செய்திகள் :

'கனடாவில் வெளிநாட்டு மாணவர்களுக்கு கெடுபிடி; கொள்கை மாற்றத்தில் அரசாங்கம்!' - காரணம் என்ன?

post image

வெளிநாட்டில் படிக்க ஆசைப்படும் இந்திய மாணவர்களின் சாய்ஸ்களில் ஒன்று, 'கனடா'.

ஆனால், கனடாவில் எடுக்கப்படும் கொள்கை மாற்றங்களால், 'இது இனி தொடருமா?' என்கிற சந்தேகம் எழுகிறது.

ஏன்... என்ன ஆனது?

மேலே கூறியிருப்பதுப்போல, இந்திய மாணவர்கள் அதிகம் படிக்கும் வெளிநாடுகளில் ஒன்று, 'கனடா'. 2023-ம் ஆண்டு, வெளிநாட்டினர் அதிகளவில் கனடாவில் குடியேறுவதை தடுக்க, கடும் சட்ட திட்டங்கள் கொண்டுவரப்பட்டது. காரணம், அதிகம் குடியேறும் வெளிநாட்டினரால், கனடாவில் வீட்டு வாடகை, போக்குவரத்து போன்றவற்றிற்கு கட்டணம் உயர்ந்துகொண்டே போகிறது. இதனால், கனடா நாட்டு மக்கள் பெரியளவில் பாதிக்கப்படுகிறார்கள்.

கனடா
கனடா

2023, 2024!

தற்போது வெளிநாட்டினர் கனடாவில் குடியேறுவது கொஞ்சம் கொஞ்சமாக குறைக்கப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக, வெளிநாட்டு மாணவர்களுக்கு கடும் கெடுபிடிகள் விதிக்கப்படுகின்றன. அதன்படி கனடாவில் குடியேறும் வெளிநாட்டு மாணவர்களின் எண்ணிக்கை படிப்படியாக குறைக்கப்பட்டு வருகிறது.

2023, 2024 ஆண்டுகளில் முறையே 6,81,155 வெளிநாட்டு மாணவர்கள், 5,16,245 வெளிநாட்டு மாணவர்கள் கனடாவில் அனுமதிக்கப்பட்டனர்.

2023-ம் ஆண்டு அனுமதிக்கப்பட்ட 6,81,155 வெளிநாட்டு மாணவர்களில் 2,78,045 பேர் இந்திய மாணவர்கள். 2024-ம் ஆண்டு அனுமதிக்கப்பட்ட 5,16,245 வெளிநாட்டு மாணவர்களில் 1,88,465 பேர் இந்திய மாணவர்கள்.

இந்த இரண்டு ஆண்டு தரவுகளிலேயே வெளிநாட்டு மாணவர்களின் அனுமதி எவ்வளவு குறைக்கப்பட்டுள்ளது என்று நன்கு தெரிகிறது.

31 சதவிகிதத்திற்கு குறைந்த...

கடந்த ஆண்டு முதல் பாதியில், 44,295 இந்திய மாணவர்களுக்கு கனடாவில் அனுமதி வழங்கப்பட்டது. ஆனால், இந்த ஆண்டின் அதே காலக்கட்டத்தில் 30,640 இந்திய மாணவர்களுக்கு மட்டுமே அனுமதி கிடைத்துள்ளது. இது கிட்டதட்ட 31 சதவிகிதம் குறைவு ஆகும். இந்தத் தரவுகளை கனடாவின் குடிவரவு, அகதிகள் மற்றும் குடியுரிமை (IRCC) அமைச்சகம் வழங்கியுள்ளது.

என்னென்ன கெடுபிடிகள்?

இனி கனடா கல்லூரி, பல்கலைக்கழகங்களில் சேருவது அவ்வளவு எளிதல்ல.

கனடாவில் படிக்க விரும்பும் மாணவர்கள், அதற்கு தேவையான 20,635 கனடா டாலர்களை (கிட்டதட்ட ரூ.12.7 லட்சத்தை) கட்டாயம் வைத்திருக்க வேண்டும். அதற்கான ஆவணங்களை அரசாங்கத்திடம் சமர்ப்பிக்க வேண்டும்.

மார்க் கார்னி | Mark Carney
மார்க் கார்னி | Mark Carney

கனடா கல்வி நிறுவனங்கள் அங்கே படிக்க வரும் மாணவர்களின் ஒப்புதல் கடிதத்தை கனடாவின் குடிவரவு, அகதிகள் மற்றும் குடியுரிமை மூலம் சரிப்பார்க்க வேண்டும்.

