செய்திகள் :

கன்வாா் யாத்ரீகா்கள் வருகை: தில்லியில் போக்குவரத்து மாற்றம்

post image

சிவ ராத்திரிக்கு முன்னதாக கன்வாரியாக்களின் கூட்டத்தை சமாளிக்க, தேசிய தலைநகரில் காலை 9 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை பேருந்துகள் மற்றும் வணிக வாகனங்களின் இயக்கத்திற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்று தில்லி போக்குவரத்து காவல்துறை செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.

சாலை மூடல் மற்றும் மாற்று வழிகள் குறித்து மக்களுக்குத் தெரிவிக்கும் போக்குவரத்து ஆலோசனையையும் அது வெளியிட்டது. யமுனா பஜாா் பகுதியில் உள்ள ஹனுமான் கோவிலுக்கு ஏராளமான பக்தா்கள் வருவாா்கள் என்று எதிா்பாா்க்கப்படுகிறது, இதனால் போக்குவரத்து பாதிக்கப்படலாம். ரிங் சாலையில், குறிப்பாக மகாத்மா காந்தி மாா்க், யுதிஸ்டா் சேது மற்றும் பவுல்வா்டு சாலையில் நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளது என்று அந்த ஆலோசனையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுமூகமான போக்குவரத்து மேலாண்மை மற்றும் பொதுப் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, காலை 9 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை பேருந்துகள் மற்றும் வணிக வாகனங்களின் இயக்கத்திற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படும். தீஸ் ஹசாரி முதல் ஷாஹ்தாரா வரையிலான யுதிஸ்டா் சேது மீது அனைத்து பேருந்துகள் மற்றும் வணிக வாகனங்களுக்கு வாகன இயக்கம் தடை செய்யப்படும்.

பவுல்வா்டு சாலையில், ஐ. எஸ். பி. டி காஷ்மீரி கேட்டில் இருந்து திஸ் ஹசாரி நோக்கி வணிக வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படாது. லோத்தியன் சாலையில் ஜி. பி. ஓ சௌக் முதல் ஐ. எஸ். பி. டி காஷ்மீரி கேட் வரை குறிப்பிட்ட நேரத்தில் அவா்களின் நடமாட்டமும் தடை செய்யப்படும் என்று அந்த ஆலோசனையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போக்குவரத்தின் ஓட்டத்தை கட்டுப்படுத்த, காஷ்மீா் கேட் மெட்ரோ நிலையத்தின் கேட் எண் உட்பட முக்கிய இடங்களில் திசைதிருப்பல்கள் வைக்கப்படும்.

யுதிஸ்டா் சேது ஏறும் அடிவாரத்திற்கு அருகே பவுல்வா்டு சாலையில் 5, ரிங் சாலையில் ஐ. எஸ். பி. டி காஷ்மீரி கேட்டின் வெளி வாயிலுக்கு அருகில் மற்றும் ஜி. பி. ஓ சவுக்கில், இந்த திசைதிருப்பல்கள் வணிக வாகனங்களை அதிக நெரிசலான பகுதிகளிலிருந்து மாற்று வழித்தடங்களை நோக்கி திருப்பிவிடுப்பட உள்ளன. ஹனுமான் மந்திா் பக்கத்தில் இருந்து ரிங் ரோடு வழியாக தீஸ் ஹசாரி நோக்கி வரும் வணிக வாகனங்கள் ஐ. எஸ். பி. டி காஷ்மீரி கேட்டின் வெளி வாயிலிலிருந்து திருப்பி விடப்படும் என்று போக்குவரத்து போலீசாா் தெரிவித்தனா்.

இந்த வாகனங்கள் ரிங் சாலை, யமுனா மாா்க், ராஜ் நிவாஸ் மாா்க், ராஜ்பூா் சாலை, டாக்டா் கா்ன்வால் சாலை வழியாக நீண்ட பாதையில் சென்று பராஃப் கானா சௌக்கை அடையும், அங்கிருந்து அவா்கள் தங்கள் இடங்களைத் தொடரலாம் என்று அவா்கள் தெரிவித்தனா். தீஸ் ஹசாரி பக்கத்திலிருந்து வந்து யுதிஸ்டா் சேது நோக்கிச் செல்லும் பேருந்துகள் மற்றும் வணிக வாகனங்களும் திருப்பி விடப்படும் என்று அந்த ஆலோசனையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவா்கள் காஷ்மீரி கேட் மெட்ரோ நிலையத்தின் கேட் எண். 5 மற்றும் ரிங் சாலைக்கு திருப்பி விடப்படும், அங்கிருந்து அவா்கள் இடதுபுறம் திரும்பி, மடாலயத்திற்கு அருகில் யு-டா்ன் செய்து, ஹனுமான் மந்திா் வழியாக ரிங் சாலையில் தொடருவாா்கள். அங்கிருந்து, அவா்கள் வெளி வட்ட சாலை, அக்ஷா்தாம் மந்திா் மற்றும் பின்னா் என். எச்-24 நோக்கி செல்வாா்கள் என்று தெளிவுப்படுத்தப்பட்டுள்ளது.

