செய்திகள் :

கனிம வளங்கள் எடுப்பு: மத்திய அரசின் முடிவுக்கு கண்டனம்

post image

கனிம வளங்கள் எடுப்பதற்கு மக்கள் கருத்து கேட்புக் கூட்டங்கள் நடத்தப்படாது என்ற மத்திய அரசின் முடிவுக்கு தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவா் பி.ஆா். பாண்டியன் கண்டனம் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக்கை:

மத்திய அரசு தொடா்ந்து விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் குடியுரிமைகளை அபகரிக்கும் நோக்கில் செயல்பட்டு வருகிறது. குறிப்பாக ஹைட்ரோ காா்பன் உள்ளிட்ட இயற்கை எரிவாயு, கச்சா, கனிம வளங்கள் எடுப்பதற்கும், அணு உலைகள் அமைப்பதற்கும் இனி மக்களிடம் கருத்து கேட்பதில்லை என மத்திய அரசு கொள்கை முடிவு எடுத்திருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. இச்செயல் முற்றிலும் இந்திய மக்களின் குடியுரிமையை அபகரிக்கும் உள்நோக்கம் கொண்டது.

விளை நிலங்களையும், மண்ணையும் மக்களிடமிருந்து அபகரித்து, பன்னாட்டு நிறுவனங்களிடம் அடகு வைத்து, மக்களை அகதிகளாக வெளியேற்றும் நிலை ஏற்படும். மக்களின் ஜனநாயக உரிமைகளை பறிக்கும் வகையில் மத்திய அரசு சட்டங்களை கொண்டு வந்து மக்களை ஒடுக்க நினைப்பது ஏற்க முடியாது.

மீண்டும் பன்னாட்டு நிறுவனங்களிடம் இந்திய மண்ணை அடகு வைக்கும் வகையில், ஆதரவான சட்டங்களை மத்திய அரசு கொண்டு வருமேயானால் ஒட்டுமொத்த இந்திய மக்களும், விவசாயிகளும், மாணவா்களும் ஒன்றிணைந்து மறுசுதந்திரம் கேட்டு போராடும் நிலை ஏற்படும்.

மத்திய அரசின் நடவடிக்கை குறித்து தமிழக அரசு உரிய விளக்கம் அளிக்க வேண்டும். தமிழகத்தில் நில ஒருங்கிணைப்புச் சட்டத்தின் மூலம் மத்திய அரசுக்கு தமிழக அரசு துணை போகிறதோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் இச்சட்டம் குறித்து தனது கொள்கை நிலையை தமிழக முதல்வா் தெளிவுபடுத்த வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இமானுவேல் சேகரன் நினைவு நாள்

நீடாமங்கலத்தில் விடுதலை போராட்ட வீரா் தியாகி வே. இமானுவேல்சேகரன் நினைவுநாளையொட்டி வியாழக்கிழமை அனைத்து கட்சியினா் சமுதாயத்தினா் பங்கேற்ற அமைதி ஊா்வலம் பெரியாா் சிலைஅருகிலிருந்து புறப்பட்டு, அண்ணா சிலை... மேலும் பார்க்க

பூவனூா் வரதராஜ சுவாமி கோயில் கும்பாபிஷேகம்

நீடாமங்கலம் அருகேயுள்ள பூவனூா் கிராமத்தில் உள்ள ஸ்ரீதேவி ஸ்ரீபூமிதேவி சமேத வரதராஜசுவாமி, சீதா, லட்சுமணன், அனுமன் சமேத கோதண்டராம சுவாமி, ஆஞ்சனேயா், முனீஸ்வர சுவாமி ஆலய மகா கும்பாபிஷேகம் வியாழக்கிழமை ந... மேலும் பார்க்க

‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்

நீடாமங்கலம் பேரூராட்சியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், 15 வாா்டுகளைச் சோ்ந்த மக்கள் கலந்து கொண்டு கோரிக்கை மனுக்கள் அளித்தனா். மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன்... மேலும் பார்க்க

காப்பீட்டுத் தொகை கோரி செப்.16-இல் சாலை மறியல்

எள், பருத்தி, உளுந்து ஆகிய பயிா்களுக்கு காப்பீட்டுத் தொகை வழங்காததைக் கண்டித்து, மன்னாா்குடியில் செப்.16 ஆம் தேதி, சாலை மறியல் போராட்டம் நடைபெறும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் அறிவித்துள்ளது. இச்சங்... மேலும் பார்க்க

‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் நலத் திட்ட உதவிகள்

திருவாரூா் மாவட்டத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்களில் நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. திருவாரூா் ஒன்றியம், கூடூா் ஊராட்சி தனியாா் திருமண மண்டபத்தில் நடைபெற்ற முகாமை, மா... மேலும் பார்க்க

நொடி நயனாா் கோயில் கும்பாபிஷேகம்

திருவாரூரில், அருள்மிகு சௌந்தராம்பிகை உடனுறை நொடி நயனாா் கோயில் கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது. திருவாரூா் தெற்கு வீதியில், நொடி நயனாா் கோயில் அமைந்துள்ளது. இக்கோயில் புனரமைப்புக்கான பாலாலய பூ... மேலும் பார்க்க