கனடாவில் படிக்க விண்ணப்பிக்கும் மாணவர்களின் விண்ணப்பம் ஏற்கனவே இருந்ததை விட, இப்போது மிகவும் கண்டிப்பான முறையில் பரிசீலிக்கப்படும்.

மார்க் கார்னி என்ன சொல்கிறார்?

கனட பிரதமர் மார்க் கார்னிவை பொறுத்தவரை, 2028-ம் ஆண்டிற்குள் கனடாவின் மொத்த மக்கள் தொகையில் வெறும் 5 சதவிகிதம் மட்டுமே வெளிநாட்டு மாணவர்கள் மற்றும் பணியாளர்கள் இருப்பதுப்போல ஆக்க வேண்டும் என்று திட்டமிட்டுள்ளாராம்.

4 ஆண்டுகால ஸ்டாலின் ஆட்சியும்... இந்து சமய அறநிலையத்துறையின் செயல்பாடுகளும்!

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சிப் பொறுப்பேற்றபோது, திருக்கோயில் பணிகளை முறையாகவும், சிறப்பாகவும் நடத்திட வேண்டுமெனக் கருதியர்களில் ஒருவராகத் திகழும் பி.கே.சேகர்பாபுவை, அறநிலையத்துறை அமைச்சரா... மேலும் பார்க்க

Shadow Fleet: புதினின் ரகசிய கடல் நகர்வுகள்; ரஷ்யாவின் 'நிழற் கடற்படை' என்பது என்ன?!

ஐரோப்பிய ஒன்றியமும் பிரிட்டனும் 'ரஷ்யாவின் நிழற் கடற்படை' யைச் சுட்டிக்காட்டி தடைகளை விதித்துள்ளன. மேற்குலக நாடுகள், உக்ரைன் மீதான ஆக்கிரமிப்பைக் கட்டுப்படுத்த ரஷ்யாவின் மீது பொருளாதார தடைகளை விதித்து... மேலும் பார்க்க

'அரக்கோணம் சம்பவம் ஒரு வெட்கக்கேடு; பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை!' - தவெக அறிக்கை!

'அரக்கோண சம்பவம் - தவெக கண்டனம்!'அரக்கோணத்தில் திமுக-வின் இளைஞரணியை சேர்ந்த தெய்வச்செயல் என்பவர் மீது பெண் ஒருவர் அளித்திருக்கும் பாலியர் புகார் பரபரப்பைக் கிளப்பியிருக்கிறது. இந்நிலையில் அந்த சம்பவத்... மேலும் பார்க்க

`அபராதம் செலுத்தும் தவறுக்கு ஸ்டேஷனுக்கு அழைத்துச் செல்வதா?'- சவுக்கு சங்கர் காட்டம்... விவரம் என்ன?

'புகாரளித்த சவுக்கு சங்கர்!'சென்னை தலைமைச் செயலகத்தில் உள்துறை சார்புச் செயலாளரை சந்தித்து, தன்னுடைய ஊடக அலுவலகத்தை சேர்ந்த ஊழியர்களை காவல்துறையினர் அழைத்துச் சென்ற விவகாரம் தொடர்பாக பத்திரிகையாளர் சவ... மேலும் பார்க்க

Trump: ட்ரம்ப்பால் சரிந்த Apple பங்குகள் - என்ன பின்னணி?

ஆப்பிள் (Apple) நிறுவனம் தனது ஐபோன் உற்பத்தியை இந்தியாவில் மேலும் அதிகரிக்கும் வேளையில் ஈடுபட்டு வருகிறது.2024 ஏப்ரல் முதல் 2025 மார்ச் வரையில் 22 மில்லியன் டாலர் மதிப்பிலான ஐபோன்கள் இந்தியாவில் தயாரி... மேலும் பார்க்க

சாகோஸ் தீவுகளை மீண்டும் பெற்ற மொரீஷியஸ்; பிரிட்டன் வைத்த 'ராணுவ நிபந்தனை' என்ன?

அறுபது ஆண்டுகள் கழித்து சாகோஸ் தீவுகளின் இறையாண்மையை மொரீஷியஸிடம் ஒப்படைத்துள்ளது இங்கிலாந்து அரசு. நீதிமன்றம் அளித்த தீர்ப்பின்படி, நீண்ட நாள்கள் சர்ச்சைக்குரியதாக இருந்துவந்த ஒப்பந்தத்தை நிறைவேற்றிய... மேலும் பார்க்க