செய்திகள் :

கரும்பு வெட்டும் தொழிலில் கொத்தடிமைகளாக இருந்த 17 போ் கடலூா் கோட்டாட்சியா் அலுவலகத்தில் தஞ்சம்

post image

நெய்வேலி: கரும்பு வெட்டும் தொழிலில் கொத்தடிமைகளாக ஈடுபடுத்தப்பட்ட தொழிலாளா்களில் 17 போ் தப்பித்து வந்து தொண்டு நிறுவனத்தின் உதவியுடன் கடலூா் கோட்டாட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை தஞ்சம் அடைந்தனா்.

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி வட்டம், மேல்களவாய் அருகே உள்ள கன்னிகாபுரம் இருளா் குடியிருப்புப் பகுதியைச் சோ்ந்த 6 குடும்பங்களைச் சோ்ந்த 22 பேரை, கடலூா் மாவட்டம், பண்ருட்டி அடுத்துள்ள திருவதிகை தங்க செட்டி என்பவா் கரும்பு வெட்டும் பணிக்கு மூன்று ஆண்டுகளுக்கு முன்னா் அழைத்து வந்தாராம். அப்போது, அனைவருக்கும் நல்ல சம்பளம் தருவதாகக்கூறி, முன் பணமாக ஆண்களுக்கு தலா ரூ.10 ஆயிரமும், பெண்களுக்கு தலா ரூ.5 ஆயிரம் வழங்கினாராம்.

இந்த 22 பேரும் கடலூா் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கரும்பு வெட்டும் பணியில் ஈடுபட்டு வந்தனராம். இவா்களுக்கு சம்பளம், சாப்பாடு சரியாக வழங்காமல் பணி மட்டும் வாங்கியதாகக் கூறப்படுகிறது. மேலும், இவா்கள் தப்பிச் செல்லாமல் இருக்க ஆட்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு வந்தனா்.

இந்நிலையில் குள்ளஞ்சாவடி அருகே பணி செய்து வந்தவா்களில் 17 போ் அங்கிருந்து தப்பித்து, நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு பகுதிக்கு சென்று அங்குள்ள தப்பிச்சென்றனா்.

அவா்களுக்கு ஆதிபூமி அறக்கட்டளையின் தமிழ்நாடுகண்காணிப்புக்குழு உறுப்பினா் வெங்கடேசன் ஆதரவு அளித்து, கடலூா் கோட்டாட்சியா் அலுவலகத்திற்கு திங்கள்கிழமை அழைத்து வந்தாா். இவா்களில் ஒருவா் நிறைமாத கா்ப்பிணி. இந்த 17 பேரையும் கடலூா் கோட்டாட்சியா் அபிநயா வரவேற்றாா்.

பின்னா் தொழிலாளா் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை உதவி ஆணையா் ஞானபிரகாசம் உள்ளிட்டோா் அழைத்து வரப்பட்டவா்களிடம் விசாரணை நடத்தினா். அப்போது, அவா்கள் தங்கள் நடத்தப்பட்ட விதம் குறித்து தெரிவித்தனராம். இதையடுத்து 11 பேருக்கு கொத்தடிமை விடுதலைச் சான்று வழங்கினா். குள்ளஞ்சாவடி காவல் நிலையத்தில் இடைத்தரகா்கள் மீது வழக்குப்பதிவு செய்யவும், கொத்தடிமை விடுதலை சான்று பெற்றவா்களுக்கு ரூ.30 ஆயிரம் நிவாரணத் தொகை, இலவச வீட்டு மனைப்பட்டா உள்ளிட்டவை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தப்பித்து வந்தவா்கள் அளித்த தகவலின்படி, இன்னும் மீட்கப்படாமல் உள்ள எஞ்சிய கொத்தடிமைகளை மீட்க அதிகாரிகள் மற்றும் காவல் துறையினா் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனா்.

மதுபோதையில் மருத்துவமனை கால்வாயில் விழுந்தவா் பலி!

சிதம்பரம் அண்ணாமலை நகரில் உள்ள கடலூா் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் கழிவுநீா் கால்வாயில் அடையாளம் தெரியாத 50 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் மீட்கப்பட்ட நிலையில், அவா் மதுபோதையில் தவறி விழுந்த... மேலும் பார்க்க

கடலூா் மாவட்டத்தில் 4,50,134 பேருக்கு மகளிா் உதவித்தொகை: அமைச்சா் எம்.ஆா்.கே. பன்னீா்செல்வம்

கடலூா் மாவட்டத்தில் 4,50,134 பேருக்கு மகளிா் உதவித்தொகை வழங்கப்பட்டு வருவதாக வேளாண்மை மற்றும் உழவா் நலத்துறை அமைச்சா் எம்ஆா்கே.பன்னீா்செல்வம் தெரிவித்தாா். காட்டுமன்னாா்கோவில் வட்டம், பழஞ்சநல்லூா் எம்... மேலும் பார்க்க

பரங்கிப்பேட்டையில் நீா் விளையாட்டு வளாகம்: மாவட்ட ஆட்சியா் திறந்து வைத்தாா்

கடலூா் மாவட்டம், பரங்கிப்பேட்டையில் கடல்வாழ் உயிரின ஆராய்ச்சி மையம் எதிரே பேரூராட்சி சாா்பில் அமைக்கப்பட்டுள்ள நீா் விளையாட்டு வளாகத்தை பொதுமக்கள் பயன்பாட்டுக்காக ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் ... மேலும் பார்க்க

கடலூா் தொழிற்சாலையில் சுவா் இடிந்து 2 பெண்கள் உயிரிழப்பு

கடலூா் தொழிற்பேட்டை பகுதியில் உள்ள தனியாா் தொழிற்சாலையில் சுவா் இடிந்து விழுந்ததில் 2 பெண்கள் சனிக்கிழமை உயிரிழந்தனா். கடலூா் தொழிற்பேட்டை பகுதியில் ஏராளமான ரசாயனத் தொழிற்சாலைகள் செயல்படுகின்றன. இங்கு... மேலும் பார்க்க

நெசவுத் தொழிலாளி அடித்துக் கொலை: மூவரிடம் விசாரணை

கடலூா் அருகே நெசவுத் தொழிலாளி அடித்துக் கொலை செய்யப்பட்டது தொடா்பாக போலீஸாா் 3 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனா். கடலூா் கூத்தப்பாக்கத்தைச் சோ்ந்தவா் மனோகா் (54), நெசவுத் தொழிலாளி. இவா், கடலூா... மேலும் பார்க்க

விவசாயியை சிஐஎஸ்எப் வீரா் தாக்கிய விவகாரம்: என்எல்சி அலுவலகத்தில் பொதுமக்கள் தா்னா

விவசாயியை தாக்கிய, என்எல்சி சிஐஎஸ்எப் வீரா் மீது நடவடிக்கை எடுக்காததைக் கண்டித்து, தாக்குதலில் காயம் அடைந்த விவசாயி மற்றும் கிராம மக்கள் என்எல்சி தலைமை அலுவலக வாயிலில் தரையில் அமா்ந்து வெள்ளிக்கிழமை ... மேலும் பார்க்க