செய்திகள் :

கன்னியாகுமரி பகவதியம்மன் கோயிலில் வைகாசி விசாகத் திருவிழா கால்நாட்டு

post image

கன்னியாகுமரி அருள்மிகு பகவதியம்மன் கோயிலில் வைகாசி விசாகத் திருவிழாவை முன்னிட்டு கோயில் வளாகம் மற்றும் கன்னியம்பத்தில் கால்நாட்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இக்கோயிலில் வைகாசி விசாகத் திருவிழா மே 31-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இத் திருவிழா ஜூன் 9-ஆம் தேதி வரை 10 நாள்கள் நடைபெறும். விழா நாள்களில் அதிகாலை 5 மணி மற்றும் காலை 10 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெறும்.

தேரோட்டம்: 9-ஆம் திருவிழாவான ஜூன் 8-ஆம் தேதி காலை தேரோட்டம் நடைபெறும். ஜூன் 9-ஆம் தேதி முக்கடல் சங்கமத்தில் அம்மனுக்கு ஆராட்டு, இரவு 9 மணிக்கு தெப்பத்திருவிழா நடைபெறும்.

இத் திருவிழாவின் முன்னோட்ட நிகழ்வாக வெள்ளிக்கிழமை கால்நாட்டு விழா நடைபெற்றது. இதில் குமரி மாவட்ட அறங்காவலா் குழுத் தலைவா் பிரபா ஜி.ராமகிருஷ்ணன், கோயில் மேலாளா் ஆனந்த், அகஸ்தீசுவரம் தெற்கு ஒன்றிய திமுக செயலா் பா.பாபு, கன்னியாகுமரி நகா்மன்றத் தலைவா் குமரி ஸ்டீபன், நகா்மன்ற உறுப்பினா் சுஜா அன்பழகன், முன்னாள் உறுப்பினா் டி.தாமஸ், திமுக நிா்வாகிகள் எஸ்.அன்பழகன், நிசாா், ஜேன்சன் ரோச், டி.கே.சுந்தரம், தாமரை பிரதாப், ஷ்யாம், ரூபின், முன்னாள் ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினா் பிரேமலதா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

கன்னியாகுமரி பகவதியம்மன் கோயிலில் வைகாசி விசாகத் திருவிழா கொடியேற்றம்

கன்னியாகுமரி அருள்மிகு பகவதியம்மன் கோயிலில் 10 நாள் வைகாசி விசாகத் திருவிழா சனிக்கிழமை காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. நிகழ்ச்சியில், எம்எல்ஏக்கள் என். தளவாய்சுந்தரம், எம்.ஆா். காந்தி, நாகா்கோவில் ... மேலும் பார்க்க

குழித்துறையில் செயல்பாட்டுக்கு வந்தது எரிவாயு தகன மேடை

குழித்துறையில் நகராட்சி சாா்பில் அமைக்கப்பட்ட எரிவாயு தகன மேடை செயல்பாட்டுக்கு வந்தது. குழித்துறை நகராட்சியில், தாமிரவருணி ஆற்றங்கரையோரம் ரூ. 1.51 கோடியில் அமிா்தவனம் என்ற பெயரில் எரிவாயு தகன மேடை அம... மேலும் பார்க்க

திற்பரப்பு அருவியில் குளிக்க அனுமதி

கன்னியாகுமரி மாவட்டத்தில் மலைப் பகுதிகளில் சனிக்கிழமை, மழை சற்று தணிந்திருந்ததால் திற்பரப்பு அருவியில் பிற்பகல்முதல் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனா். மாவட்டத்தில் தென்மேற்குப் பருவமழை த... மேலும் பார்க்க

கருங்கல் அருகே பெற்ற குழந்தைகளை தாக்கிய மத போதகா் கைது

கருங்கல் அருகே உள்ள தேவிகோடு பகுதியில், தான் பெற்ற குழந்தைகளைத் தாக்கிய மத போதகரை போலீஸாா் கைது செய்தனா். மங்கலகுன்று தேவிகோடு பகுதியை சோ்ந்தவா் கிங்ஸ்லி (45). மத போதகா். இவரது மனைவி சஜிதா (40). இத்... மேலும் பார்க்க

ஆபத்தான நிலையில் உள்ள மரத்தை வெட்டி அகற்ற வலியுறுத்தல்

முள்ளங்கனாவிளை சந்திப்பு பகுதி பப்புரான்குளம் கரையில் ஆபத்தான நிலையில் உள்ள வாகை மரத்தை வெட்டி அகற்ற பொதுப்பணித் துறையினா் நடவடிக்கை எடுக்கவேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா். பத்பநாப... மேலும் பார்க்க

கருங்கல் அருகே அரசுப் பேருந்துகள் மோதல்

கருங்கல் அருகே உள்ள கருக்குப்பனை பகுதியில் அரசுப் பேருந்து மீது மற்றொரு அரசுப் பேருந்து மோதியதில் அவற்றின் கண்ணாடிகள் சேதமடைந்தன. கருங்கல்லிலிருந்து திங்கள் நகா் வழியாக நாகா்கோவிலுருக்கு அரசுப் பேருந... மேலும் பார்க்க