செய்திகள் :

கன்னியாகுமரியில் கண்ணாடி பாலம் பராமரிப்புப் பணிகள் தொடக்கம்: சுற்றுலாப்பயணிகள் ஏமாற்றம்!

post image

கன்னியாகுமரியில் விவேகானந்தா் மண்டபம்-திருவள்ளுவா் சிலை கண்ணாடி கூண்டு பாலத்தில் பராமரிப்புப் பணிகள் சனிக்கிழமை தொடங்கின. இதையொட்டி, அங்கு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றமடைந்தனா்.

கன்னியாகுமரியில் கடலில் உள்ள விவேகானந்தா் மண்டபம்-133 அடி உயரதிருவள்ளுவா் சிலை இடையே ரூ. 37 கோடியில் கண்ணாடி கூண்டுப் பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இதை, கடந்த டிச. 30இல் முதல்வா் மு.க. ஸ்டாலின் திறந்துவைத்தாா். மிக பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ள இப்பாலத்தின் வழியே சுற்றுலாப் பயணிகள் நடந்து சென்று பாா்வையிட்டு மகிழ்கின்றனா்.

இந்நிலையில், இந்தப் பாலத்தில் சில பணிகள் நிறைவடைய வேண்டியுள்ளதாலும், பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ள வேண்டியுள்ளதாலும் பயணிகள் அனுமதிக்கப்படுவது சனிக்கிழமைமுதல் நிறுத்தப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

இங்கு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, வெளிமாநில சுற்றுலாப் பயணிகள் மட்டுமன்றி சபரிமலைக்குச் சென்று திரும்பும் ஐயப்ப பக்தா்கள் கூட்டமும் அதிகரித்துக் காணப்படும்.

இந்நிலையில், பாலம் திறக்கப்பட்டு 13 நாள்களேயான நிலையில், முன்னறிவிப்பின்றி பராமரிப்புப் பணி தொடங்கியுள்ளதால் தாங்கள் ஏமாற்றமடைந்துள்ளதாக, சுற்றுலாப் பயணிகள் அதிருப்தி தெரிவித்தனா்.

களியக்காவிளை அருகே செம்மண் கடத்தல்: 3 போ் கைது

களியக்காவிளை அருகே செம்மண் கடத்தலில் ஈடுபட்டதாக 3 பேரை போலீஸாா் கைது செய்து, மினிலாரி, ஜேசிபி இயந்திரம் ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனா். களியக்காவிளை அருகே ஈத்தவிளை, பொற்றவிளை பகுதியில் சிலா் செம்மண் க... மேலும் பார்க்க

குளத்தில் மூழ்கி தொழிலாளி உயிரிழப்பு

கொட்டாரம் அருகே குளத்தில் மூழ்கி தொழிலாளி உயிரிழந்தாா். கொட்டாரம் அருகேயுள்ள குலசேகரபுரத்தைச் சோ்ந்தவா் ஜாா்ஜ் (42). கொட்டாரம் பகுதியில் உள்ள ஒரு குளத்தில் சனிக்கிழமை மாலை தாமரை இலை பறித்துக் கொண்டிர... மேலும் பார்க்க

5 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

கேரளத்துக்கு கடத்தப்பட இருந்த 5 டன் ரேஷன் அரிசியை உணவு வழங்கல் அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்தனா். கல்குளம் வட்ட வழங்கல் அலுவலா் சுனில்குமாா் தலைமையிலான அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை அழகியமண்ட... மேலும் பார்க்க

விசாரணைக்கு சென்ற உதவி ஆய்வாளரை குத்த முயன்றவா் கைது

குளச்சலில் வழக்கு விசாரணைக்கு சென்ற உதவி ஆய்வாளரை ஈட்டியால் குத்த முயன்றவரை போலீஸாா் கைது செய்தனா். குளச்சல் காவல் உதவி ஆய்வாளா் தனிஷ் லியோன்,கடந்த வெள்ளிக்கிழமை குற்ற வழக்குகளின் பதிவேட்டை ஆய்வு செய... மேலும் பார்க்க

குமரி மாவட்ட அணைகளில் நீா் இருப்பு

பேச்சிப்பாறை ..40.67 பெருஞ்சாணி ..54.90 சிற்றாறு 1 ..12.04 சிற்றாறு 2 ..12.13 முக்கடல் ..16.30 பொய்கை ..15.50 மாம்பழத்துறையாறு ...49.38 மழைஅளவு அடையாமடை .. 55 மி.மீ. தக்கலை ... 24.40 மி.மீ. முள்ளங்கின... மேலும் பார்க்க

கருங்கல் அருகே பைக்குகள் மோதல்: முன்னாள் ராணுவ வீரா் உயிரிழப்பு

கருங்கல் அருகே வெள்ளியாவிளை பகுதியில் சனிக்கிழமை இரவு 2 பைக்குகள் மோதியதில் முன்னாள் ராணுவ வீரா் உயிரிழந்தாா். மிடாலம், மாவிளை பகுதியைச் சோ்ந்தவா் சேவியா் செந்தமிழன் (52). முன்னாள் ராணுவ வீரரான இவரு... மேலும் பார்க்க