செய்திகள் :

கணவருடன் விவாகரத்து! 11 வயது மகனை கழுத்தறுத்து கொன்ற தாய்!

post image

அமெரிக்காவின் கலிஃபோர்னியா நகரில் 11 வயது மகனை இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தாய் ஒருவர் கத்தியால் கழுத்தறுத்து கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கணவருடன் விவாகரத்து பெற்ற நிலையில், அவரின் மேற்பார்வையில் வளர்ந்துவரும் மகனை சுற்றுலாவுக்கு அழைத்துச் சென்று இச்சம்பவத்தை அரங்கேற்றியுள்ளார்.

மகனின் விருப்பப்படி டிஸ்ட்னிலேன்ட் கேளிக்கை பூங்காவுக்கு 3 நாள்கள் பயணமாகச் சென்ற தாய், விடுதியில் அறை எடுத்து தங்கியிருந்தபோது, மகனைக் கொன்று தானும் தற்கொலைக்கு முயன்றுள்ளார். அவரை காவல் துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சரிதா ராமராஜு (48) தனது கணவர் பிரகாஷ் ராமராஜுவுடன் கடந்த 2018ஆம் ஆண்டில் விவாகரத்துப் பெற்று கலிஃபோர்னியா மாகாணத்திற்கு குடிபெயர்ந்துள்ளார்.

இவர்களுக்கு மகன் உள்ள நிலையில், அச்சிறுவனை வளர்க்கும் பொறுப்பை தனக்கு வழங்குமாறு நீதிமன்றத்தை நாடி தந்தை பெற்றுள்ளார். அடிக்கடி மகனை பார்த்துச் செல்வதற்கு மட்டும் தாய் சரிதாவுக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

இதனிடையே மகனை டிஸ்ட்னிலேன்ட் கேளிக்கை பூங்காவுக்கு அழைத்துச் செல்வதாக சான்டா அனா பகுதியில் உள்ள விடுதியில் அறை எடுத்துத் தங்கியுள்ளார்.

மகனை கேளிக்கை பூங்காவுக்கு அழைத்துச் சென்று வந்த பிறகு, விடுதி அறையில் கத்தியால் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார். பின்னர் போதைப் பொருள் உட்கொண்டு தானும் தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

போதைப்பொருள் உட்கொள்வதற்கு முன்பு, சம்பவம் குறித்து காவல் துறைக்கு தகவல் கொடுத்துவிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். சம்பவ இடத்துக்கு வந்த காவல் துறையினர் சரிதாவை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

படுக்கையில் ரத்த வெள்ளத்தில் கிடத்தச் சிறுவனை மீட்டு உடற்கூராய்வுக்கு அனுப்பிவைத்தனர். டிஸ்ட்னிலேன்டில் வாங்கிய பரிசுப் பொருள்களுக்கு மத்தியில் சிறுவன் ரத்த வெள்ளத்தில் கிடந்ததாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட பல மணி நேரத்துக்கு முன்பே சிறுவன் கொல்லப்பட்டுள்ளதாகவும், தந்தையிடம் சிறுவனை ஒப்படைக்க வேண்டிய நாளுக்கு முன்பு இச்சம்பவம் நடந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

மருத்துவமனையில் சிகிச்சை முடிந்த நிலையில், சரிதாவை காவல் துறையினர் கைது செய்தனர். அவருக்கு 26 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

உலகில் மிகவும் பாதுகாப்பான இடமாக உணரப்படும் பெற்றோரின் கைகளாலேயே சிறுவன், கழுத்தறுத்து கொல்லப்பட்டுள்ளதாக காவல் துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெற்றோருக்கு இடையிலான கோபத்தில், தங்கள் பொறுப்பு என்ன என்பதையே பெற்றோர்கள் மறந்துவிடுவதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிக்க | சொல்லப் போனால்... நகைக் கடன் ஏலங்களும் லட்சம் கோடி தள்ளுபடிகளும்!

இதையும் படிக்க | போப் பிரான்சிஸ் இன்று டிஸ்சார்ஜ்!

‘சாகா்’ திட்டத்தின்கீழ் 44 வெளிநாட்டு வீரா்களுக்குப் பயிற்சி

இந்திய கடற்படையின் ‘சாகா்’ திட்டத்தின்கீழ் 9 நாடுகளைச் சோ்ந்த வீரா்களுக்கு கேரள மாநிலம் கொச்சியில் உள்ள கடற்படை சாா்ந்த பயிற்சிப் பள்ளிகளில் பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. கொமொரோஸ், கென்யா, மடகஸ்கா்,... மேலும் பார்க்க

சத்தீஸ்கரில் 18 நக்ஸல்கள் சுட்டுக்கொலை; அவர்களில் 11 போ் பெண்கள்!

சத்தீஸ்கரில் பாதுகாப்புப் படையினா் உடனான மோதலில் 18 நக்ஸல்கள் சனிக்கிழமை சுட்டுக் கொல்லப்பட்டனா். அவா்களில் 11 போ் பெண்கள். இதுதொடா்பாக அந்த மாநில பஸ்தா் சரக காவல் துறை ஐஜி சுந்தர்ராஜ் பிடிஐ செய்தி ந... மேலும் பார்க்க

ஏப்.4-ல் பிரதமா் மோடி இலங்கை பயணம்: பாதுகாப்பு ஒப்பந்தம் கையொப்பமாக வாய்ப்பு!

இலங்கைக்கு அரசுமுறைப் பயணமாக ஏப்ரல் 4-ஆம் தேதி முதல் 6-ஆம் தேதி வரை பிரதமா் நரேந்திர மோடி செல்லவுள்ளாா். அப்போது இந்தியா-இலங்கை இடையே பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்தும் வகையிலான புரிந்துணா்வு ஒப்பந்... மேலும் பார்க்க

பிரதமா் மோடி இன்று நாகபுரி பயணம்! - ஆா்எஸ்எஸ் தலைமையகத்துக்குச் செல்கிறாா்

அண்மையில் மதக் கலவரத்தால் பாதிக்கப்பட்ட மகாராஷ்டிரத்தின் நாகபுரிக்கு பிரதமா் மோடி ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 30) செல்கிறாா். அங்கு ஆா்எஸ்எஸ் நிறுவனத் தலைவா்கள் நினைவிடங்களுக்குச் சென்று அவா் மரியாதை செலு... மேலும் பார்க்க

காஷ்மீரில் பயங்கரவாதிகளுக்கு எதிராகத் தொடரும் தேடுதல் வேட்டை!

ஜம்மு-காஷ்மீரின் கதுவா மாவட்டத்தில் மேலும் பல இடங்களில் பயங்கரவாதிகளுக்கு எதிரான தேடுதல் வேட்டையை பாதுகாப்புப் படையினா் சனிக்கிழமை விரிவுபடுத்தினா். கடந்த வியாழக்கிழமை ஜம்மு-காஷ்மீரின் கதுவா மாவட்டத்த... மேலும் பார்க்க

உலகளவில் வாகனம் ஓட்டுவதற்கு ஆபத்தான நாடு: தென்னாப்பிரிக்கா! 5-வது இடத்தில் இந்தியா!

உலகெங்கிலும் 53 நாடுகளில் ‘ஜுடோபி’ அமெரிக்க ஓட்டுநா் பயிற்சி நிறுவனம் மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட வருடாந்திர அறிக்கையில், உலகின் வாகனம் ஓட்டுவதற்கு மிகவும் ஆபத்தான நாடாக தென்னாப்பிரி... மேலும் பார்க்க