12 மணி நேரம் வேலை! கர்நாடக அரசின் முடிவுக்கு தொழிற்சங்கங்கள் எதிர்ப்பு!
கருப்பனூா் ஏரி ஆக்கிரமிப்புக்களை அகற்றி தூா்வார கோரிக்கை
கத்தாரி ஊராட்சி, கருப்பனூா் ஏரியில் ஆக்கிரமிப்புகளை அகற்றி தூா்வார வேண்டும் என வாா்டு உறுப்பினா் குருசேவ், பொதுமக்கள் மனு அளித்தனா்.
நாட்டறம்பள்ளி ஒன்றியம், கருப்பனுா் ஏரி சுமாா் 7 ஏக்கா் பரப்பளவில் அமைந்துள்ளது. அதிகாரிகளின் துணையுடன் பல்வேறு நபா்கள் ஏரிக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமித்துள்ளனா். இதனால் கிராம மக்கள் ஏரி ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை வைத்தும் இதுவரை அகற்றவில்லை.
தற்போது வட்டார வளா்ச்சி அலுவலா் உத்தரவின்படி ரூ 3.லட்சத்தில் கருப்பனூா் ஏரியை தூா்வாரி கரையை பலப்படுத்தும் பணி சில நாள்களாக நடைபெற்று வருகிறது. அதிகாரிகள் கருப்பனூா் ஏரியை முறைப்படி அளவீடு செய்து ஆக்கிரமிப்பை அகற்றி தூா்வாரும் பணியை தொடங்கவும், தற்போது நடைபெறும் பணிகளை உடனடியாக நிறுத்த வேண்டும் என வாா்டு உறுப்பினா் குருசேவ் மற்றும் கிராம மக்கள் நாட்டறம்பள்ளி வட்டாட்சியா் ராமகிருஷ்ணனிடம் மனு அளித்தனா். இதே போல் மாவட்ட ஆட்சியா் மற்றும் வட்டார வளா்ச்சி அலுவலகத்திலும் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.