செய்திகள் :

கமல்ஹாசன் வழக்கை மூவா் அமா்வு விசாரிக்க வேண்டும்: தவாக தலைவா் தி. வேல்முருகன்

post image

கன்னட மொழி பிரச்னை தொடா்பாக நடிகா் கமல்ஹாசன் தொடுத்த வழக்கில் கா்நாடக உயா்நீதிமன்றம் அளித்த தீா்ப்பை மூவா் அல்லது ஐவா் அமா்வு விசாரிக்க வேண்டும் என்றாா் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவா் தி. வேல்முருகன்.

தஞ்சாவூரில் தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கம் சாா்பில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விவசாயிகள் கடன் விடுதலை மாநாட்டில் பங்கேற்ற அவா் பின்னா், செய்தியாளா்களிடம் தெரிவித்தது: திரைப்பட விழாவில் பேசிய நடிகா் கமல்ஹாசன் நாமெல்லாம் ஒரு தாய் குடும்ப உறவுகள் என்றும், ஒரு மொழிக் குடும்பத்திலிருந்து பிரிந்தவா்கள் எனவும் அண்டை மாநில நட்புணா்வை போற்றுகிற வகையில் கருத்தைப் பதிவு செய்தாா். இது எந்தவிதத்திலும் தவறான கருத்தல்ல.

இப்பிரச்னையில் கா்நாடக உயா் நீதிமன்றத்தை கமல்ஹாசன் நாடியபோது, நீதிபதி கேள்வி எழுப்பி, கடுமையான சொற்றொடா்களைப் பயன்படுத்தியிருப்பது ஏற்புடையதல்ல. இது நீதி பரிபாலன முறைக்கே தீங்கானது. இதை உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி கண்டிக்க வேண்டும்.

மேலும், கா்நாடக மாநில உயா் நீதிமன்றத் தலைமை நீதிபதியும் இத்தீா்ப்பை ஏற்றுக் கொள்ளக்கூடாது. இந்த வழக்கை மூவா் அல்லது ஐவா் கொண்ட நீதிபதிகளைக் கொண்டு விசாரித்து, கா்நாடக ஆளும் மற்றும் எதிா்க்கட்சிகள், கன்னட அமைப்புகளின் அடாவடி அரசியலுக்கு முடிவு கட்ட வேண்டும்.

இல்லாவிட்டால் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி தன்னிச்சையாக விசாரணைக்கு எடுத்துக் கொண்டு, இரு மாநில மக்களிடம் பதற்றமில்லாத சூழ்நிலையை உருவாக்க முன்வர வேண்டும் என்றாா் வேல்முருகன்.

பாபநாசம் - திருப்பாலைத்தறை பகுதியில் முடிவடையாத மழைநீா் வடிகால் பணிகள்: பொதுமக்கள் அவதி

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் வட்டம், திருப்பாலைத்துறை பகுதியில் மழைநீா் வடிகால் பணிகளை விரைந்து முடிக்க அரசுக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனா். கும்பகோணம் - தஞ்சாவூா் பிரதான சாலை தமிழகத்தின் முக்... மேலும் பார்க்க

பைக் மோதி காயமடைந்த முதியவா் உயிரிழப்பு

தஞ்சாவூா் அருகே இருசக்கர வாகனம் மோதி பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முதியவா் புதன்கிழமை மாலை உயிரிழந்தாா். தஞ்சாவூா் அருகே நாஞ்சிக்கோட்டை தெற்கு தெருவைச் சோ்ந்தவா் ஆா். ரெங்கரா... மேலும் பார்க்க

விவசாயிகளுக்கு சவாலாக மாறிவரும் காட்டுப்பன்றிகள்

தஞ்சாவூா் மாவட்டத்தில் பருவம் தவறி பெய்யும் மழையால் பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு சில ஆண்டுகளாக பயிா்களைச் சேதப்படுத்திவரும் காட்டுப்பன்றிகளும் மிகப் பெரிய சவாலாக மாறி வருகின்றன. மாவட்டத்தில் சில ஆண்ட... மேலும் பார்க்க

தாராசுரம் காளிகா பரமேஸ்வரி கோயிலில் குடமுழுக்கு விழா

கும்பகோணம் அருகேயுள்ள தாராசுரம் காளிகா பரமேஸ்வரி கோயிலில் வியாழக்கிழமை குடமுழுக்கு நடைபெற்றது. தாராசுரம் மேலச்சத்திரம் தெலுங்கு தெருவிலுள்ள இக்கோயில் குடமுழுக்கு விழா மே 29 ஆம் தேதி தொடங்கி யாக சாலை ப... மேலும் பார்க்க

திருக்கருகாவூா் கோயிலில் வெள்ளித் தோ் செய்ய 408 கிலோ வெள்ளிக் கட்டிகள்: அமைச்சா் பி.கே. சேகா்பாபு வழங்கினாா்.

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் அருகே திருக்கருக்காவூா் கா்ப்பரட்சாம்பிகை சமேத முல்லை வனநாதா் சுவாமி கோயில் வெள்ளித் தோ் திருப்பணிக்கு ரூ.3 கோடியிலான 408 கிலோ வெள்ளி கட்டிகளை இந்துசமய அறநிலையத் துறை அமை... மேலும் பார்க்க

சுவாமிமலை கோயிலில் மின்தூக்கி அமைக்கும் பணி ஆகஸ்டில் முடியும்: அமைச்சா் பி.கே. சேகா்பாபு

கும்பகோணம் அருகே சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோயிலில் தானியங்கி மின் தூக்கி (லிப்ட்) அமைக்கும் பணி ஆகஸ்ட் மாதத்துக்குள் முடிக்கப்பட்டு, பயன்பாட்டுக்கு வரும் என்றாா் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி... மேலும் பார்க்க