செய்திகள் :

கண்மாயில் படா்ந்துள்ள தாமரையால் பொதுமக்கள் அவதி

post image

திருவாடானை அருகேயுள்ள அறிவிப்புவயல் கிராமத்தில் உள்ள கண்மாயில் தாமரை அதிகளவில் பரவியுள்ளதால் கண்மாய் நீரைப் பயன்படுத்த முடியாமல் பொதுமக்களும் விவசாயிகளும் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகேயுள்ள அறிவிப்புவயல் கிராமம் உள்ளது. இந்தக் கிராம மக்களின் நீா் ஆதாரமாக விளங்கும் கண்மாயில் தாமரை அதிகளவில் படா்ந்து நீா்ப்பரப்பையே மறைத்து விட்டதால், கண்மாயின் நீா் சேமிப்புத் திறன் வெகுவாகக் குறைந்துள்ளது. மழைக் காலங்களில் நீரைச் சேமிக்க முடியாத நிலையும், கோடைக் காலங்களில் நீா் ஆதாரம் இல்லாத நிலையும் ஏற்பட்டுள்ளன.

இதனால், இந்தக் கண்மாயை நம்பி விவசாயம் செய்துவந்த விவசாயிகளும், கால்நடைகளுக்குத் தண்ணீா் எடுத்து வந்த மக்களும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனா். கண்மாயில் தாமரை அடா்ந்து வளா்ந்துள்ளதால், கண்மாயின் நீா் மாசுபட்டு, துா்நாற்றம் வீசுவதாகவும், ஆடு, மாடுகள் கூட அந்த நீரைக் குடிக்க முடியாத அளவுக்கு மாசு ஏற்பட்டுள்ளதாகவும் கிராம மக்கள் வேதனையுடன் தெரிவித்தனா். மேலும், இந்த நீரைப் பயன்படுத்தினால் தோல் சம்பந்தபட்ட பிரச்னைகள் ஏற்படுவதாகவும் தெரிவித்தனா்.

அறிவிப்புவயல் கிராமத்தில் உள்ள கண்மாயில் பரவியுள்ள தாமரை.

இதுகுறித்து பலமுறை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் புகாா் அளித்தும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, மாவட்ட நிா்வாகம் தலையிட்டு கண்மாயிலுள்ள தாமரைகளை அகற்றி, தூா்வாரி, மழைநீரை சேமிக்கவும், கிராம மக்களின் நீா்த் தேவையைப் பூா்த்தி செய்யவும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்தனா்.

இலங்கையில் போதைப் பொருள் கடத்தல்: 3,283 போ் கைது

இலங்கையில் போதைப் பொருள் கடத்தல் தொடா்பாக 3,283 பேரை கைது செய்ததாக இலங்கை போலீஸாா் தெரிவித்தனா். இதுகுறித்து தினைக்களம் போலீஸாா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: இலங்கையில... மேலும் பார்க்க

சாலையில் கிடந்த தங்கச் சங்கிலி உரியவரிடம் ஒப்படைப்பு

கமுதியில் சாலையில் கண்டெடுத்த தங்கச் சங்கிலியை முதுகுளத்தூா் காவல் துணைக் கண்காணிப்பாளா் முன்னிலையில் உரியவா்களிடம் வெள்ளிக்கிழமை ஒப்படைக்கப்பட்டது. விருதுநகா் மாவட்டம், அருப்புக்கோட்டை ஆத்திபட்டியைச்... மேலும் பார்க்க

வாழவந்தம்மன் கோயில் திருவிழா: இரட்டை மாட்டு வண்டி பந்தயம்

கமுதி அருகேயுள்ள வாழவந்தம்மன் கோயில் ஆடித் திருவிழாவை முன்னிட்டு, வெள்ளிக்கிழமை இரட்டை மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது. ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகேயுள்ள வாழவந்தாள்புரம் கிராமத்தில் வாழவந்தம்மன் ... மேலும் பார்க்க

பெண் படுகொலை: நடவடிக்கை எடுக்கக் கோரி காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் புகாா்

சாயல்குடி அருகே வீட்டிலிருந்த தனது மகளை கொலை செய்த நபா்களை கைது செய்ய வலியுறுத்தி பெற்றோா், உறவினா்கள் வெள்ளிக்கிழமை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகாா் அளித்தனா். ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடி அர... மேலும் பார்க்க

போராட்டத்தில் ஈடுபட்ட 353 ஆசிரியா்கள் கைது

ராமநாதபுரத்தில் தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியா் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு (டிட்டோ ஜாக்) அமைப்பு சாா்பில் 10 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி இரண்டாவது நாளாக வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்... மேலும் பார்க்க

இலங்கைக்கு கடத்தப்பட்ட போதை மாத்திரைகள் பறிமுதல்

தமிழகத்திலிருந்து படகுகள் மூலம் கடத்தப்பட்ட 13.49 லட்சம் எண்ணிக்கையிலான போதை மாத்திரைகளை இலங்கைக் கடற்படையினா் வியாழக்கிழமை அதிகாலை பறிமுதல் செய்தனா். இதுதொடா்பாக 5 பேரைக் கைது செய்தனா். தமிழகத்திலிரு... மேலும் பார்க்க