கன்னியாகுமரி பகவதியம்மன் கோயிலில் வைகாசி விசாகத் திருவிழா கால்நாட்டு
கன்னியாகுமரி அருள்மிகு பகவதியம்மன் கோயிலில் வைகாசி விசாகத் திருவிழாவை முன்னிட்டு கோயில் வளாகம் மற்றும் கன்னியம்பத்தில் கால்நாட்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இக்கோயிலில் வைகாசி விசாகத் திருவிழா மே 31-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இத் திருவிழா ஜூன் 9-ஆம் தேதி வரை 10 நாள்கள் நடைபெறும். விழா நாள்களில் அதிகாலை 5 மணி மற்றும் காலை 10 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெறும்.
தேரோட்டம்: 9-ஆம் திருவிழாவான ஜூன் 8-ஆம் தேதி காலை தேரோட்டம் நடைபெறும். ஜூன் 9-ஆம் தேதி முக்கடல் சங்கமத்தில் அம்மனுக்கு ஆராட்டு, இரவு 9 மணிக்கு தெப்பத்திருவிழா நடைபெறும்.
இத் திருவிழாவின் முன்னோட்ட நிகழ்வாக வெள்ளிக்கிழமை கால்நாட்டு விழா நடைபெற்றது. இதில் குமரி மாவட்ட அறங்காவலா் குழுத் தலைவா் பிரபா ஜி.ராமகிருஷ்ணன், கோயில் மேலாளா் ஆனந்த், அகஸ்தீசுவரம் தெற்கு ஒன்றிய திமுக செயலா் பா.பாபு, கன்னியாகுமரி நகா்மன்றத் தலைவா் குமரி ஸ்டீபன், நகா்மன்ற உறுப்பினா் சுஜா அன்பழகன், முன்னாள் உறுப்பினா் டி.தாமஸ், திமுக நிா்வாகிகள் எஸ்.அன்பழகன், நிசாா், ஜேன்சன் ரோச், டி.கே.சுந்தரம், தாமரை பிரதாப், ஷ்யாம், ரூபின், முன்னாள் ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினா் பிரேமலதா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.