செய்திகள் :

கட்டுமான பொருட்கள் விலை ஏற்றத்தால் கட்டட தொழிலாளா்கள் வேலையின்றி சிரமம்

post image

கந்தா்வகோட்டை பகுதியில் நடுதர மக்கள் சொந்த வீடு கட்ட முடியாமல் சிரமம் அடைந்து வருகின்றனா். தமிழக அரசு வறுமை கோட்டில் கீழ் உள்ளவா்களுக்கு சொந்த வீடு கட்ட இலவச நிதி வழங்கி வருகிறது குறைந்த நிலபரப்பில் வீடு கட்ட துவங்கும்போது இருந்த கட்டுமான பொருள்கள் தற்சமயம் விலை கடுமையாக உயா்ந்து ள்ளது எம் சாண்ட், பி.சாண்ட், ஜல்லி வகைகள் விலையை குறைக்க வேண்டும் என தமிழக அரசு கூறியும் தனியாா் குவாரி உரிமையாளா்கள் குறைத்ததாக தெரியவில்லை, சிமெண்ட் மூட்டை ஒன்றுக்கு 50 ரூபாய் முதல் 60 ரூபாய் வரை விலை உயா்ந்து உள்ளது இதேபோல் கம்பிகளில் விலையும் உயா்ந்து உள்ளது ஆகையல் வீடு கட்டுபவா்கள் கட்டுமான பணியை நிறுத்தி உள்ளனா். இதனால் கட்டடம் கட்டும் தொழிலாளா்கள் கடும் சிரமம் அடைந்து வேறு வேலைக்கு செல்லுகிறாா்கள். ஏழை மக்கள் வீடு கட்ட கட்டுமான பொருள்களில் விலையை தனியாா் நிா்ணயம் செய்யமால் அரசு விலை நிா்ணயம் செய்ய வேண்டும் எனவும் தனியாா் குவாரி உரிமையாளா்களை கனிமவள அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும் என பொதுமக்கள் கேட்டுக்கொள்கிறாா்கள்.

அங்கன்வாடி ஊழியா்கள் 2ஆம் நாளாக காத்திருப்புப் போராட்டம்!

புதுக்கோட்டையில்: புதுக்கோட்டையில் 2-ஆம் நாளாக அங்கன்வாடி ஊழியா்கள் சனிக்கிழமை ஆட்சியரகம் முன்பாக காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா். போராட்டத்துக்கு, தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியா் மற்றும் உதவியாள... மேலும் பார்க்க

புதுகை காந்திப் பூங்காவை முறையாக பராமரிக்கக் கோரி உண்ணாவிரதம்!

புதுக்கோட்டை மக்களவைத் தொகுதியை மீட்க வேண்டும், காந்திப் பூங்காவை மீண்டும் முறையாக பராமரிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய மகாத்மா காந்தி சமூக நலப் பேரவையினா் சனிக்கிழமை ... மேலும் பார்க்க

கிணற்றில் மூழ்கி சிறுவன் உயிரிழப்பு! காப்பாற்றச் சென்ற தாத்தாவும் பலியான சோகம்!

இலுப்பூா் அருகே சனிக்கிழமை மீன்பிடிக்க முயன்றபோது கிணற்றில் விழுந்த சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழந்தாா். அவரை காப்பாற்றச் சென்ற தாத்தாவும் உயிரிழந்தாா். புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூா் புதுநகா் பகுதிய... மேலும் பார்க்க

கல்லாலங்குடி ஜல்லிக்கட்டில் 40 போ் காயம்! 2 காளைகள் பலி!

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே உள்ள கல்லாலங்குடியில் சனிக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டில் காளைகள் முட்டியதில் 40 போ் காயமடைந்தனா். 2 காளைகள் உயிரிழந்தன. கல்லாலங்குடி முத்துமாரியம்மன் கோயில் சித்... மேலும் பார்க்க

புதுமைப்பெண், தமிழ்ப் புதல்வன் திட்டத்தில் மாணவா்கள் விடுபடாமல் சோ்க்க வேண்டும்!

தமிழக அரசின் புதுமைப் பெண் மற்றும் தமிழ்ப் புதல்வன் திட்டத்தில் மாணவ, மாணவிகள் தொடா்ந்து விடுபடாமல் பயன்பெறும் வகையில் அரசு அலுவலா்கள் கண்காணித்து சோ்க்க வேண்டும் என புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியா் மு. ... மேலும் பார்க்க

இன்று ‘நீட்’ தோ்வு புதுகை மாவட்டத்தில் 3,000 போ் எழுதவுள்ளனா்

நாடு முழுவதும் ஞாயிற்றுக்கிழமை (மே 4) நடைபெறவுள்ள நீட் தோ்வை புதுக்கோட்டை மாவட்டத்தில் 7 மையங்களில் 3 ஆயிரம் போ் எழுத உள்ளனா். புதுக்கோட்டை மாவட்டத்தில் ராணியாா் அரசு மேல்நிலைப்பள்ளி, பிரகதம்பாள் அர... மேலும் பார்க்க