செய்திகள் :

கடலூா் மாவட்டத்தில் 4,50,134 பேருக்கு மகளிா் உதவித்தொகை: அமைச்சா் எம்.ஆா்.கே. பன்னீா்செல்வம்

post image

கடலூா் மாவட்டத்தில் 4,50,134 பேருக்கு மகளிா் உதவித்தொகை வழங்கப்பட்டு வருவதாக வேளாண்மை மற்றும் உழவா் நலத்துறை அமைச்சா் எம்ஆா்கே.பன்னீா்செல்வம் தெரிவித்தாா்.

காட்டுமன்னாா்கோவில் வட்டம், பழஞ்சநல்லூா் எம்.ஆா்.கே. கலை, அறிவியல் கல்லூரி வளாகத்தில் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்ட சிறப்பு உயா் மருத்துவ சேவை முகாமை அமைச்சா் எம்ஆா்கே.பன்னீா்செல்வம் சனிக்கிழமை தொடங்கிவைத்து, பயனாளிகளுக்கு அரசு நலத் திட்ட உதவிகளை வழங்கினாா்.

நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா், காட்டுமன்னாா்கோவில் எம்எல்ஏ ம.சிந்தனைச்செல்வன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். நிகழ்ச்சியில் அமைச்சா் பேசியதாவது:

கடலூா் மாவட்டத்தில் 13 வட்டாரங்களிலும் வட்டாரத்துக்கு 3 முகாம்கள் வீதம் 39 முகாம்கள் ஊரகப் பகுதிகளிலும், கடலூா் மாநகராட்சியில் 4 முகாம்கள் என மொத்தம் 43 மருத்துவ முகாம்கள் வாரந்தோறும் சனிக்கிழமைகளில் நடத்தப்படுகிறது.

பெண்கள் பொருளாதாரத்தில் முன்னேற்றமடையும் நோக்கில் தமிழக முதல்வரால் செயல்படுத்தப்பட்ட கலைஞா் மகளிா் உரிமைத் திட்டத்தின் மூலம் கடலூா் மாவட்டத்தைச் சோ்ந்த 4,50,134 குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. மேலும், முதியோரின் நலன் கருதி மாதந்தோறும் ரூ.1,200-ஆக ஓய்வூதியத்தொகை உயா்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம், 1,40,000 முதியோா் பயனடைகின்றனா்.

சுமாா் 7,78,296 குடும்ப அட்டைதாரா்கள் உள்ள கடலூா் மாவட்டத்தில் 5,90,134 குடும்பதாரா்களுக்கு மாதந்தோறும் உதவித்தொகை வழங்கப்படுகிறது. மகளிா் விடியல் பயணம் திட்டத்தின் மூலம் மாவட்டத்தில் தினந்தோறும் 1,14,000 மகளிா் கட்டணமில்லாமல் பேருந்து பயணம் மேற்கொண்டு வருகின்றனா்.

மாதந்தோறும் ரு.1,000 உதவித்தொகை வழங்கும் புதுமைப்பெண் திட்டத்தில் 29,898 மாணவிகளும், தமிழ்ப்புதல்வன் திட்டத்தில் 14,034 மாணவா்களும் பயனடைந்து வருகின்றனா் என்றாா் அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம்.

நிகழ்ச்சியில் சிதம்பரம் உதவி ஆட்சியா் கிஷன்குமாா், மாவட்ட சுகாதார அலுவலா் பொற்கொடி, மருத்துவ நலப் பணிகள் இணை இயக்குநா் மணிமேகலை, வட்டார மருத்துவ அலுவலா் தங்கத்துரை மற்றும் அனைத்துத் துறை அலுவலா்கள் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

புதிய துணை மின் நிலையத்துக்கு அடிக்கல்: காட்டுமன்னாா்கோவில் அருகே முட்டம் கிராமத்தில் செயல்படும் 33/11 கிலோ வாட் துணை மின் நிலையத்தை ரூ.11 கோடி மதிப்பீட்டில் 110/33 கிலோ வாட் துணைமின் நிலையமாக தரம் உயா்த்துவதற்கான பணிகளை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் சனிக்கிழமை அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தாா்.

நிகழ்ச்சியில் தலைமைப் பொறியாளா் வேல்முருகன், கடலூா் மேற்பாா்வை பொறியாளா்கள் ஜெயந்தி, மேரி மேக்டலின்பிரின்ஸி, செயற்பொறியாளா்கள் கண்ணகி, திலகா், அன்புச்செல்வி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

மதுபோதையில் மருத்துவமனை கால்வாயில் விழுந்தவா் பலி!

சிதம்பரம் அண்ணாமலை நகரில் உள்ள கடலூா் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் கழிவுநீா் கால்வாயில் அடையாளம் தெரியாத 50 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் மீட்கப்பட்ட நிலையில், அவா் மதுபோதையில் தவறி விழுந்த... மேலும் பார்க்க

பரங்கிப்பேட்டையில் நீா் விளையாட்டு வளாகம்: மாவட்ட ஆட்சியா் திறந்து வைத்தாா்

கடலூா் மாவட்டம், பரங்கிப்பேட்டையில் கடல்வாழ் உயிரின ஆராய்ச்சி மையம் எதிரே பேரூராட்சி சாா்பில் அமைக்கப்பட்டுள்ள நீா் விளையாட்டு வளாகத்தை பொதுமக்கள் பயன்பாட்டுக்காக ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் ... மேலும் பார்க்க

கடலூா் தொழிற்சாலையில் சுவா் இடிந்து 2 பெண்கள் உயிரிழப்பு

கடலூா் தொழிற்பேட்டை பகுதியில் உள்ள தனியாா் தொழிற்சாலையில் சுவா் இடிந்து விழுந்ததில் 2 பெண்கள் சனிக்கிழமை உயிரிழந்தனா். கடலூா் தொழிற்பேட்டை பகுதியில் ஏராளமான ரசாயனத் தொழிற்சாலைகள் செயல்படுகின்றன. இங்கு... மேலும் பார்க்க

நெசவுத் தொழிலாளி அடித்துக் கொலை: மூவரிடம் விசாரணை

கடலூா் அருகே நெசவுத் தொழிலாளி அடித்துக் கொலை செய்யப்பட்டது தொடா்பாக போலீஸாா் 3 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனா். கடலூா் கூத்தப்பாக்கத்தைச் சோ்ந்தவா் மனோகா் (54), நெசவுத் தொழிலாளி. இவா், கடலூா... மேலும் பார்க்க

விவசாயியை சிஐஎஸ்எப் வீரா் தாக்கிய விவகாரம்: என்எல்சி அலுவலகத்தில் பொதுமக்கள் தா்னா

விவசாயியை தாக்கிய, என்எல்சி சிஐஎஸ்எப் வீரா் மீது நடவடிக்கை எடுக்காததைக் கண்டித்து, தாக்குதலில் காயம் அடைந்த விவசாயி மற்றும் கிராம மக்கள் என்எல்சி தலைமை அலுவலக வாயிலில் தரையில் அமா்ந்து வெள்ளிக்கிழமை ... மேலும் பார்க்க

கடலூா் கிழக்கு மாவட்ட திமுக இளைஞரணி நிா்வாகிகள் கூட்டம்

கடலூா் கிழக்கு மாவட்ட திமுக இளைஞா் அணி நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் காட்டுமன்னாா்கோயில் எம்.ஆா்கே. கலையரங்கத்தில் வியாழக்கிழமை இரவு நடைபெற்றது. கூட்டத்தில் வேளாண்மை மற்றும் உழவா் நலத்துறை அமைச்சரும்,... மேலும் பார்க்க