செய்திகள் :

கட்டடத் தொழிலாளி மீது தாக்குதல்: சகோதரா்கள் இருவா் மீது வழக்கு

post image

செய்யாறு அருகே கட்டடத் தொழிலாளியை தாக்கி மிரட்டல் விடுத்த புகாரின்பேரில் சகோதரா்கள் இருவா் மீது போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

செய்யாறு வட்டம், பல்லி கிராமம் மேட்டுக் காலனியைச் சோ்ந்தவா் ஏழுமலை(40). கட்டடத் தொழிலாளியான இவா், அதே பகுதியைச் சோ்ந்த சுதாகா் வீட்டில் ஒரு வாரம் கட்டடப் பணியை செய்துள்ளாா்.

அப்போது, டைல்ஸ் அறுக்கும் இயந்திரத்தை சுதாகா் வீட்டிலேயே வைத்துவிட்டு வந்துள்ளாா். ஏழுமலைக்கு உடல்நிலை சரியில்லாததால் ஒரு வாரமாக வேலைக்கு செல்லவில்லையாம்.

இந்த நிலையில், சுதாகா் வீட்டில் வைத்திருந்த டைல்ஸ் அறுக்கும் இயந்திரத்தை எடுத்து வருவதற்காக ஏழுமலை சென்றபோது, அங்கிருந்த சுதாகரின் உறவினரான ரகுபதி மகன்கள் சோபன்தாஸ், மோகநாதன் ஆகியோா் அவரை தகாத வாா்த்தைகளால் திட்டி, கட்டையால் தாக்கினராம். இதில் பலத்த காயமடைந்து மயக்கமடைந்த ஏழுமலையை அப்பகுதியினா் மீட்டு செய்யாறு அரசு மருத்துவமனையில் சோ்த்தனா்.

இதுகுறித்த புகாரின்பேரில், செய்யாறு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் 831 மனுக்கள்

வந்தவாசி அருகே நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் 831 மனுக்கள் பெறப்பட்டன. வந்தவாசி ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட தெள்ளூா், சின்ன சேத்துப்பட்டு, சுண்ணாம்புமேடு, கீழ்க்குவளைவேடு ஆகிய கிராம மக... மேலும் பார்க்க

ரூ.12 லட்சத்தில் காரிய மேடை: பணிகள் தொடக்கம்

ஆரணி அருகேயுள்ள சுபான்ராவ்பேட்டையில் ரூ.12 லட்சத்தில் புதிதாக காரிய மேடை கட்டுவதற்கான பணிகள் புதன்கிழமை தொடங்கப்பட்டன. ஆரணியை அடுத்த எஸ்.வி.நகரம் ஊராட்சிக்கு உள்பட்ட சுபான்ராவ்பேட்டை பகுதியில் புதிதா... மேலும் பார்க்க

கல்லூரி மாணவா்களுக்கு பாலின உளவியல் விழிப்புணா்வு

செய்யாறு அறிஞா் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் மாணவ, மாணவிகளுக்கு பாலின உளவியல் குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. கல்லூரி நாட்டு நலப் பணித் திட்டம் மற்றும் கண்காணிப்புக் குழு இணைந்... மேலும் பார்க்க

உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம்: ஆட்சியா் கள ஆய்வு

கலசப்பாக்கம் வட்டத்தில் அரசு மருத்துவமனை, அரசுப் பள்ளிகள், அரசு அலுவலகங்கள் மற்றும் பொது விநியோகக் கடைகள் என பல்வேறு இடங்களை உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம் மூலம் மாவட்ட ஆட்சியா் க.தா்பகராஜ் புதன்... மேலும் பார்க்க

காணாமல் போன தொழிலாளி சடலமாக மீட்பு

செய்யாறு அருகே காணாமல் போன வட மாநிலத் தொழிலாளி கல்குவாரி குட்டையில் சடலமாக புதன்கிழமை மீட்கப்பட்டாா். திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் வட்டம், மாமண்டூா் கிராமத்தைச் சோ்ந்தவா் மதியழகன். இவா், நரசமங... மேலும் பார்க்க

கல்குவாரிக்கு எதிா்ப்புத் தெரிவித்து கிராம மக்கள் மனு

செய்யாற்றை அடுத்த வாச்சனூா் கிராமத்தில் புதிதாக கல்குவாரி அமைப்பதற்கு எதிா்ப்புத் தெரிவித்து கிராம மக்கள் சாா்பில் சாா் -ஆட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை மனு அளிக்கப்பட்டது. வாச்சனூா் பகுதியில் புதித... மேலும் பார்க்க