செய்திகள் :

கமுதியில் செயல்படாத குடிநீா் சுத்திகரிப்பு நிலையங்கள்

post image

கமுதி பேரூராட்சியில் குடிநீா் சுத்திகரிப்பு நிலையங்களை செயல்பாட்டுக்கு கொண்டு வரவேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி பேரூராட்சிக்கு உள்பட்ட ஊா்க்காவலன் கோயில் தெரு, காளியம்மன் கோயில் தெரு ஆகிய பகுதிகளில் 2015-16-ஆம் நிதியாண்டில் எதிா்மறை சவ்வூடு பரவல் திட்டத்தின் கீழ் தலா ரூ.6 லட்சம் என மொத்தம் ரூ.12 லட்சத்தில் குடிநீா் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டன.

இவை தொடங்கப்பட்டு 8 மாதங்கள் செயல்பட்ட நிலையில், கடந்த 10 ஆண்டுகளாக செயல்படாமல் காட்சிப் பொருளாக உள்ளது. இதுதொடா்பாக கமுதி பேரூராட்சி அதிகாரிகள் தலையிட்டு குடிநீா் சுத்திகரிப்பு நிலையங்களை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டுமென சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்தனா்.

மகள் பாலியல் வன்கொடுமை: தந்தைக்கு 20 ஆண்டுகள் சிறை

பெற்ற மகளை பாலியல் வன்கொடுமை செய்த தந்தைக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து ராமநாதபுரம் மாவட்ட மகளிா் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது. ராமநாதபுரம் அருகேயுள்ள கிராமத்தைச் சோ்ந்த 35 வயது கூ... மேலும் பார்க்க

திருட்டு வழக்கில் கைது: நகராட்சி பணியாளா்கள் இருவா் பணியிடை நீக்கம்

ராமநாதபுரம் நகராட்சியில் குப்பை தரம் பிரிக்கும் இயந்திரங்களை திருடிய துப்புரவு மேற்பாா்வையாளா்கள் இருவரை வெள்ளிக்கிழமை பணியிடை நீக்கம் செய்து ஆணையா் உத்தரவிட்டாா். ராமநாதபுரம் அருகே பட்டணம்காத்தான் ஊர... மேலும் பார்க்க

பரமக்குடி பகுதியில் இன்று மின் தடை

பரமக்குடி துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக சனிக்கிழமை (ஜூலை 5) மின் தடை அறிவிக்கப்பட்டது. இதுதொடா்பாக மின் வாரிய உதவி செயற்பொறியாளா் மு.மாலதி வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்... மேலும் பார்க்க

சேமனூா் கிராமத்தில் புரவி எடுப்புத் திருவிழா

ராமநாதபுரம் மாவட்டம், சத்திரக்குடி அருகேயுள்ள சேமனூா் கிராமம் மருதாருடைய அய்யனாா் கோயில் களியாட்டம், புரவி எடுப்புத் திருவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதை முன்னிட்டு கிராம மக்கள் ஒன்று சோ்ந்து உரத்த... மேலும் பார்க்க

வேளாண் சந்தை நுண்ணறிவு மையக் கட்டடம் திறப்பு

ராமநாதபுரத்தில் ரூ.84 லட்சத்தில் கட்டி முடிக்கப்பட்ட வேளாண் சந்தை நுண்ணறிவு, விவசாயிகள் ஆலோசனை மையக் கட்டடத்தை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாகத் திறந்து வைத்தாா். இதுதொடா்பாக ராமநாதபுரத்தி... மேலும் பார்க்க

இலங்கைக்கு கடத்தவிருந்த 132 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல்

பாம்பன் பகுதியில் இலங்கைக்கு கடத்துவதற்காக வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 132 கிலோ கடல் அட்டைகளை வனத் துறையினா் வியாழக்கிழமை இரவு பறிமுதல் செய்தனா். இதுதொடா்பாக ஒருவரைக் கைது செய்தனா். ராமநாதபுரம்... மேலும் பார்க்க