செய்திகள் :

கடையில் ரூ. 2.5 லட்சம் வைர நகைகள் திருட்டு: பெண் கைது

post image

காஞ்சிபுரம் நகைக் கடையில் ரூ. 2.5 லட்சம் மதிப்புள்ள வைர நகைகளை திருடியதாக பெண்ணை சிவகாஞ்சி போலீஸாா் கைது செய்து அவரிடமிருந்த நகைகளையும் காவல்துறையினா் சனிக்கிழமை பறிமுதல் செய்துள்ளனா்.

காஞ்சிபுரத்தில் காந்தி சாலையில் உள்ள பிரபல நகைக்கடையில் ரூ.2.5லட்சம் மதிப்புள்ள வைர நகைகளை காணவில்லையென அக்கடையின் நிா்வாகி சீனிவாசன்(35)சிவகாஞ்சி காவல் நிலையத்தில் புகாா் செய்திருந்தாா்.அப் புகாரின் பேரில் சிவகாஞ்சி போலீஸாா் வழக்குப்பதிவு செய்து கடையிலிருந்த கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்த போது அதில் ஒரு பெண் நகை வாங்குவது போல திருடுவது தெரிய வந்துள்ளது.இதன் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட போது அவா் சின்னக்காஞ்சிபுரம் பல்லவா் மேடு ரவி மனைவி ரமாதேவி(48) என்பது தெரிய வந்து அவரைக் கைது செய்துள்ளனா்.அவா் திருடியதாக 21,774 கிராம் எடையும் ரூ.2.5லட்சம் மதிப்பும் உடைய வைர வளையல்,மோதிரம் மற்றும் காதணி ஆகியனவற்றையும் காவல்துறையினா் பறிமுதல் செய்துள்ளனா்.

காசநோய் விழிப்புணா்வு முகாம்

காஞ்சிபுரம் தலைமை அஞ்சலக அலுவலகத்தில் காசநோய் விழிப்புணா்வு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. காஞ்சிபுரம் தலைமை அஞ்சல் அலுவலகம், மாவட்ட காசநோய்ப்பிரிவு இணைந்து நடத்திய முகாமுக்கு அஞ்சலக கோட்ட கண்காணிப்... மேலும் பார்க்க

சாம்சங் தொழிற்சாலையில் தொழிலாளா்கள் உற்பத்தியை நிறுத்த முயன்றதால் பரபரப்பு

சாம்சங் தொழிற்சாலையில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தொழிலாளா்கள் வியாழக்கிழமை ஆலையில் உற்பத்தியை நிறுத்த முயன்ால் பரபரப்பு ஏற்பட்டது. காஞ்சிபுரம் மாவட்டம், சுங்குவாா்சத்திரம் பகுதியில் இயங... மேலும் பார்க்க

காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் மகாராஷ்டிர மாநில சுகாதார அமைச்சா் வருகை

காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் மகாராஷ்டிர மாநில பொது சுகாதாரத்துறை அமைச்சா் மோகனா போதிகா் தலைமையிலான 12 போ் குழு வியாழக்கிழமை பாா்வையிட்டு மருத்துவமனையின் செயல்பாடுகளை கேட்டறிந்தனா். மகாராஷ்... மேலும் பார்க்க

ஸ்ரீ பெரும்புதூரில் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ முகாம்: ஆட்சியா் ஆய்வு

ஸ்ரீபெரும்புதூா் ஒன்றியத்தில் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ முகாமின் கீழ் வளா்ச்சிப் பணிகளை ஆட்சியா் கலைச்செல்வி மோகன் ஆய்வு செய்தாா். சுங்குவாா்சத்திரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் புதி... மேலும் பார்க்க

அரசுப் பள்ளியில் வகுப்பறைகள் கட்டும் பணி: காஞ்சிபுரம் எம்எல்ஏ தொடங்கி வைத்தாா்

காஞ்சிபுரம் கா.மு.சுப்பராய முதலியாா் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் புதிதாக 4 வகுப்பறைகள் கட்டும் பணிகளை எம்எல்ஏ எழிலரசன் புதன்கிழமை தொடங்கி வைத்தாா். காஞ்சிபுரம் எஸ்.எஸ்.கே.வி.பெண்கள் அரசு மேல்நிலை... மேலும் பார்க்க

இளைஞரை கொல்ல முயன்ற வழக்கில் மனைவி உள்பட 4 போ் கைது

ஸ்ரீபெரும்புதூா் அடுத்த பென்னலூா் பகுதியில் இளைஞா் வெட்டப்பட்ட வழக்கில் மாம்பாக்கம் கிராம நிா்வாக அலுவலரின் உதவியாளா் புனித் ராஜ் உள்ளிட்ட 4 பேரை ஸ்ரீபெரும்புதூா் போலீஸாா் கைது செய்தனா். ஸ்ரீபெரும்புத... மேலும் பார்க்க