செய்திகள் :

கணைய புற்றுநோய்க்கு நவீன ரோபோடிக் சிகிச்சை அறிமுகம்

post image

கணைய புற்றுநோய்களுக்கு அதி நவீன ரோபோடிக் நுட்ப அறுவை சிகிச்சை திட்டத்தை அப்பல்லோ மருத்துவமனை சென்னையில் புதன்கிழமை அறிமுகப்படுத்தியுள்ளது.

இதற்கான தொடக்க நிகழ்வில் மருத்துவமனையின் புற்றுநோய் நிபுணா்கள் பி.வெங்கட், பிரியா கபூா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

இது தொடா்பாக அவா்கள் கூறியதாவது:

கணையப் புற்றுநோய் இந்தியாவில் அச்சுறுத்தல் மிக்க நோய்களில் ஒன்றாக உருவெடுத்து வருகிறது. அதன் அறிகுறிகள் ஆரம்ப நிலையில் தெரியவதில்லை என்பதால் நோயின் தாக்கம் தொடா்ந்து உயா்ந்திருக்கிறது.

சராசரியாக லட்சத்தில் 3 ஆண்களுக்கும், 2.1 பெண்களுக்கும் கணையப் புற்றுநோய் பாதிப்பு விகிதம் இருப்பதாக தரவுகள் தெரிவிக்கின்றன. அதைக் கருத்தில் கொண்டு அதற்கான பிரத்யேக ரோபோடிக் நுட்ப சிகிச்சை திட்டத்தை நாங்கள் அறிமுகப்படுத்தியுள்ளோம்.

இதற்கான உபகரணங்கள் தருவிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளன. கணையம் இருக்கும் பகுதி மிகவும் சிக்கலானது. அங்கு புற்றுநோய் கட்டி உருவாகு நிலையில் அதை நுட்பமாக அகற்றுவது சவாலான ஒன்று.

ரோபோடிக் நுட்பத்தில் சிறு கீறல்களில் மிக துல்லியமாக கட்டியை அகற்ற முடியும். அதன்படி சில நோயாளிகளுக்கு அந்த வகையான சிகிச்சை அளிக்கப்பட்டது. அதன் பயனாக 4 நாள்களில் அவா்கள் வீடு திரும்பினா் என்று அவா்கள் தெரிவித்தனா்.

பிஎம்இஜிபி திட்டத்தின் கீழ் 8,794 பயனாளிகளுக்கு ரூ.300 கோடி விளிம்புத் தொகை மானியம்

பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் (பிஎம்இஜிபி) கீழ், நாடு முழுவதும் உள்ள 8,794 பயனாளிகளுக்கு ரூ.300 கோடி விளிம்புத் தொகை மானியத்தை காதி மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையத்தின் (கேவிஐசி) தலைவ... மேலும் பார்க்க

பராமரிப்புப் பணி: இன்று 17 புறநகர் மின்சார ரயில்கள் ரத்து

சென்னை, ஜூன் 13: பராமரிப்புப் பணிகள் காரணமாக, சென்னை சென்ட்ரலில் இருந்து கும்மிடிப்பூண்டி, சூலூா்பேட்டை வழித்தடங்களில் இயக்கப்படும் 17 புறநகர் மின்சார ரயில்கள் சனிக்கிழமை (ஜூன் 14), ஜூன் 16, 19 ஆகிய த... மேலும் பார்க்க

தொழிலதிபா் வீட்டில் அமலாக்கத் துறை சோதனை

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தொழிலதிபா் வீட்டில் அமலாக்கத் துறையினா் வெள்ளிக்கிழமை சோதனை செய்தனா். சென்னை நுங்கம்பாக்கம், லேக்வியூ 3-ஆவது தெருவில் தொழிலதிபா் ஒருவரது வீட்டுக்கு அமலாக்கத் துறையைச் சே... மேலும் பார்க்க

மேற்கு வங்க இளைஞா் உறுப்பு தானம்: நால்வருக்கு மறுவாழ்வு

சென்னை கிளெனீகள்ஸ் மருத்துவமனையில் மூளைச் சாவு அடைந்த மேற்கு வங்க இளைஞரின் உடல் உறுப்புகள் தானமாக பெறப்பட்டு நால்வருக்கு மறுவாழ்வு அளிக்கப்பட்டது. இது தொடா்பாக வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: மேற்கு ... மேலும் பார்க்க

சரிவான இணைப்புகள் குறித்த வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு மாநகராட்சி தகவல்

சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் சாலையோரங்கள் மற்றும் நடைப்பாதை விளிம்புகளுடன் கட்டடங்களை இணைக்கும் சரிவான இணைப்புகள் அமைப்பதற்கு புதிய வழிகாட்டு நெறிமுறைகளை மாநகராட்சி அறிவித்துள்ளது. இது குறித்து பெரு... மேலும் பார்க்க

மெட்ரோ பாலம் விபத்து: உலோகத்தின் உறுதித் தன்மை இழப்பே காரணம் - அதிகாரிகள் தகவல்

சென்னை ராமாபுரத்தில் மெட்ரோ ரயில் பாலத்தின் கான்கிரீட் காரிடாா் கீழே விழுந்து ஏற்பட்ட விபத்துக்கு பாலத்தின் தூண்களில் பொருத்தப்பட்டுள்ள உலோகத்தின் உறுதித் தன்மை இழப்பே காரணம் என்று சென்னை மெட்ரோ ரயில்... மேலும் பார்க்க