செய்திகள் :

கரூர்: 'ரௌடியை பிடிக்க முயன்ற போலீஸ்; தாக்கிவிட்டு ஓடியதால் சுட்டுப் பிடிப்பு!' - நடந்தது என்ன?

post image

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட சின்ன ஆண்டாங்கோயில் பகுதியைச் சேர்ந்த பென்சில் தமிழழகன்(வயது: 30). இவர்மீது கரூரில் உள்ள பல்வேறு காவல் நிலையங்களில் குற்ற வழக்குகள் பல பதிவாகியுள்ளன. இதனால் இவர் ரௌடி பட்டியலில், போலீஸாரால் கண்காணிக்கப்பட்டு வந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் கரூர் -திருச்சி சாலை அமைந்துள்ள லைட் ஹவுஸ் கார்னர் பேருந்து நிறுத்தத்தில் நின்றிருந்த பயணி ஒருவரிடம், பென்சில் தமிழழகன் மற்றும் கரூர் வஞ்சியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த பிரகாஷ், ஹரிஹரன், மனோஜ், ஆகிய நான்கு பேரும் சேர்ந்து வீண் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும், அந்த பயணியை தாக்கி விட்டு தப்பிச் சென்றதாகவும் கூறப்படுகிறது. இதில், காயமடைந்த அந்த பயணி கரூர் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் அடிப்படையில், நேற்று வஞ்சியம்மன் கோயில் தெருவை சேர்ந்த பிரகாஷ், ஹரிஹரன், மனோஜ் ஆகிய மூன்று பேரையும் போலீஸார் கைது செய்தனர். இந்நிலையில், அவர்கள் அளித்த தகவல் அடிப்படையில், கரூர் - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ரயில்வே மேம்பாலம் அருகே பென்சில் தமிழழகன் பதுங்கி இருந்ததாக கிடைத்த தகவல் கிடைத்துள்ளது. அதன் அடிப்படையில், கரூர் நகர காவல் நிலைய ஆய்வாளர் மணிவண்ணன் தலைமையிலான போலீஸார் பென்சில் தமிழழகனை பிடிக்க முற்பட்டபோது போலீஸாரை தாக்கி விட்டு தப்பி ஓட முயற்சி செய்து உள்ளார். அப்போது, தமிழழகன் மீது காவல் ஆய்வாளர் மணிவண்ணன் வலது முழங்காலுக்கு கீழே சுட்டத்தில், நிலை தடுமாறி கீழே விழுந்தார். பின்னர், சம்பவ இடத்திற்கு ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு தமிழழகன் மருத்துவமனையில் முதல் உதவி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு பின்னர், கைது செய்யப்பட்டு நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்டார்.

accused

தொடர்ந்து நீதிபதி மருத்துவமனையில் ரௌடிக்கு சிகிச்சை அளிக்க உத்தரவிட்டதை அடுத்து, காந்திகிராமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் போலீஸ் காவலுடன் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். போலீஸாரால் சுட்டுபிடிக்கப்பட்ட கரூரைச் சேர்ந்த பிரபல ரௌடி பென்சில் தமிழழகன் மீது கொலை வழிப்பறி அடிதடி என பத்துக்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளது என போலீஸார் தெரிவித்துள்ளனர். தப்பியோட முயன்றபோது போலீஸாரால் பிரபல ரௌடி ஒருவர் சுட்டுப் பிடிக்கப்பட்டுள்ள சம்பவம், கரூர் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

கோவை அரபிக் கல்லூரி மூலம் ஐஎஸ் இயக்கத்துக்கு ஆள் சேர்ப்பு: மேலும் 4 பேர் கைது - பின்னணி என்ன?

கோவை கோட்டை ஈஸ்வரன் கோயில் முன்பு கடந்த 2022-ம் ஆண்டு கார் வெடிகுண்டு சம்பவம் நடைபெற்றது. இதில் ஜமேஷா முபின் என்பவர் உயிரிழந்தார். அவருக்கு ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்புடன் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இ... மேலும் பார்க்க

திருப்பூர்: செல்போனில் கேம் விளையாடியதை எச்சரித்த தாய்; சிறுவன் எடுத்த விபரீத முடிவு; என்ன நடந்தது?

திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தை அடுத்த கிராமத்தைச் சேர்ந்த 13 வயது சிறுவன், தாராபுரத்தில் உள்ள தனியார் பள்ளியில் 7-ஆம் வகுப்பு படிக்கிறார். பள்ளியை விட்டு வீட்டுக்கு வந்ததும் தனது தந்தை அல்லது தாயின்... மேலும் பார்க்க

கோவை: புலம்பெயர் தொழிலாளிகளை மிரட்டி பணம் பறிப்பு; ஆட்டோ ஓட்டுநர்கள் கைதின் பின்னணி என்ன?

தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என்றழைக்கப்படும் கோவை மாவட்டத்தில் ஏராளமான தொழில் நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. அங்கு வட மாநிலங்களைச் சேர்ந்த புலம்பெயர் தொழிலாளர்கள் பணியாற்றி வருகிறார்கள். உத்தரப்பிரதேச... மேலும் பார்க்க

``கோயில், குளம் என சுற்றுகிறாள், சரியாக கவனிக்கவில்லை ஆத்திரத்தில்..'' - மகளை கொன்ற 78 வயது தந்தை

நெல்லை மாவட்டம், மேலப்பாளையம் மேலகருங்குளம் சிவாஜிநகர் விரிவாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் காளிமுத்து. இவர் கட்டட தொழிலாளி. இவருடைய மனைவி ஜெயலட்சுமி. இவரது பராமரிப்பில் அவரது தந்தை வேலு இருந்து வந்துள்ளா... மேலும் பார்க்க

திருப்பூர்: போலி ஆதார் அட்டையுடன் தங்கியிருந்த 26 வங்கதேசத்தினர் கைது; பின்னணி என்ன?

உலக அளவில் சீனாவுக்கு அடுத்தபடியாகப் பின்னலாடை வர்த்தகத்தில் வங்கதேசம் உள்ளது. அங்குள்ள மக்களுக்கு வேலைவாய்ப்பளிக்கும் துறையாக பின்னலாடைத் துறை விளங்கி வருகிறது.இருந்தாலும், போதிய ஊதியம் கிடைக்காததால்... மேலும் பார்க்க

தேனிலவில் கணவனை கூலிப்படை ஏவி கொன்ற சோனம்; 3 மொபைல்கள் எங்கே? விசாரணையில் அதிர்ச்சி

மத்திய பிரதேசத்தை சேர்ந்த சோனம் என்ற பெண் கடந்த மாதம் தனது கணவர் ராஜா ரகுவன்சியுடன் மேகாலயாவிற்கு தேனிலவு சென்றார். சென்ற இடத்தில் கூலிப்படையின் துணையோடு கணவனை கொலை செய்து உடலை பள்ளத்தில் தூக்கிப்போட்... மேலும் பார்க்க