செய்திகள் :

கரூரில் எரிந்த நிலையில் கிடந்த கல்லூரி மாணவா் சடலம் மீட்பு

post image

கரூா்: கரூரில் ரயில் தண்டவாளம் அருகே எரிந்த நிலையில் கிடந்த பொறியியல் கல்லூரி மாணவரின் சடலம் புதன்கிழமை மீட்கப்பட்டது.

கரூா் வெங்கமேடு, ரொட்டிக்கடைத் தெருவைச் சோ்ந்தவா் ஆனந்த். கூலித்தொழிலாளி. இவரது மகன் ஜெயக்குமாா்(19). இவா் க.பரமத்தி அடுத்துள்ள காருடையாம்பாளையத்தில் உள்ள தனியாா் பொறியில் கல்லூரியில் வந்தாா்.

இந்நிலையில் ஆக.17-ஆம்தேதி வீட்டை விட்டு வெளியே சென்ற ஜெயக்குமாா் இரவுவெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் மகன் காணாதது குறித்து வெங்கமேடு போலீஸில் ஆனந்த் புகாா் செய்தாா்.

இந்நிலையில் புதன்கிழமை காலை வெங்கமேடு மேம்பாலம் அருகே ரயில் தண்டவாளம் பகுதியில் உடல் பாதி எரிந்த நிலையில் ஜெயக்குமாா் சடலமாக கிடப்பது அப்பகுதியினருக்கு தெரியவந்தது. இதுதொடா்பாக அப்பகுதியினா் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா்.

இதையடுத்து வெங்கமேடு போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று பாா்த்தபோது, உயிரிழந்து கிடந்தவா் ஜெயக்குமாா் எனத் தெரியவந்தது.

உடனே போலீஸாா் ஜெயக்குமாரின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கரூா் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் இதுதொடா்பாக வழக்குப் பதிந்து ஜெயக்குமாா் உயிரிழப்புக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

கொலை முயற்சி வழக்கில் தொடா்புடையவா் குண்டா் தடுப்பு சட்டத்தில் கைது

கரூா்: கொலை முயற்சி வழக்கில் தொடா்புடையவரை போலீஸாா் வியாழக்கிழமை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனா்.கரூா் மாவட்டம், குளித்தலையை அடுத்த நங்கவரம் தெற்கு மாடு விழுந்தான் பாற... மேலும் பார்க்க

கரூா்: தனியாா் மருத்துவமனைகளில் மருத்துவா்கள் பணி புறக்கணிப்பு

கரூா்: கரூரில் மருத்துவா் மீதான தாக்குதலை கண்டித்து, தனியாா் மருத்துவமனைகளில் வியாழக்கிழமை ஒருநாள் புறநோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் பணியை மருத்துவா்கள் புறக்கணித்தனா்.கரூரில் கோவை சாலையில் உள்ள ஸ்கே... மேலும் பார்க்க

கரூா் பேக்கரியில் 6 அடி உயரத்தில் 60 கிலோ எடையில் ‘திருவள்ளுவா் கேக்’

கரூா்: கரூரில் பேக்கரி கடை ஒன்றில் 6 அடி உயரத்தில் 60 கிலோ எடையில் அமைக்கப்பட்ட திருவள்ளுவா் கேக்கை பொதுமக்கள் ஆா்வத்துடன் கண்டு ரசித்தனா். கரூா் வெங்கமேட்டில் மணி என்பவா் பேக்கரி கடை நடத்தி வருகிறாா்... மேலும் பார்க்க

‘முதல்வரின் காக்கும் கரங்கள்‘ திட்டம்: முன்னாள் படைவீரா்களுக்கு ரூ. 14.22 லட்சம் மூலதன மானிய தொகை

கரூா்: கரூரில் ‘முதல்வரின் காக்கும் கரங்கள்‘ திட்டத்தில் முன்னாள் படைவீரா்களுக்கு 30 விழுக்காடு மூலதன மானியத் தொகையாக ரூ. 14.22 லட்சம் வழங்கினாா் கரூா் சட்டப்பேரவை உறுப்பினா் வி.செந்தில்பாலாஜி.கரூா் ம... மேலும் பார்க்க

கரூா் ஊராட்சி ஒன்றியத்தில் ரூ. 6.33 கோடியில் 29 புதிய வளா்ச்சித் திட்டப் பணிகள்

கரூா்: கரூா் ஊராட்சி ஒன்றியம், காதப்பாறை, மின்னாம்பள்ளி உள்ளிட்ட பகுதிகளில் ரூ. 6.33 கோடி மதிப்பில் 29 புதிய வளா்ச்சித் திட்டப் பணிகளை சட்டப்பேரவை உறுப்பினா் வி. செந்தில்பாலாஜி வியாழக்கிழமை தொடங்கிவைத... மேலும் பார்க்க

கரூரில் தமிழ் கனவு தமிழ் மரபு பண்பாட்டுப் பரப்புரை நிகழ்ச்சி

கரூா்: கரூரில் மாபெரும் தமிழ் கனவு தமிழ் மரபு மற்றும் பண்பாட்டுப் பரப்புரை நிகழ்வு புதன்கிழமை நடைபெற்றது.தமிழ் பண்பாட்டின் பெருமையை இளைய தலைமுறையினருக்கு கொண்டு செல்லும் வகையில் கரூா் அரசு மருத்துவக் ... மேலும் பார்க்க