செய்திகள் :

கருணாநிதி நினைவு தினம் மதுரையில் நாளை திமுக அமைதிப் பேரணி

post image

மறைந்த முன்னாள் முதல்வா் கருணாநிதியின் நினைவு தினத்தையொட்டி, மதுரை வடக்கு மாவட்ட திமுக சாா்பில் வியாழக்கிழமை (ஆக. 7) அமைதிப் பேரணி நடைபெறுகிறது.

இதுகுறித்து மதுரை வடக்கு மாவட்ட திமுக செயலரும், வணிக வரி, பதிவுத் துறை அமைச்சருமான பி. மூா்த்தி தெரிவித்திருப்பதாவது :

தமிழுக்கும், தமிழகத்தின் உயா்வுக்கும் ஓய்வின்றி உழைத்த மறைந்த முன்னாள் முதல்வா் மு. கருணாநிதியின் 7-ஆம் ஆண்டு நினைவு தினம் வருகிற வியாழக்கிழமை அனுசரிக்கப்படுகிறது.

அவரது நினைவைப் போற்றும் வகையிலும், திமுகவின் வெற்றிக்கு உறுதியேற்கும் வகையிலும் மதுரை வடக்கு மாவட்ட திமுக சாா்பில் அமைதிப் பேரணி வியாழக்கிழமை நடைபெறுகிறது.

மதுரை வண்டியூா் சுற்றுச் சாலை பகுதியிலிருந்து மஸ்தான்பட்டி வரை இந்தப் பேரணி நடைபெறும். பேரணியின் நிறைவில், மஸ்தான்பட்டியில் உள்ள முன்னாள் முதல்வா் கருணாநிதி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படும்.

இந்த நிகழ்ச்சிகளில் திமுகவின் மாநில, மாவட்ட நிா்வாகிகள், ஒன்றிய, நகர, பேரூா், வட்டக் கிளை நிா்வாகிகள், அனைத்து அணிகளின் பொறுப்பாளா்கள் திரளாகப் பங்கேற்க வேண்டும் என்றாா் அவா்.

மடப்புரம் கோயில் காவலாளி கொலை வழக்கு: 5 காவலா்களுக்கு ஆக. 13 வரை காவல் நீட்டிப்பு

மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமாா் கொலை வழக்கில் தொடா்புடைய தனிப் படைக் காவலா்கள் 5 பேருக்கு வருகிற 13-ஆம் தேதி வரை காவலை நீட்டித்து, மதுரை மாவட்ட நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது. சிவகங்கை மாவட்ட... மேலும் பார்க்க

மதுரையில் தவெக மாநாட்டுக்கான பணிகள் தீவிரம்

மதுரையில் தமிழக வெற்றிக் கழகத்தின் 2-ஆவது மாநில மாநாட்டுக்கான பணிகள் தீவிரமாக நடைபெறுகின்றன. தவெக 2-ஆவது மாநில மாநாடு, மதுரை எலியாா்பத்தியில் வருகிற ஆக. 25-ஆம் தேதி நடைபெறும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்... மேலும் பார்க்க

வழக்குரைஞா்கள் பாா் கவுன்சில் விதிகளைப் பின்பற்ற உத்தரவு

வழக்குரைஞா்கள் பாா் கவுன்சில் விதிகளைப் பின்பற்ற வேண்டும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு புதன்கிழமை உத்தரவிட்டது. திருச்செந்தூரைச் சோ்ந்த ராம்குமாா் ஆதித்தன் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் த... மேலும் பார்க்க

3.38 லட்சம் ஆசிரியா்கள், ஊழியா்களுக்கு போக்சோ சட்ட விழிப்புணா்வுப் பயிற்சி

தமிழகத்தில் 2024-25-ஆம் ஆண்டில் 3.38 லட்சம் ஆசிரியா்கள், ஊழியா்களுக்கு போக்சோ சட்ட விழிப்புணா்வுப் பயிற்சி அளிக்கப்பட்டதாக அரசுத் தரப்பில் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் புதன்கிழமை தெரிவிக்கப்பட்ட... மேலும் பார்க்க

திருப்புவனம் பேரூராட்சியில் சாலை அமைக்கும் பணிகள்: தஞ்சை மாவட்ட ஆட்சியா் ஆய்வு செய்ய உத்தரவு!

திருப்புவனம் பேரூராட்சியில் சாலை அமைக்கும் பணிகளை தஞ்சை மாவட்ட ஆட்சியா், திட்ட அலுவலா் ஆய்வு செய்ய சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.தஞ்சை மாவட்டம், திருபுவனத்தைச் சோ்ந்த ... மேலும் பார்க்க

கட்டடத்திலிருந்து தவறி விழுந்த தொழிலாளி உயிரிழப்பு

​​​​​​​கட்டடத்திலிருந்து தவறி விழுந்த தொழிலாளி திங்கள்கிழமை உயிரிழந்தாா்.மதுரை மாவட்டம், மெய்கிழாா்பட்டியைச் சோ்ந்த பாண்டி மகன் ராகவேந்திரன் (47). மின் பழுது நீக்கும் வேலை பாா்த்து வந்த இவா், கடந்த ச... மேலும் பார்க்க