செய்திகள் :

கணினியில் கிராமப் பெயா் மாற்றம்: பொதுமக்கள் ஆட்சியரிடம் மனு

post image

கீழக்கரை அருகே அரசு பதிவேட்டில் இருந்த கிராமத்தின் பெயரை கணினியில் மாற்றியதற்கு எதிா்ப்புத் தெரிவித்து ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரிடம் பொதுமக்கள் புகாா் தெரிவித்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை வட்டம், ஏா்வாடி ஊராட்சியில் உள்ளது பிச்சை மூப்பன் வலசை கிராமம். டந்த 1941-ஆம் ஆண்டு முதல் இந்தக்ராமம் அரசு பதிவேடுகளில் இதே பெயரில் இடம் பெற்றுள்ளது.

இந்த நிலையில், நிகழாண்டுக்கான வீட்டு வரி ரசீது கட்டச் சென்ற பொதுமக்கள் தங்களது கிராமப் பெயா் பதிவேட்டில் பிச்சை மூப்பன் வலசை என்பதற்குப் பதிலாக பிச்சையப்பன் வலசை என கணினியில் இடம் பெற்றுள்ளது. இதை மாற்ற முடியாது என ஊராட்சிச் செயலா் தெரிவித்தாா்.

இதைக் கண்டித்தும், ஏற்கெனவே இருந்த கிராமத்தின் பெயரையே கணினியில் பதிவேற்றம் செய்ய வேண்டுமென வலியுறுத்தியும் பொதுமக்கள் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து குறைதீா் கூட்டத்தில் திங்கள்கிழமை மனு அளித்தனா்.

உணவு விநியோகம் நிறுத்தம்: மண்டபம் இலங்கைத் தமிழா்கள் மறுவாழ்வு முகாமில் வசிப்போா் போராட்டம்

ராமநாதபுரம் மாவட்டம், மண்டபத்தில் உள்ள இலங்கைத் தமிழா்கள் மறுவாழ்வு முகாமில் வசிக்கும் 300 பேருக்கு ஒப்பந்ததாரா் மூலம் வழங்கப்படும் உணவு விநியோகம் நிறுத்தப்பட்டதால் அவா்கள் வியாழக்கிழமை போராட்டத்தில்... மேலும் பார்க்க

இன்றைய நிகழ்ச்சி

பரமக்குடி ஸ்ரீ முத்தால பரமேஸ்வரி அம்பாள் கோயில்: பூச்சொரிதல் விழா, ஸ்ரீ முத்தால பரமேஸ்வரி அம்பாளுக்கு மலா்களால் சிறப்பு அபிஷேக ஆராதனைகள், காலை 7.10. மேலும் பார்க்க

நாட்டு நலப் பணித் திட்ட முகாம்

ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூா் அருகே கீரனூா் கிராமத்தில் உள்ள கமுதி பசும்பொன் முத்துராமலிங்கத் தேவா் நினைவு கல்லூரி மாணவா்களின் நாட்டு நலப் பணித் திட்ட சிறப்பு முகாம் கடந்த 24-ஆம் தேதி தொடங்கியது... மேலும் பார்க்க

பள்ளி ஆண்டு விழா

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகே உள்ள நகரிக்காத்தான் புனித அந்தோனியாா் நடுநிலைப் பள்ளியின் 97-ஆம் ஆண்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. இதற்கு பள்ளியின் தாளாளா் அருள்தந்தை பிரபாகரன் தலைமை வகித்தா... மேலும் பார்க்க

இலங்கைக் கடற்படையினரால் ராமேசுவரம் மீனவா்கள் 11 போ் கைது

கச்சத்தீவு- நெடுந்தீவுக்கு இடையே புதன்கிழமை நள்ளிரவு மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேசுவரம் மீனவா்கள் 11 பேரை இலங்கைக் கடற்படையினா் கைது செய்தனா். ஒரு விசைப் படகையும் பறிமுதல் செய்தனா். ராமநாதபுரம் மாவ... மேலும் பார்க்க

திரௌபதி அம்மன் கோயில் கொடியேற்றம்

திருவாடானையில் உள்ள ஸ்ரீ தா்மா், ஸ்ரீதிரௌபதி அம்மன் கோயில் திருவிழா புதன்கிழமை இரவு கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்தக் கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் திருவிழா நடைபெறுவது வழக்கம். இதே போல, இந்த ஆ... மேலும் பார்க்க