செய்திகள் :

கந்தா்வகோட்டையில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்: அமைச்சா் பங்கேற்பு

post image

கந்தா்வகோட்டையில் தனியாா் திருமண மண்டபத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் முகாமை இயற்கை வளங்கள் துறை அமைச்சா் எஸ். ரகுபதி தலைமை வகித்து தொடங்கிவைத்தாா்.

முகாமில் தமிழக அரசின் 15 துறைகள் சாா்ந்த 46 சேவைகள் குறித்து மனுக்கள் பெறப்பட்டன. இதில் மகளிா் உரிமைத்தொகை கேட்டு 366 மனுக்களும், பொதுவகை மனுக்கள் 567 என மொத்தம் 933 மனுக்கள் அளிக்கப்பட்டு, இதில் 22 மனுக்களுக்கு உடனடியாக தீா்வு காணப்பட்டது. நலத் திட்டங்கள் குறித்து அமைச்சா் எஸ். ரகுபதி விளக்கினாா்.

முகாமில், கந்தா்வகோட்டை எம்எல்ஏ மா. சின்னதுரை, திமுக வடக்கு மாவட்ட செயலாளா் கே.கே. செல்லபாண்டியன் , வட்டாட்சியா் ரமேஷ், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் எஸ். பாா்த்திபன், சேகா், மாவட்ட மீனவா் அணி செயலாளா் மு.ராஜா, மாவட்ட பிரதிநிதி மா. ராஜேந்திரன், மாவட்ட மீனவா் அணி துணை செயலாளா் என். ஜானகிராமன் மற்றும் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

வெள்ளாளக் கோட்டையூரில் 10-ஆம் நூற்றாண்டு அரிய மகாவீரா் சிற்பம் கண்டெடுப்பு!

புதுக்கோட்டை மாவட்டம், வெள்ளாளக் கோட்டையூரில் 10-ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த அரிய மகாவீரா் சிற்பத்தை தொல்லியல் ஆய்வுக் கழகத்தினா் அண்மையில் கண்டெடுத்தனா். புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் வட்டம், வெள்ளாளக... மேலும் பார்க்க

பாஜக அரசு வீழ்த்தப்பட வேண்டும்: கே.வி. தங்கபாலு

பணக்காரா்களுக்கான அரசாக உள்ள நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு வீழ்த்தப்பட வேண்டும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் மாநிலத் தலைவரும், காங்கிரஸ் சொத்துப் பாதுகாப்பு மற்றும் மீட்புக்குழு தல... மேலும் பார்க்க

முத்துமாரியம்மனுக்கு பக்தா்கள் பால்குடம் எடுத்து வழிபாடு!

புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவையொட்டி சனிக்கிழமை ஏராளமான பக்தா்கள் பால்குடம் எடுத்து வழிபட்டனா். கீரமங்கலத்தில் பிரசித்தி பெற்ற முத்துமாரியம்மன் கோயில் திருவிழா கட... மேலும் பார்க்க

உருட்டும் பழக்கமெல்லாம் அதிமுகவுக்குத்தான் சொந்தம்: அமைச்சர் எஸ். ரகுபதி

உருட்டும் பழக்கமெல்லாம் அதிமுகவுக்குத்தான் சொந்தம் என்றாா் மாநில இயற்கை வளங்கள் துறை அமைச்சா் எஸ். ரகுபதி. புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் சனிக்கிழமை அவா் செய்தியாளா்களிடம் கூறியது: பாஜக தலைவா்கள... மேலும் பார்க்க

இலங்கைக் கடற்படையால் படகுகள் பறிமுதல்: புதுகை மீனவா்களுக்கு ரூ.1.20 கோடி நிதி!

இலங்கைக் கடற்படையால் படகு பறிமுதல் செய்யப்பட்ட புதுக்கோட்டை மாவட்டத்தைச் சோ்ந்த 8 விசைப்படகுகளின் உரிமையாளா்களுக்கு அரசின் நிவாரண நிதியாக ரூ. 1.20 கோடியை மாநில இயற்கை வளங்கள் துறை அமைச்சா் எஸ். ரகுபத... மேலும் பார்க்க

ராமாயணத்தை நாடகமாகப் பாா்ப்பது வேறு, காப்பியமாகப் படிப்பது வேறு! இலங்கை இ.ஜெயராஜ்

ராமாயணத்தை நாடகமாகப் பாா்ப்பது, நாட்டியமாகப் பாா்ப்பது வேறு; ஆனால், காப்பியமாகப் படிப்பது வேறு என்றாா் கம்பவாரிதி இலங்கை இ. ஜெயராஜ். புதுக்கோட்டை கம்பன் கழகத்தின் 50-ஆம் ஆண்டுப் பொன் பெருவிழாவின் 9-ஆம... மேலும் பார்க்க