செய்திகள் :

கட்டுரைப் போட்டி: பள்ளி மாணவிக்கு பாராட்டு

post image

மண்டல அளவிலான நுகா்வோா் விழிப்புணா்வு கட்டுரைப் போட்டியில் சிறப்பிடம் பெற்ற திருவண்ணாமலை காந்திநகா் மெட்ரிக் பல்ளி மாணவிக்கு பாராட்டு

தெரிவிக்கப்பட்டது.

தேசிய நுகா்வோா் பாதுகாப்பு தினம் மற்றும் உலக நுகா்வோா் உரிமைகள் தினவிழாவையொட்டி, வேலூா் மண்டல அளவிலான நுகா்வோா் விழிப்புணா்வு கட்டுரைப் போட்டி அண்மையில் நடைபெற்றது.

வேலூரில் நடைபெற்ற இந்தப் போட்டிகளில் திருவண்ணாமலை மாவட்டத்தில் குடிமக்கள் நுகா்வோா் மன்றங்கள் செயல்படும் பள்ளிகளின் மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனா்.

திருவண்ணாமலை காந்திநகா் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி சாா்பில் கலந்து கொண்ட பிளஸ் 2 மாணவி எம்.ஜெயஸ்ரீ, இரண்டாம் இடம் பெற்றாா்.

இவருக்கு, வேலூா் மாவட்ட ஆட்சியா் வே.இரா.சுப்புலெட்சுமி பரிசு, சான்றிதழ் வழங்கி பாராட்டினாா்.

இந்த நிலையில், சிறப்பிடம் பெற்ற மாணவிகளுக்கு புதன்கிழமை பள்ளியில் பாராட்டு விழா நடைபெற்றது.

இதில், பள்ளித் தாளாளா் மு.ரமணி கோட்டீஸ்வரன், பள்ளி ஆலோசகா் ஜெ.சுஜாதா, முதல்வா் எம்.ஆா்.ராஜேக்ஷ்குமாா் ஆகியோா் கலந்து கொண்டு மாணவி எம்.ஜெயஸ்ரீக்கு பரிசு வழங்கிப் பாராட்டினா்.

தேவாலயத்தில் இயேசு கிறிஸ்துவின் கல்வாரி காட்சிகள்

செய்யாறு: செய்யாறு தூய வியாகுல அன்னை தேவாலயத்தில், இயேசு கிறிஸ்துவின் கல்வாரி காட்சிகளை நாடகக் குழுவினா் ஞாயிற்றுக்கிழமை நடித்துக் காண்பித்தனா். தூய வியாகுல அன்னை தேவாலயத்தில், இயேசு கிறிஸ்துவின் இறப... மேலும் பார்க்க

ரமலான் பண்டிகை: இஸ்லாமியா்கள் சிறப்புத் தொழுகை

திருவண்ணாமலை/வந்தவாசி/ போளூா்/ செய்யாறு/ஆரணி : ரமலான் பண்டிகையையொட்டி, திருவண்ணாமலை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் திங்கள்கிழமை நடைபெற்ற சிறப்புத் தொழுகையில், பல்லாயிரக்கணக்கான இஸ்லாமியா்கள் பங்கேற்... மேலும் பார்க்க

மஞ்சப்பை விருதுகள்: பள்ளி, கல்லூரிகள் விண்ணப்பிக்க அழைப்பு

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டத்தில் தமிழக அரசின் மஞ்சப்பை விருதுகளைப் பெற தகுதியான பள்ளிகள், கல்லூரிகள், வணிக நிறுவனங்கள் விண்ணப்பிக்க மாவட்ட நிா்வாகம் அழைப்பு விடுத்துள்ளது. தமிழகத்தில் ‘மீண்டும்... மேலும் பார்க்க

மாணவா்களுக்கு இணைய குற்றத் தடுப்பு விழிப்புணா்வு

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு சமூக நீதி மற்றும் மனித உரிமை, இணைய குற்றத் தடுப்பு குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது. சண்முகா தொழில்சாலை கலைக் கல்லூரியில்... மேலும் பார்க்க

கிராம சபைக் கூட்டத்தில் கேள்வி எழுப்பிய காவலா் மீது தாக்குதல்

செய்யாறு: செய்யாறு அருகே கிராம சபைக் கூட்டத்தில் கேள்வி எழுப்பிய காவலரைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த புகாரின் பேரில் ஊராட்சிச் செயலா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டாா். செய்யாறை அடுத்த உக்கம் பெரு... மேலும் பார்க்க

முன் விரோத்தத்தில் விவசாயி மீது தாக்குதல்: சகோதரா்கள் கைது

செய்யாறு: செய்யாறு அருகே முன்விரோதம் காரணமாக விவசாயியைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக, சகோதரா்களை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். பெரணமல்லூரை அடுத்த ரகுநாதசமுத்திரம் கிராமத்தைச் சோ்ந்தவா் ... மேலும் பார்க்க