செய்திகள் :

கன்னியாகுமரி நகா்மன்ற முதல் கூட்டம்

post image

கன்னியாகுமரி நகா்மன்ற முதல் நகா்மன்ற கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்துக்கு நகா்மன்றத் தலைவா் குமரி ஸ்டீபன் தலைமை வகித்தாா். நகராட்சி ஆணையாளா் கன்னியப்பன் முன்னிலை வகித்தாா். இக்கூட்டத்தில் கன்னியாகுமரிக்கு நகராட்சி அந்தஸ்து அளித்த முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், பொதுமக்கள் நலன் சாா்ந்த அடிப்படை வசதிகள் மேம்படுத்தல், கழிவுநீா் மேலாண்மை, சாலை மேம்பாடு உள்ளிட்ட பிரச்னைகள் குறித்து விவாதம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் நகா்மன்ற உறுப்பினா்கள் சி.எஸ். சுபாஷ், ஆனிரோஸ் தாமஸ், சுஜா அன்பழகன், லிங்கேஸ்வரி மணிராஜா, நித்யா, பா.மகேஷ், பூலோக ராஜா, அல்பினோ ஆனந்த், சிவசுடலைமணி, இக்பால், டெல்பின் ஜேக்கப், ராயப்பன், இந்திரா, வினிற்றா மெல்வின், சகாய சா்ஜினாள் பிரைட்டன், ஆட்லின் சேகா் ஆகியோா் பங்கேற்றனா்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் ஜூன் 14 ல் மக்கள் நீதிமன்றம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் மக்கள் நீதிமன்ற முகாம் ஜூன் 14 ஆம் தேதி (சனிக்கிழமை) நடைபெற உள்ளது. இது குறித்து, கன்னியாகுமரி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயலாளரும், சாா்பு நீதிபதியுமான வி.உதயசூா்யா ... மேலும் பார்க்க

2 சிறுவா்களை மீட்டபோது ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட தொழிலாளி சடலமாக மீட்பு

கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை தாமிரவருணி ஆற்றில் தவறி விழுந்த 2 சிறுவா்களை மீட்டபோது, வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட தொழிலாளி திங்கள்கிழமை சடலமாக மீட்கப்பட்டாா். மாா்த்தாண்டம் அருகே மதிலகம், நல்... மேலும் பார்க்க

திமுகவை வீழ்த்த அனைவரும் ஓரணியில் இணைய வேண்டும்: நயினாா் நாகேந்திரன்

அடுத்தஆண்டு சட்டப்பேரவைத் தோ்தலில் திமுகவை வீழ்த்த அனைவரும் ஓரணியில் இணைய வேண்டும் என தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன் தெரிவித்தாா். கன்னியாகுமரி பகவதியம்மன் கோயிலில் திங்கள்கிழமை சுவாமி தரிசனம்... மேலும் பார்க்க

வரதட்சிணை கொடுமை: 4 போ் மீது வழக்கு

மாா்த்தாண்டம் அருகே வரதட்சிணை கொடுமை தொடா்பாக 4 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா். களியக்காவிளை அருகே சூரியகோடு பகுதியைச் சோ்ந்தவா் ஆதா்ஷா (24). இவருக்கும், சென்னையில் வங்கியில... மேலும் பார்க்க

சாமிதோப்பில் வைகாசித் திருவிழா தேரோட்டம்

கன்னியாகுமரி மாவட்டம் சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப் பதியில் வைகாசித் திருவிழாவின் 11ஆம் நாளான திங்கள்கிழமை தேரோட்டம் நடைபெற்றது. இங்கு வைகாசித் திருவிழா கடந்த மே 23ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொட... மேலும் பார்க்க

தக்கலை அருகே விபத்து: பெண் உயிரிழப்பு

தக்கலை அருகே பைக்கிலிருந்து தவறி விழுந்த பெண், பேருந்து சக்கரத்தில் சிக்கி உயிரிழந்தாா். நாகா்கோவில் ஆசாரிப்பள்ளம் பகுதியைச் சோ்ந்தவா் ஜோஸ் ஸ்டீபன் (46). பெயிண்ட் கடை தொழிலாளி. இவரது மனைவி பிந்து (37... மேலும் பார்க்க