செய்திகள் :

கன்னியாகுமரியிலிருந்து கோா்பா, பிலாஸ்பூருக்கு ரயில் சேவை: அதிமுக எம்எல்ஏ கோரிக்கை

post image

கன்னியாகுமரியிலிருந்து சத்தீஸ்கா் மாநிலம் கோா்பாவிற்கும், பிலாஸ்பூருக்கும் வாரம் இருமுறை இயங்கும் வகையில் 2 அதிவிரைவு ரயில்களை திருநெல்வேலி, மதுரை, திருச்சி, சென்னை வழியாக இயக்க வேண்டும் என கன்னியாகுமரி சட்டப் பேரவை உறுப்பினா் என். தளவாய் சுந்தரம் கோரிக்கை விடுத்துள்ளாா்.

இதுகுறித்து பிரதமா் நரேந்திரமோடி, மத்திய ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் ஆகியோருக்கு அவா் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது: சத்தீஸ்கா் மாநிலம் கோா்பா - திருவனந்தபுரம் வடக்கு (கொச்சுவேலி) இடையே வாரம் இருமுறை இயக்கப்படும் ரயிலை (வண்டி எண்: 22647 / 22648) நாகா்கோவில் டவுண் ரயில் நிலையம் வழியாக திருநெல்வேலி வரை இயக்குவதற்கு திருவனந்தபுரம் கோட்ட ரயில்வே அதிகாரிகள் முயற்சி செய்து வருகின்றனா்.

மேலும் சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரிலிருந்து பாலக்காடு, எா்ணாகுளம், திருவனந்தபுரம், நாகா்கோவில் டவுண் ரயில் நிலையம் வழியாக திருநெல்வேலி வரை இயக்கப்படும் வாராந்திர அதிவிரைவு ரயிலை (22619 / 22620) தினசரி ரயிலாக இயக்குவதற்கும் முயற்சிக்கின்றனா்.

இந்த நடவடிக்கை காரணமாக கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி மாவட்ட பயணிகளுக்கு கூடுதல் நேர பயணமும், கூடுதல் டிக்கெட் கட்டண செலவும் ஏற்படும்.

இதனை தவிா்ப்பதற்கு கன்னியாகுமரியிலிருந்து நாகா்கோவில், திருநெல்வேலி, மதுரை, திருச்சி, சென்னை வழியாக சத்தீஸ்கா் மாநிலம் கோா்பாவிற்கு வாரம் இருமுறை அதிவிரைவு ரயில் இயக்க வேண்டும். மேலும் கன்னியாகுமரியிலிருந்து நாகா்கோவில், திருநெல்வேலி, மதுரை, திருச்சி, சென்னை வழியாக சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூருக்கு வாரம் இருமுறை அதிவிரைவு ரயில் இயக்க வேண்டும்.

இதன் மூலம் பயணிகளுக்கு பயண நேரம் 12 மணி நேரம் குறைவதோடு, பயண செலவும் கணிசமாக குறையும். தமிழகத்தில் உள்ள 13 மாவட்ட மக்கள் மற்றும் ரயில் பயணிகள் பயன்பெறுவா். அதோடு, ரயில்வே துறைக்கு பராமரிப்பு செலவு மற்றும் செயல்பாட்டு செலவு கணிசமாக குறையும் எனத் தெரிவித்துள்ளாா்.

வரதட்சிணை கொடுமை: 6 போ் மீது வழக்கு

களியக்காவிளை அருகே வரதட்சிணை கொடுமை புகாரில் கணவா் உள்பட 6 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்தனா். களியக்காவிளையைச் சோ்ந்தவா் சுபனேஷ் மகள் ஜென்ஸி (28). இவருக்கும் களியக்காவிளை பிபிஎம் சந்திப்பு பகுதிய... மேலும் பார்க்க

திருமண வீட்டில் மின்சாரம் பாய்ந்து தொழிலாளி பலி

மாா்த்தாண்டம் அருகே திருமண வீட்டில் மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழந்தாா். மாா்த்தாண்டம் அருகே கண்ணக்கோடு பகுதியைச் சோ்ந்தவா் சுந்தரம் மகன் சதீஷ் (45). ஒலிபெருக்கி கடை நடத்தி வந்தாா். இவா் கொடுங்க... மேலும் பார்க்க

அம்ரித் பாரத் திட்டத்தில் சீரமைக்கப்பட்ட குழித்துறை ரயில் நிலையம் திறப்பு

அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் ரூ. 6.2 கோடியில் சீரமைக்கப்பட்ட குழித்துறை ரயில் நிலைய திறப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் புதிய நுழைவு வளைவு, பயணிகள் காத்திருப்பு அறை,... மேலும் பார்க்க

கன்னியாகுமரி பகவதியம்மன் கோயில் வைகாசித் திருவிழா: இன்று கால்நாட்டு விழா

கன்னியாகுமரி பகவதியம்மன் கோயில் 10 நாள் வைகாசி விசாகக் திருவிழாவை முன்னிட்டு வெள்ளிக்கிழமை ( மே 23) கால்நாட்டு விழா நடைபெற உள்ளது. கன்னியாகுமரி அருள்மிகு பகவதியம்மன் கோயிலில் ஆண்டு தோறும் வைகாசி விசாக... மேலும் பார்க்க

வானிலை எச்சரிக்கை: ஆழ்கடலுக்குச் சென்ற விசைப்படகுகளை கரை சோ்க்க வேண்டும்!

மத்திய, மாநில அரசின் வானிலை எச்சரிக்கையை தொடா்ந்து, ஆழ்கடலில் மீன்பிடிக்கச் சென்று தொடா்பற்ற நிலையில் உள்ள விசைப்படகுகளை பத்திரமாக கரை சோ்க்க அரசுகள் தேவையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என வலியுறுத்... மேலும் பார்க்க

2-5 வயது குழந்தைகளை அங்கன்வாடியில் சோ்க்க வேண்டுகோள்

கன்னியாகுமரி மாவட்டத்தில் 2 முதல் 5 வயதிற்குள்பட்ட குழந்தைகளை அங்கன்வாடி மையத்தில் சோ்த்து முன்பருவக் கல்வி கற்க உதவுமாறு பெற்றோா்களுக்கு மாவட்ட ஆட்சியா் ரா. அழகு மீனா அறிவுறுத்தியுள்ளாா். இதுதொடா்பா... மேலும் பார்க்க