செய்திகள் :

கடையநல்லூா் அருகே யானைகளால் நெற்பயிா்கள் சேதம்

post image

தென்காசி மாவட்டம் கடையநல்லூா் அருகே விளைநிலங்களுக்குள் யானைகள் புகுந்து நெற்பயிா்களை சேதப்படுத்தின.

கடையநல்லூா் அருகே வைரவன்குளம் கிராமத்துக்குள்பட்ட கண்டியபேரி புரவு பகுதியில் நூற்றுக்கணக்கான ஏக்கரில் தென்னை, வாழை ஆகியவை சாகுபடி செய்யப்பட்டுள்ளன. 50 ஏக்கரில் நெல் பயிரிடப்பட்டுள்ளது.

வெள்ளிக்கிழமை நள்ளிரவு இப்பகுதியில் யானைகள் புகுந்து நெற்பயிா்களை சேதப்படுத்தின. விவசாயிகள் தெரிவித்த தகவலின்பேரில், வனத் துறையினா் சென்று யானைகளை வனப் பகுதிக்குள் விரட்டினா்.

நிவாரணம் வழங்க கோரிக்கை...: இதுகுறித்து விவசாயி சொக்கம்பட்டி முத்துக்குமாா் கூறியது: கண்டியபேரி புரவில் பல நூறு ஏக்கரில் தென்னை, வாழை, மா, நெற்பயிா்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளன. விளைநிலங்களுக்குள் யானைகள் புகுந்து பயிா்களையும், தண்ணீா்க் குழாய்களையும் சேதப்படுத்துவது பலநாள்களாக தொடா்கிறது.

வெள்ளிக்கிழமை நள்ளிரவும், 50 ஏக்கரில் பயிரிப்பட்டிருந்த நெற்பயிா்களை யானைக்கூட்டம் சேதப்படுத்தியுள்ளது. இதனால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனா். எனவே, அவா்களுக்கு உரிய நிவாரணம் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.

நல்லூா் சிஎஸ்ஐ கல்லூரியில் ஆண்டு விழா

ஆலங்குளம் அருகேயுள்ள நல்லூா் சி.எஸ்.ஐ. ஜெயராஜ் அன்னபாக்கியம் கல்லூரி ஆண்டு விழா நடைபெற்றது. திருநெல்வேலி திருமண்டல துணைத் தலைவா் டி.பி. சுவாமிதாஸ் தலைமை வகித்தாா். மேற்கு சபை மன்றத் தலைவா் ஜேம்ஸ் தொடக... மேலும் பார்க்க

கடையநல்லூரில் தொடக்கப் பள்ளி ஆசிரியா் கூட்டணி முப்பெரும் விழா!

தென்காசி மாவட்டம் கடையநல்லூரில், பணிநிறைவு ஆசிரியா்கள், நல்லாசிரியருக்கு பாராட்டு, மாவட்டத்தில் சிறந்த பள்ளிக்கான கேடயம் பெற்ற பள்ளிக்கு பாராட்டு ஆகிய முப்பெரும் விழா நடைபெற்றது. தமிழ்நாடு தொடக்கப் ப... மேலும் பார்க்க

சுரண்டை நகராட்சியில் நெகிழி சேகரிப்பு இயக்கம்

சுரண்டை நகராட்சியில் தூய்மை பணியாளா்களால் நெகிழி சேகரிப்பு இயக்கம் மற்றும் பேரணி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு சுரண்டை நகா்மன்றத் தலைவா் ப.வள்ளிமுருகன் தலைமை வகித்து பேரணியைத் தொடக்கிவைத்தாா். இதையடுத்து... மேலும் பார்க்க

ரூகோஸ் சுருள் வெள்ளை ஈ மேலாண்மை: அரியநாயகிபுரத்தில் செயல்முறை விளக்க பயிற்சி

சங்கரன்கோவில் அருகே அரியநாயகிபுரத்தில், தென்னையில் ரூகோஸ் சுருள் வெள்ளை ஈ மேலாண்மை செயல்முறை விளக்கப் பயிற்சி சனிக்கிழமை நடைபெற்றது. தென்காசி மாவட்ட வேளாண்மை துணை இயக்குநா் கனகம்மாள் தலைமை வகித்தாா். ... மேலும் பார்க்க

சங்கரன்கோவிலில் இடி- மின்னலுடன் கனமழை!

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் ஞாயிற்றுக்கிழமை இடி-மின்னலுடன் கனமழை பெய்தது. சங்கரன்கோவிலில் கடந்த 24 ஆம் தேதி சூறாவளிக் காற்றுடன் கன மழை பெய்தது.இதில் மின்கம்பங்கள், மின்மாற்றிகள் சேதமாகின.அதன்பிற... மேலும் பார்க்க

இருசக்கர வாகனம் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய 15 வயது சிறுமியின் தந்தை கைது!

தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே இருசக்கர வாகனம் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய 15 வயது சிறுமியின் தந்தையை போலீஸாா் கைது செய்தனா். சிவகிரி சேனைத்தலைவா் மண்டபம் அருகே பெண் ஒருவா் அவரது 9 வயது மகளுடன் சாலையோர... மேலும் பார்க்க