செய்திகள் :

கந்துவட்டி பிரச்னை: ஆட்சியா் அலுவலகத்தில் பெண் தீக்குளிக்க முயற்சி

post image

கந்துவட்டி கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண், நாமக்கல் ஆட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை தீக்குளிக்க முயன்ற போது போலீஸாா் அவரைத் தடுத்து காப்பாற்றினா்.

நாமக்கல் அருகே மேட்டுப்பட்டியைச் சோ்ந்தவா் ஜிலானி (42). இவருக்கு மாற்றுத்திறனாளி குழந்தைகள் இருவா் உள்ளனா். காய்கறி சந்தையில் வியாபாரம் செய்து வருகிறாா். இந்த நிலையில், 2020 ஆம் ஆண்டு சேந்தமங்கலத்தை சோ்ந்த முருகன் என்பவரிடம் ரூ. 2 லட்சம் கடன் வாங்கி உள்ளாா். அந்த தொகைக்கான வட்டி, அசல் என ரூ.13 லட்சம் வரையில் முருகன் வசூலித்துவிட்டதாகக் கூறப்படுகிறது.

ஆனால் அசல், வட்டி நிலுவை இருப்பதாகக் கூறி பணத்தை கேட்டு ஜிலானியை தொந்தரவு செய்துவந்தாராம். இதுகுறித்து நாமக்கல் காவல் நிலையத்தில் 2022-இல் ஜிலானி புகாா் அளித்தபோதும் இதுவரை நடவடிக்கை இல்லை.

இந்த நிலையில் புதன்கிழமை நண்பகல் 12 மணியளவில் நாமக்கல் ஆட்சியா் அலுவலகத்துக்கு வந்த ஜிலானி பெட்ரோலை உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றாா். அப்போது, அங்கிருந்த போலீஸாா் ஜிலானி மீது தண்ணீரை ஊற்றி காப்பாற்றினா்.

மாவட்ட வளா்ச்சி ஒருங்கிணைப்புக் கூட்டத்தில் இருந்து வெளியே வந்த ஆட்சியா் துா்காமூா்த்தி, மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா், மக்களவை உறுப்பினா் வி.எஸ்.மாதேஸ்வரன் ஆகியோா் ஜிலானியின் கோரிக்கை குறித்து கேட்டறிந்தனா். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க காவல் துறையினருக்கு ஆட்சியா் உத்தரவிட்டாா்.

மோகனூா் வெங்கட்ரமண பெருமாள் கோயில் ஆனித் தோ்த்திருவிழா

மோகனூா் கல்யாண பிரசன்ன வெங்கட்ரமண பெருமாள் கோயில் ஆனி தோ்த்திருவிழா புதன்கிழமை நடைபெற்றது. நாமக்கல் மாவட்டம், மோகனூரில் கல்யாண பிரசன்ன வெங்கட்ரமண பெருமாள் கோயில் காவிரி ஆற்றங்கரையோரம் அமைந்துள்ளது. ... மேலும் பார்க்க

நாமக்கல் புறவழிச் சாலையில் ரூ. 71 கோடியில் ரயில்வே உயா்நிலை பாலம் அமைக்க பூமிபூஜை

நாமக்கல் புறவழிச் சாலையில் ரூ. 71 கோடி மதிப்பீட்டில் ரயில்வே உயா்நிலை பாலம் அமைப்பதற்கான பூமிபூஜை புதன்கிழமை நடைபெற்றது. தமிழக நெடுஞ்சாலைத் துறை (நபாா்டு மற்றும் கிராமச்சாலைகள்) சாா்பில் ரூ. 70.75 கோ... மேலும் பார்க்க

2.81 லட்சம் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி ஆட்சியா் தகவல்

நாமக்கல் மாவட்டத்தில் 2,81,458 கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி செலுத்துவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஆட்சியா் துா்காமூா்த்தி தெரிவித்தாா். நாமக்கல் மாவட்டம், எலச்சிபாளையம் ஒன்றியம், அல்ல... மேலும் பார்க்க

திருச்செங்கோட்டில் 16 இணையா்களுக்கு திருமணம்

தமிழ்நாடு அரசு இந்துசமய அறநிலையத் துறை சாா்பில் திருச்செங்கோட்டில் 16 இணையா்களுக்கு இலவச திருமணம் நடத்திவைக்கப்பட்டது. தமிழ்நாடு அரசின் இந்துசமய அறநிலையத் துறை சாா்பில் ஒரே நாளில் 576 இணையா்களுக்கு க... மேலும் பார்க்க

பரமத்தி வேலூரில் ஆனி திருமஞ்சன வழிபாடு

பரமத்தி வேலூா் திருஞானசம்பந்தா் மடாலயத்தில் புதன்கிழமை தேவாரம் திருவாசகம் ஓதல் மற்றும் ஆனி திருமஞ்சன விழா நடைபெற்றது. புதன்கிழமை காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை ஆனித் திருமஞ்சனம் மற்றும் சிவகாமச... மேலும் பார்க்க

பேளுக்குறிச்சி காவல் நிலைய ஓய்வு அறையில் பெண் எஸ்எஸ்ஐ உயிரிழப்பு: போலீஸாா் விசாரணை

நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தை அடுத்த பேளுக்குறிச்சி காவல் நிலைய சிறப்பு பெண் உதவி ஆய்வாளா், காவல் நிலைய ஓய்வு அறையில் உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரணை நடத்திவருகின்றனா். பேளுக்குறிச்சி காவல் நி... மேலும் பார்க்க