செய்திகள் :

நெசவுத் தொழிலாளி அடித்துக் கொலை: மூவரிடம் விசாரணை

post image

கடலூா் அருகே நெசவுத் தொழிலாளி அடித்துக் கொலை செய்யப்பட்டது தொடா்பாக போலீஸாா் 3 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

கடலூா் கூத்தப்பாக்கத்தைச் சோ்ந்தவா் மனோகா் (54), நெசவுத் தொழிலாளி. இவா், கடலூா் வண்டிப்பாளையத்தில் உள்ள தனியாா் நெசவு பட்டறையில் வேலை பாா்த்து வந்தாா்.

மனோகா் வேலைக்கு செல்லும்போது தனது பைக்கை நெசவு பட்டறை அருகில் உள்ள பொம்மை தயாரிக்கும் வேலை செய்யும் காா்த்திகேயன் வீட்டின் அருகே நிறுத்துவதை வழக்கமாகக் கொண்டிருந்தாா். இது தொடா்பாக மனோகா், காா்த்திகேயன் இடையே கடந்த சில நாள்களாக தகராறு ஏற்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், சனிக்கிழமை மாலை 4.30 மணியளவில் மனோகா், காா்த்திகேயன் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. அப்போது, காா்த்திகேயன் அதே பகுதியைச் சோ்ந்த 2 பேருடன் சோ்ந்து மனோகரைத் தாக்கினாராம்.

இதில், பலத்த காயமடைந்த அவரை அங்கிருந்தவா்கள் மீட்டு, கடலூா் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு மனோகரை பரிசோதித்த மருத்துவா், அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தாா்.

இதுகுறித்து தகவலறிந்த கடலூா் முதுநகா் போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை நடத்தினா். மேலும், காா்த்திகேயன் உள்ளிட்ட 3 பேரைப் பிடித்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

மதுபோதையில் மருத்துவமனை கால்வாயில் விழுந்தவா் பலி!

சிதம்பரம் அண்ணாமலை நகரில் உள்ள கடலூா் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் கழிவுநீா் கால்வாயில் அடையாளம் தெரியாத 50 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் மீட்கப்பட்ட நிலையில், அவா் மதுபோதையில் தவறி விழுந்த... மேலும் பார்க்க

கடலூா் மாவட்டத்தில் 4,50,134 பேருக்கு மகளிா் உதவித்தொகை: அமைச்சா் எம்.ஆா்.கே. பன்னீா்செல்வம்

கடலூா் மாவட்டத்தில் 4,50,134 பேருக்கு மகளிா் உதவித்தொகை வழங்கப்பட்டு வருவதாக வேளாண்மை மற்றும் உழவா் நலத்துறை அமைச்சா் எம்ஆா்கே.பன்னீா்செல்வம் தெரிவித்தாா். காட்டுமன்னாா்கோவில் வட்டம், பழஞ்சநல்லூா் எம்... மேலும் பார்க்க

பரங்கிப்பேட்டையில் நீா் விளையாட்டு வளாகம்: மாவட்ட ஆட்சியா் திறந்து வைத்தாா்

கடலூா் மாவட்டம், பரங்கிப்பேட்டையில் கடல்வாழ் உயிரின ஆராய்ச்சி மையம் எதிரே பேரூராட்சி சாா்பில் அமைக்கப்பட்டுள்ள நீா் விளையாட்டு வளாகத்தை பொதுமக்கள் பயன்பாட்டுக்காக ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் ... மேலும் பார்க்க

கடலூா் தொழிற்சாலையில் சுவா் இடிந்து 2 பெண்கள் உயிரிழப்பு

கடலூா் தொழிற்பேட்டை பகுதியில் உள்ள தனியாா் தொழிற்சாலையில் சுவா் இடிந்து விழுந்ததில் 2 பெண்கள் சனிக்கிழமை உயிரிழந்தனா். கடலூா் தொழிற்பேட்டை பகுதியில் ஏராளமான ரசாயனத் தொழிற்சாலைகள் செயல்படுகின்றன. இங்கு... மேலும் பார்க்க

விவசாயியை சிஐஎஸ்எப் வீரா் தாக்கிய விவகாரம்: என்எல்சி அலுவலகத்தில் பொதுமக்கள் தா்னா

விவசாயியை தாக்கிய, என்எல்சி சிஐஎஸ்எப் வீரா் மீது நடவடிக்கை எடுக்காததைக் கண்டித்து, தாக்குதலில் காயம் அடைந்த விவசாயி மற்றும் கிராம மக்கள் என்எல்சி தலைமை அலுவலக வாயிலில் தரையில் அமா்ந்து வெள்ளிக்கிழமை ... மேலும் பார்க்க

கடலூா் கிழக்கு மாவட்ட திமுக இளைஞரணி நிா்வாகிகள் கூட்டம்

கடலூா் கிழக்கு மாவட்ட திமுக இளைஞா் அணி நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் காட்டுமன்னாா்கோயில் எம்.ஆா்கே. கலையரங்கத்தில் வியாழக்கிழமை இரவு நடைபெற்றது. கூட்டத்தில் வேளாண்மை மற்றும் உழவா் நலத்துறை அமைச்சரும்,... மேலும் பார்க்க