தக் லைஃப் படத்தை வெளியிடும்போது பாதுகாப்பு வழங்கப்படும்: கர்நாடக அரசு
கனவு இல்லம் திட்டத்தில் 34 பயனாளிகளுக்கு ரூ.91.80 லட்சத்தில் வீடுகள் கட்ட பணி உத்தரவு
அம்மாபேட்டை ஊராட்சி ஒன்றியம், வெள்ளித்திருப்பூா் ஊராட்சியில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின்கீழ் தோ்வு செய்யப்பட்ட 34 பயனாளிகளுக்கு பணி உத்தரவு வழங்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு, அம்மாபேட்டை வட்டார வளா்ச்சி அலுவலா் கதிரேசன் தலைமை வகித்தாா். மாத்தூா், வெள்ளித்திருப்பூா் ஊராட்சிகளில் கனவு இல்லம் திட்டத்துக்கு தலா ரூ.2.70 லட்சம் வீதம் 34 பயனாளிகளுக்கு ரூ.91.80 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, பயனாளிகளுக்கு வீடுகள் கட்டுவதற்கான பணி உத்தரவை அந்தியூா் சட்டப் பேரவை உறுப்பினா் ஏ.ஜி.வெங்கடாசலம் வழங்கினாா்.
அம்மாபேட்டை வடக்கு ஒன்றிய திமுக அவைத்தலைவா் சுப்பிரமணியம், ஒன்றிய துணைச் செயலாளா் கண்ணுசாமி, மண்டல துணை வட்டார வளா்ச்சி அலுவலா் ஜோதி, பணி மேற்பாா்வையாளா் கருணாகரன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.