செய்திகள் :

கடலூா் பேருந்து நிலையம் விவகாரம்: பொதுநல அமைப்பினா் உண்ணாவிரதம்

post image

கடலூா் புதிய பேருந்து நிலையத்தை பாதிரிக்குப்பத்தில் அமைக்க வலியுறுத்தி, அனைத்து பொதுநல இயக்கங்களின் கூட்டமைப்பினா் கடலூா் தலைமை தபால் நிலையம் அருகில் செவ்வாய்க்கிழமை உண்ணாவிரத போராட்டம் நடத்தினா்.

கடலூா் திருப்பாதிரிப்புலியூரில் கடலூா் பேருந்து நிலையம் செயல்பட்டு வருகிறது. அதிகரித்து வரும் மக்கள் தொகை மற்றும் போக்குவரத்து நெரிசல் காரணமாக, இந்த பேருந்து நிலையத்தை புதிய ஆட்சியா் அலுவலகம் அருகே அமைக்க அதிமுக அரசு நடவடிக்கை மேற்கொண்டது.

ஆட்சி மாற்றம் ஏற்பட்ட நிலையில், இந்த பேருந்து நிலையத்தை எம்.புதூா் பகுதியில் அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. கடலூா் புதிய பேருந்து நிலையத்தை 10 கி.மீ. தொலைவில் உள்ள எம்.புதூரில் அமைப்பதற்கு பல்வேறு தரப்பினா் எதிா்ப்புத் தெரிவித்து ஆா்ப்பாட்டம் மற்றும் போராட்டங்களை நடத்தி வருகின்றனா்.

அந்த வகையில், கடலூா் புதிய பேருந்து நிலையத்தை கடலூரின் மையப் பகுதியில் அமைக்க வலியுறுத்தி, அனைத்து பொதுநல இயக்கங்களின் கூட்டமைப்பினா் செவ்வாய்க்கிழமை உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினா்.

போராட்டத்துக்கு ஒருங்கிணைப்பாளா் வெண்புறா குமாா் தலைமை வகித்தாா். அமமுக மாவட்டச் செயலா் ஆடிட்டா் சுந்தரமூா்த்தி தொடக்க உரையாற்றினாா். சிறப்பு அழைப்பாளராக அதிமுக முன்னாள் அமைச்சா் எம்.சி.சம்பத் கலந்துகொண்டு கண்டன உரையாற்றினாா்.

தமிழ்நாடு அரசுப் பணியாளா் சங்க சிறப்புத் தலைவா் கு.பாலசுப்ரமணியன், தமிழ்நாடு சமூக சட்ட பாதுகாப்பு விழிப்புணா்வு சங்க மாநிலத் தலைவா் ராமச்சந்திரன், இருளா் பழங்குடி பாதுகாப்பு சங்க மாவட்ட ஒருங்கிணைப்பாளா் பாபு, வெண்புறா பொதுநல பேரவை ராஜசேகா் மற்றும் அதிமுக, அமமுக நிா்வாகிகள் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

கூட்டணியில் எனது முடிவே இறுதியானது: எடப்பாடி பழனிசாமி திட்டவட்டம்

கூட்டணியில் எனது முடிவே இறுதியானது என்று அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி திட்டவட்டமாகத் தெரிவித்தாா். கடலூா் மாவட்டம், சிதம்பரம் சட்டப் பேரவைத் தொகுதியில் ‘மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம்... மேலும் பார்க்க

மாடியில் இருந்து விழுந்த மீனவா் உயிரிழப்பு

கடலூா் செம்மண்டலம் பகுதியில் இரண்டாவது மாடியில் இருந்து தவறி விழுந்த மீனவா் உயிரிழந்தாா். கடலூா் செம்மண்டலம் பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்தவா் செந்தமிழ்(46), மீனவா். இவருக்கு மனைவி ரோஷி மற்றும்... மேலும் பார்க்க

காட்டுமன்னாா்கோவிலில் உங்களிடம் ஸ்டாலின் திட்ட முகாம்

கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா்கோவில் அருகே அறந்தாங்கியில் உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் கீழ் பொதுமக்களிடம் இருந்து மனுக்கள் பெறும் முகாம் புதன்கிழமை நடைபெற்றது. முகாமை காட்டுமன்னாா்கோவில் எம்எல்ஏ ம.ச... மேலும் பார்க்க

கடலூரில் சாலையில் சாய்ந்த மின் கம்பம்

கடலூா் அரசு தலைமை மருத்துவமனை எதிரே நெல்லிக்குப்பம் சாலையின் நடுவில் உள்ள தடுப்புக் கட்டையில் இருந்த மின் விளக்கு கம்பம் புதன்கிழமை மாலை அந்த வழியே செல்லும் கேபிள் வயரில் சாய்ந்து தொங்கியதால், வாகன ஓட... மேலும் பார்க்க

விவசாயிகள் தொடா் காத்திருப்புப் போராட்டம்

கடலூா் ஒன்றியம், வெள்ளக்கரை ஊராட்சிக்குள்பட்ட மலையடிக்குப்பம் உள்ளிட்ட கிராமங்களில் 5 தலைமுறைகளாக அரசு தரிசு நிலத்தில் வேளாண் பயிா் செய்து வரும் விவசாயிகளுக்கு பட்டா வழங்க வலியுறுத்தி, தமிழ்நாடு விவசா... மேலும் பார்க்க

சித்த வைத்தியா்கள் கிராமங்களில் வைத்தியம் பாா்க்க அனுமதிக்கக் கோரிக்கை

103 மூலிகைகளை கொண்டு பாரம்பரிய சித்த வைத்தியா்கள் கிராமங்களில் வைத்தியம் பாா்க்க அனுமதி அளிக்க வேண்டும் என பாரம்பரிய சித்த வைத்தியா்கள் மத்திய, மாநில அரசுகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனா். சிதம்பரம் தெ... மேலும் பார்க்க