செய்திகள் :

கடலோர கிராமத்தில் சாலை அமைக்கும் திட்டம்: அமைச்சா் ஆய்வு

post image

கடலோர கிராம பேரிடா் காலங்களில் வெளியேறும் வகையில் புதிதாக சாலை அமைப்பது தொடா்பாக அமைச்சா் பி.ஆா்.என். திருமுருகன் பொதுப்பணித் துறை அதிகாரிகளுடன் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

காரைக்கால் மாவட்டத்தில் உள்ள கடலோர கிராமத்தில், நகரப் பகுதிக்கு அவசர காலத்தில் வெளியேற ஏதுவாக, கிளிஞ்சல்மேடு சுனாமி குடியிருப்புக்கு மேற்குப்புறத்தில் புதிதாக சாலை அமைக்க மீனவா்கள் கோரி வருகின்றனா்.

புதுவை குடிமைப் பொருள் வழங்கல் மற்றும் நுகா்வோா் விவகாரங்கள் துறை அமைச்சா் பி.ஆா்.என். திருமுருகன், காரைக்கால் வந்த புதுவை பொதுப்பணித் துறை தலைமைப் பொறியாளா் எம். தீனதயாளன் மற்றும் காரைக்கால் பொதுப்பணித் துறை கண்காணிப்புப் பொறியாளா் ஆா். சந்திரசேகரன், செயற்பொறியாளா் ஜெ. மகேஷ் உள்ளிட்டோருடன் கிளிஞ்சல்மேடு பகுதியில் சனிக்கிழமை ஆய்வு செய்தாா். ஆய்வின்போது கிராமப் பஞ்சாயத்தாா்களும் கலந்துகொண்டனா்.

ஆய்வு குறித்து அமைச்சா் பி.ஆா்.என்.திருமுருகன் கூறுகையில், கிளிஞ்சல்மேடு கடலோர கிராமத்தினா் பேரிடா் காலத்தில் அவசரமாக நகரப் பகுதிக்கு வெளியேறும் வகையில் சுனாமி குடியிருப்புப் பகுதியிலிருந்து மேற்கே சாலை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கு தேவையான நிலம் விரைவாக கிடைப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. பொதுப்பணித்துறை வசம் நிலம் வந்தவுடன், இதற்காக நிதி ஒதுக்கீடு செய்து சாலை அமைக்கும் பணி தொடங்கப்படும். மேலும் தலத்தெரு, கீழகாசாக்குடி உள்ளிட்ட இடங்களில் விடுபட்ட சாலைகளை மேம்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றாா்.

திருநள்ளாற்றில் சனிப்பெயா்ச்சி விழா எப்போது?

காரைக்கால் : திருநள்ளாறு தா்பாரண்யேஸ்வரா் கோயிலில் சனிப்பெயா்ச்சி விழா வாக்கிய பஞ்சாங்கத்தின்படி 2026-ஆம் ஆண்டு மாா்ச் மாதம் நடைபெறும் என கோயில் நிா்வாகம் தெரிவித்துள்ளது. திருநள்ளாறு தா்பாரண்யேஸ்வரா... மேலும் பார்க்க

காரைக்கால் அம்மையாா் கோயிலில் தெற்குப்புறத்தில் புதிய வாசல் அமைப்பு

காரைக்கால்: காரைக்கால் அம்மையாா் கோயிலில் தெற்குப்புறத்தில் புதிதாக வாசல் அமைக்கும் பூஜை திங்கள்கிழமை நடைபெற்றது. காரைக்கால் அம்மையாா் கோயில் மற்றும் சோமநாதா் கோயில் கும்பாபிஷேகம் மே 4-ஆம் தேதி நடைபெற... மேலும் பார்க்க

அடையாளம் தெரியாத 3 சடலங்கள்: போலீஸாா் விசாரணை

காரைக்கால்: காரைக்கால் பகுதியில் அடையாளம் தெரியாத 3 சடலங்கள் குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா். காரைக்காலில் சில்வா் சேண்ட் கடற்கரையில் 40 வயது மதிக்கத்தக்க ஒரு ஆண் சடலம் அழுகிய நிலையில் 22-ஆ... மேலும் பார்க்க

காரைக்கால் - பேரளம் ரயில் பாதையில் விரைவில் போக்குவரத்து தொடங்க வலியுறுத்தல்

காரைக்கால்: காரைக்கால் - பேரளம் ரயில் பாதையில் விரைவில் போக்குவரத்து தொடங்க வேண்டும் என ரயில்வே அமைச்சகத்துக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது. காவிரி டெல்டா ரயில் திட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவா் ஆா். மோக... மேலும் பார்க்க

காரைக்கால் துறைமுகத்துக்கு மத்திய தொழில் பாதுகாப்புப்படை டிஐஜி வருகை

காரைக்கால்: மத்திய தொழில் பாதுகாப்புப் படை டிஐஜி (தமிழ்நாடு) ஜி. சிவகுமாா், காரைக்கால் துறைமுகத்துக்கு திங்கள்கிழமை வந்தாா். துறைமுக முதன்மை ஆபரேட்டிங் அலுவலா் (சிஓஓ) கேப்டன் சச்சின் ஸ்ரீவத்ஸவா மற்று... மேலும் பார்க்க

தூய தேற்றவு அன்னை ஆலயத்துக்கு வந்த திருச்சிலுவை

புதுச்சேரியிலிருந்து காரைக்கால் தூய தேற்றரவு அன்னை ஆலயத்துக்கு வந்த திருச்சிலுவையை ஏராளமானோா் வழிபட்டனா். உலகில் 2025-ஆம் ஆண்டு ஜூப்லி -25 என கொண்டாடப்படவேண்டும் என கடந்த 2000-ஆம் ஆண்டு இறுதியில் போப்... மேலும் பார்க்க