய ராணுவ வீரர்; உடல் நலக்குறைவால் உயிரிழப்பு... விருதுநகரில் சோகம்!

விருதுநகர் மாவட்டம், சாத்தூர் வெம்பக்கோட்டை அருகே முத்துசாமிபுரத்தைச் சேர்ந்த விவசாயி ராமசாமி, வீரஓவம்மாள் தம்பதியினர். இவர்களது மகன் சரண் (29) இந்திய ராணுவத்தில் 8 ஆண்டுகளாக பணிபுரிந்து வருகிறார். இவ... மேலும் பார்க்க

கடலூர்: அதிவேகம், பள்ளி பேருந்து தண்டவாளத்தில் கவிழ்ந்து விபத்து; படுகாயங்களுடன் தப்பித்த குழந்தைகள்

கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் இயங்கி வரும் ஃபாத்திமா மெட்ரிக்குலேஷன் பள்ளியில், அந்தப் பகுதியில் சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த மாணவர்கள் படித்து வருகின்றனர். வழக்கம்போல இன்று காலை அந்த மாணவர்களை வேனில... மேலும் பார்க்க

மும்பை: குண்டும் குழியுமான சாலையால் பலியான உயிர்; நடவடிக்கை எடுக்க முதல்வர் உத்தரவு; பின்னணி என்ன?

மும்பை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதியில் சமீபத்தில் தொடர்ச்சியாகப் பெய்த மழையால் சாலை முழுக்க குண்டும் குழியுமாக இருக்கிறது. இதனால் அடிக்கடி சாலை விபத்துக்கள் நடக்கின்றன. மும்பை அருகில் உள்ள பிவாண்... மேலும் பார்க்க

ராமநாதபுரம்: வேப்பமுத்து சேகரிக்கச் சென்ற சகோதரிகள்; இடி தாக்கியதால் உயிரிழந்த சோகம்; என்ன நடந்தது?

ராமநாதபுரம் மாவட்டம் சத்திரக்குடி அருகே உள்ள அரியக்குடி புத்தூர் பகுதியைச் சேர்ந்த தம்பதியினர் நூருல் அமீன்- கையர் நிஷா. இவர்களது மகள்களான செய்யது அஸ்மியாபானு மற்றும் சபிக்கா பானு ஆகிய இரண்டு பேரும் அ... மேலும் பார்க்க

TVK மதுரை மாநாடு: "குடும்பமே நிலைகுலைந்து போயிருக்கிறது" - மாநாட்டில் உயிரிழந்த ஊட்டி இளைஞர்

தமிழக வெற்றிக் கழகத்தின் 2வது மாநில மாநாடு மதுரையில் நேற்று நடைபெற்றது. பல்வேறு பகுதிகளிலிருந்தும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், விஜய் ரசிகர்கள் பங்கேற்றுள்ளனர். நீலகிரி மாவட்டத்திலிருந்தும் நூற்றுக்... மேலும் பார்க்க

விருதுநகர்: நோய், வறுமை, மன உளைச்சல்.. பேச முடியாத மகள்களுடன் ரயில் முன் விழுந்து உயிரை மாய்த்த தாய்

விருதுநகர் அருகே பட்டம்புதுாரில் ரயில்வே தண்டவாளத்தில் உடல்கள் கிடப்பதாக விருதுநகர் ரயில்வே போலீசாருக்குத் தகவல் கிடைத்தது. இதை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த ரயில்வே போலீசார் விசாரித்ததில் இறந்தது ... மேலும் பார்க்க