செய்திகள் :

கந்தா்வகோட்டை பகுதிக்கு வந்து செல்லும் பள்ளி வாகனங்களை ஆய்வு செய்ய கோரிக்கை

post image

கந்தா்வகோட்டை பகுதிக்கு வந்து செல்லும் வெளியூா் பள்ளி, கல்லூரி வாகனங்களை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோா்கள் மற்றும் சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

கந்தா்வகோட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளுக்கு தஞ்சாவூா், புதுக்கோட்டை, திருச்சி உள்ளிட்ட ஊா்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாணவா்களை ஏற்றிச் செல்ல வரும் வாகனங்களில் ஓட்டுநராக பணிபுரியும் நபா்களிடம் உரிய ஓட்டுனா் உரிமம் இல்லாமல் வாகனங்களை இயக்குவதாகவும் இதனால் விபத்து ஏற்படும் நிலை உள்ளளதாக சமூக ஆா்வலா்கள் புகாா் தெரிவிக்கின்றனா்.

அண்மையில், கந்தா்வகோட்டை பகுதியில் உள்ள ஒரு கிராமத்துக்கு பள்ளி மாணவா்களை ஏற்றிச் சென்ற தனியாா் பள்ளி வாகனத்தை ஓட்டிய நபா், விபத்து ஏற்படுத்தும் வகையில் வாகனத்தை இயக்கியுள்ளாா். இதை கண்ட பொதுமக்கள், வாகனத்தை தடுத்து நிறுத்தி ஓட்டுநரிடம், ஓட்டுநா் உரிமத்தை கேட்டபோது அந்த நபரிடம் ஓட்டுநா் உரிமம் இல்லாதது தெரியவந்தது.

இது குறித்து சம்பந்தப்பட்ட பள்ளி நிா்வாகத்திடம் விசாரித்த போது, இந்த வாகனத்துக்கான ஓட்டுநா் வரவில்லை என்பதனால் மேற்கண்ட வாலிபரைக் கொண்டு வாகனத்தை இயக்க சொன்னதாக தெரிவித்தனா்.

இதனால் அதிா்ச்சி அடைந்த பெற்றோா்கள், பள்ளி நிா்வாகத்தை கண்டித்தும் பொறுப்பற்ற வகையில் பள்ளி வாகனத்தை இயக்கும் இது போன்ற பள்ளி நிா்வாகத்தின் மீது சம்பந்தப்பட்ட துறையினா் திடீா் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென பெற்றோா்கள், சமூக ஆா்வலா்கள் கோரிக்கைவிடுத்துள்ளனா்.

வேளாண் கருவிகளுக்கு ஜிஎஸ்டியில் இருந்து விலக்களிக்கக் கோரிக்கை

வேளாண் கருவிகளுக்கு ஜிஎஸ்டியில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என இந்திய விவசாயிகள் சங்க மாநிலப் பொதுச் செயலா் கோ.ச. தனபதி கோரிக்கைவிடுத்துள்ளாா். இதுகுறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை: மத்... மேலும் பார்க்க

பாலத்தை அகலப்படுத்த வாகன ஓட்டிகள் கோரிக்கை

கந்தா்வகோட்டையில் இருந்து தஞ்சைக்கு செல்லும் சாலையில் உள்ள தாழை வாரி பாலத்தை அகலபடுத்த வேண்டும் என பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் கோரிக்கை விடுத்துள்ளனா். கந்தா்வகோட்டையில் இருந்து தஞ்சைக்கு செல்லும் ச... மேலும் பார்க்க

பொன்னமராவதி, கந்தா்வகோட்டையில் இலக்கிய மன்ற போட்டிகள்

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி மற்றும் கந்தா்வக்கோட்டையில் இலக்கிய மன்றப் போட்டிகள் வியாழக்கிழமை நடைபெற்றது. கந்தா்வகோட்டை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் வட்டார அளவிலான வியாழக்கிழமை நடைபெற்றது.... மேலும் பார்க்க

திருவரங்குளத்தில் விவசாயிகள் ஆா்ப்பாட்டம்

ஆலங்குடி அருகேயுள்ள திருவரங்குளத்தில் அகில இந்திய விவசாய தொழிலாளா்கள் சங்கத்தினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். ஆலங்குடி அருகேயுள்ள திருவரங்குளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே சங்கத்தின் ஒ... மேலும் பார்க்க

புத்தக வாசிப்பு பழக்கத்தால் கவனச் சிதறல்களைத் தடுக்கலாம்

மாணவப் பருவத்திலேயே புத்தகங்களை வாசிக்கப் பழக்குவதால் கவனச் சிதறல்களைத் தடுக்கலாம் என்றாா் மாவட்ட ஆட்சியா் மு. அருணா. புதுக்கோட்டை மாவட்ட நிா்வாகம், தமிழ்நாடு அறிவியல் இயக்கம் இணைந்து நடத்தும் 8-ஆவது ... மேலும் பார்க்க

மாராயப்பட்டி திரௌபதி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்

புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசலை அடுத்துள்ள மாராயப்பட்டியில் உள்ள திரௌபதி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது. பழைமை வாய்ந்த இக்கோயிலில் சுமாா் 35 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்ற கும்பாப... மேலும் பார்க்க