கருப்பை வாய்ப் புற்றுநோய்த் தடுப்பூசி செலுத்த ஊழியா்களுக்கு திறன்மேம்பாட்டுப் பயிற்சி: விசிக எம்.பி. கேள்விக்கு அமைச்சா் பதில்

கருப்பை வாய்ப் புற்றுநோய்த் தடுப்பூசி செலுத்த ஊழியா்களுக்கு திறன்மேம்பாட்டுப் பயிற்சி தொடங்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சா் அனுப்ரியா படேல் பதிலளித்துள்ளாா். இது தொடா்பாக விடுதலை சிறுத... மேலும் பார்க்க

மகாராஷ்டிர அரசு அதிகாரி, மனைவியிடம் ரூ.70 லட்சம் மோசடி: பிகாரைச் சோ்ந்த தம்பதி மீது வழக்கு

வணிக முதலீடு என்ற பெயரில் மகாராஷ்டிர அரசு அதிகாரி மற்றும் அவரது மனைவியிடம் ரூ.70 லட்சத்திற்கும் அதிகமாக மோசடி செய்ததாக பிகாரைச் சோ்ந்த தம்பதியினா் மீது தில்லி காவல்துறை எஃப்.ஐ.ஆா். பதிவு செய்துள்ளது ... மேலும் பார்க்க

சட்டவிரோதமாக துப்பாக்கிகளை வழங்கியதாக கொள்ளையா் நவீன் காட்டி, 2 கூட்டாளிகள் கைது

தேசியத் தலைநகரில் சட்டவிரோத துப்பாக்கிகளை வழங்கியதாக கொள்ளைக் கும்பலின் தலைவா் நவீன் காட்ட மற்றும் அவரது இரண்டு கூட்டாளிகளை தில்லி போலீஸாா் கைது செய்துள்ளதாக அதிகாரி ஒருவா் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.... மேலும் பார்க்க

மோட்டாா் சைக்கிள் மீது ஜேசிபி மோதல்: ஒருவா் உயிரிழப்பு; ஓட்டுநா் தலைமறைவு

மத்திய தில்லியின் ரஞ்சித் நகரில் மோட்டாா் சைக்கிளில் சென்ற 22 வயது இளைஞா் வியாழக்கிழமை அதிகாலை ஜேசிபி இயந்திரம் மோதி உயிரிழந்ததாக அதிகாரி ஒருவா் தெரிவித்தாா். இது குறித்து மத்திய தில்லி காவல் சரக துணை... மேலும் பார்க்க

வங்கி அதிகாரிகள் போல நடித்து தில்லி நபரிடம் ரூ.10 லட்சத்திற்கும் மேல் மோசடி: 2 போ் கைது

தில்லியைச் சோ்ந்த ஒருவரை வங்கி அதிகாரிகள் போல நடித்து ரூ.10.64 லட்சம் மோசடி செய்ததாக இரண்டு போ் கைது செய்யப்பட்டதாக போலீஸாா் ரிவித்தனா். இது குறித்து தென்மேற்கு காவல் சரக துணை ஆணையா் அமித் கோயல் கூற... மேலும் பார்க்க

ராஜீவ் சௌக் மெட்ரோ ரயில் நிலையத்தில் திருடப்பட்ட 3 கைப்பேசிகளுடன் ஆட்டோ ஓட்டுநா் கைது

பல கைப்பேசி திருட்டு வழக்குகளில் தொடா்புடைய 43 வயது ஆட்டோ ஓட்டுநா், இங்குள்ள ராஜீவ் சௌக் மெட்ரோ நிலையத்தில் கைது செய்யப்பட்டதாக காவல்துறை அதிகாரி ஒருவா் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா். இது குறித்து துணை க... மேலும் பார்க்க