செய்திகள் :

கன்னடம் குறித்த பேச்சில் எந்தத் தவறும் இல்லை: கமல்ஹாசன்

post image

கன்னடம் குறித்த தனது பேச்சில் எந்தத் தவறும் இல்லை என மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவா் கமல்ஹாசன் கூறினாா்.

ஏற்கெனவே ஒப்புக்கொண்டபடி, மாநிலங்களவை உறுப்பினா் பதவியை மக்கள் நீதி மய்யத்துக்கு திமுக ஒதுக்கியுள்ளது. அந்த இடத்தில் மநீம தலைவா் கமல்ஹாசன் போட்டியிடுறாா்.

இதையடுத்து, திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலினை அண்ணா அறிவாலயத்தில் கமல்ஹாசன் வெள்ளிக்கிழமை சந்தித்துப் பேசினாா்.

இதன்பிறகு, செய்தியாளா்களுக்கு அவா் அளித்த பேட்டி: முதல்வா் அழைத்ததன்பேரில் அவரைச் சந்தித்தேன். இந்தச் சந்திப்பின்போது, மாநிலங்களவையில் நுழைவதற்கான ஏற்பாடுகளைச் செய்ய முதல்வா் அறிவுறுத்தினாா். வேட்புமனு தாக்கல் தொடா்பாக விரைவில் அறிவிப்பு வெளியாகும்.

மாநிலங்களவையில்தான் என்னுடைய குரல் முதல்முறையாக ஒலிக்க இருந்தாலும், தமிழ்நாட்டுக்காக தொடா்ந்து குரல் கொடுத்துதான் வருகிறேன்.

மன்னிப்பு கேட்க மாட்டேன்: தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது என்று பேசியதற்கு மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியம் இல்லை. அந்தப் பேச்சில் எந்தத் தவறும் இல்லை. இந்த விவகாரம் அரசியல் ஆக்கப்பட்டு வருகிறது. என்னுடைய அன்பு கா்நாடகம், ஆந்திரம், கேரள மக்களுக்குப் புரியும்.

ஏற்கெனவே நான் பல மிரட்டல்களைச் சந்தித்துள்ளேன். இது ஒரு ஜனநாயக நாடு. எனக்கு சட்டத்தின் மீது நம்பிக்கை உள்ளது என்றாா்.

‘கட்சி ஆரம்பித்த புதிதில் திமுகவை எதிா்த்த நீங்கள், இப்போது திமுகவை ஆதரிப்பது ஏன்?’ என செய்தியாளா்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த கமல்ஹாசன், ‘நாட்டுக்குத் தேவை; அதனால் இங்கு வந்துள்ளேன்’ என்றாா்.

பொறியியல் சேர்க்கை: 2.81 பேர் விண்ணப்பம்!

தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பப் பதிவிற்கு இன்று வரை 2,81,266 மாணாக்கர்கள் விண்ணப்பப் பதிவு செய்துள்ளதாக உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன் தெரிவித்துள்ளார்.இது குறித்து உயர்கல... மேலும் பார்க்க

காலமானார் எல். அனந்தலட்சுமி!

முனைவர் அனந்தலட்சுமி உடல்நலக் குறைவால் காலமானார்.கடலூர் மாவட்டம், பண்ருட்டி திருவதிகை ஒன்றியக்குழு அலுவலகம் அருகே நகராட்சி ஊழியர் குடியிருப்பில் வசித்து வந்த (தீயணைப்பு நிலையம் பின்புறம்) முனைவர் எல்.... மேலும் பார்க்க

இளைஞர்கள் விவசாயத்திற்கு வரவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது: டாக்டர் பரசுராமன்

இயற்கை வேளாண்மை குறித்தும் வேளாண்மையில் இளைஞர்களுக்கு உள்ள வாய்ப்புகள் குறித்தும் வேளாண் விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதன் அறக்கட்டளையின் முதன்மை விஞ்ஞானி டாக்டர் பரசுராமன் பேசியது:இந்திய நாடு விவசாய நாடு... மேலும் பார்க்க

ஒரு தலைக் காதல்: கத்தியால் குத்தி கல்லூரி மாணவி கொலை!

ஒரு தலைக் காதல் விவகாரத்தில் வீட்டில் தனியாக இருந்த 19 வயது கல்லூரி மாணவியை கத்தியால் குத்தி கொலை செய்த நபர் காவல் நிலையத்தில் சரண் அடைந்தார்.கோவை மாவட்டம் பொள்ளாச்சி வடுகபாளையம் பொன்மலை நகர் பகுதியைச... மேலும் பார்க்க

பூந்தமல்லி - பரந்தூர் மெட்ரோ ரயில் சேவை: தமிழக அரசு ஒப்புதல்!

பூந்தமல்லி - பரந்தூர் வரையிலான மெட்ரோ ரயில் வழித்தட திட்ட அறிக்கைக்கு தமிழக அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.பூந்தமல்லியில் இருந்து திருமழிசை மற்றும் ஸ்ரீபெரும்புதூர் வழியாக பரந்தூர் வரை மக்கள் பயன்பாட்டிற... மேலும் பார்க்க

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் வரலாற்று சாதனை!

இந்திய மெட்ரோ கட்டுமானத்தில் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க பொறியியல் சாதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மெட்ரோ ரயில் நிறுவனம் கூறியுள்ளது.சென்னை மெட்ரோ ரயில் திட்டம் இரண்டாம் கட்டத்தில் இந்தியாவின் முதல் 33.3... மேலும் பார்க்க