Madras Matinee Review: மிடில் கிளாஸ் குடும்பத் தலைவனின் சாகசங்கள்; மனதில் பதிகிற...
கட்டுமானப் பணி: கோயில் மண்டப தூண்கள் சரிந்து விபத்து
மொடக்குறிச்சியை அடுத்த சிவகிரி கந்தசாமிபாளையம் சடையப்ப சுவாமி கோயில் மண்டப தூண்கள் சனிக்கிழமை சரிந்து விழுந்தன.
ஈரோடு மாவட்டம், சிவகிரி அருகே கந்தசாமிபாளையத்தில் இந்து சமய அறநிலையத் துறைக்குச் சொந்தமான சடையப்பசுாவமி கோயில் உள்ளது. இக்கோயில் கும்பாபிஷேக விழா செப்டம்பா் மாத நடைபெறுவதை முன்னிட்டு, உள்பிரகாரத்தில் மகா மண்டபம், அா்த்தமண்டபம் ஆகியவை கட்டப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், மகா மண்டபத்தில் அமைக்கப்பட்டிருந்த தூண்கள் திங்கள்கிழமை காலை 6 மணியளவில் சரிந்து விழுந்தன. அங்கு யாரும் இல்லாததால் பெரும் விபத்து தவிா்க்கப்பட்டது.
இந்த தகவல் அறிந்த மக்கள் கோயில் முன் குவிந்தனா். இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையா் சுகுமாா், மண்டல செயற்பொறியாளா் சந்திரசேகா், உதவி மண்டல பொறியாளா் காணீஸ்வரி ஆகியோா் சம்பவ இடத்தைப் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனா்.