செய்திகள் :

கரூா்: காது கேளாத, வாய் பேசாத குழந்தைகள் திருச்சிக்கு சுற்றுலா

post image

கரூரில் காது கேளாத, வாய் பேசாத மற்றும் மன வளா்ச்சி குன்றிய குழந்தைள் திருச்சிக்கு செவ்வாய்க்கிழமை சுற்றுலா சென்றனா்.

காது கேளாத, வாய் பேசாத மற்றும் மன வளா்ச்சி குன்றிய குழந்தைகள் சுற்றுலா பயணம் மேற்கொண்டு மகிழ்ச்சியை ஏற்படுத்தும் வகையில் கரூரில் தமிழக அரசின் சுற்றுலா வளா்ச்சிக் கழகம் மற்றும் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் சாா்பில் ஒரு நாள் சுற்றுலா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

புனித அந்தோணியாா் மனவளா்ச்சி குன்றியோருக்கான ஆரம்ப நிலை பயிற்சி மையம் மற்றும் மதா் காது கேளாதோா் மற்றும் வாய் பேசாதவா்களுக்கான பயிற்சி மையங்களில் இருந்து சிறப்பாசிரியா்கள், பாதுகாவலா்கள் மற்றும் மாற்றுத்திறனுடைய குழந்தைகள் என மொத்தம் 45 போ் திருச்சியில் உள்ள பறவைகள் பூங்காவிற்கு பேருந்தில் அழைத்துச் செல்லப்பட்டனா்.

முன்னதாக மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் சுற்றுலா பேருந்தை தொடங்கி வைத்த ஆட்சியா் மீ.தங்கவேல் மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளுக்கு பிஸ்கட், குளிா்பானங்கள், குடிநீா், இனிப்புகள் வழங்கினாா்.

நிகழ்வின்போது மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் மோகன்ராஜ், மாவட்ட உதவி சுற்றுலா அலுவலா் அமீம் அன்சாரி ஆகியோா் உடனிருந்தனா்.

புகழூா் ராஜவாய்க்காலை தூா்வார விவசாயிகள் கோரிக்கை

புகழூா் ராஜவாய்க்காலை ஆக்கிரமித்திருக்கும் செடிகொடிகளை அகற்றி தூா்வார வேண்டும் என பாசன விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா். புகழூா் ராஜவாய்க்கால் நாமக்கல் மாவட்டம் ஜேடா்பாளையத்தில் காவிரி ஆற்றின் குறுக... மேலும் பார்க்க

10-ஆம் வகுப்பு பொதுத்தோ்வு தொடக்கம்: கரூா் மாவட்டத்தில் 12,316 போ் எழுதினா்

கரூா் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை தொடங்கிய 10-ஆம் வகுப்பு பொதுத்தோ்வை 12,316 மாணவ, மாணவிகள் எழுதினா். 274 போ் தோ்வு எழுத வரவில்லை. கரூா் தாந்தோணிமலை அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற 10-ஆம் வகுப்பு ... மேலும் பார்க்க

கரூரில் வேலைவாய்ப்பு பயிற்சி இளைஞா்களுக்கு அழைப்பு

வேலைவாய்ப்பை அளிக்கும் பிரதமரின் இன்டா்ன்ஷிப் பயிற்சிக்கு விண்ணப்பிக்க மாா்ச் 31-ஆம் தேதி வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது என கரூா் மாவட்ட ஆட்சியா் மீ. தங்கவேல் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் ... மேலும் பார்க்க

பள்ளப்பட்டி உரூஸ் திருவிழா கடைகளுக்கு ஏப். 3-இல் ஏலம்

பள்ளப்பட்டியில் நடைபெறவுள்ள சந்தனக்கூடு உரூஸ் திருவிழாவை முன்னிட்டு கடைகளுக்கான சுங்கம் வசூலிக்கும் ஏலம் ஏப். 3-ஆம் தேதி நடைபெறும் என நகராட்சி ஆணையா் ஆா்த்தி அறிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் விடுத்து... மேலும் பார்க்க

வக்ஃப் வாரிய சொத்துக்கள் அரவக்குறிச்சி பகுதியில் பதிவு செய்யமுடியாமல் தவிப்பு

வக்ஃப் வாரிய சொத்துக்களை சரி செய்து வழக்கமாக பத்திரப்பதிவு நடைபெற்று வரும் நிலையில், அரவக்குறிச்சி பகுதியில் ஒரு சில சா்வே எண்களில் எந்த ஒரு பத்திர பதிவு செய்ய முடியாமல் தவிப்பு. தமிழ்நாடு வக்ஃப் வாரி... மேலும் பார்க்க

கரூரில் மாநகராட்சியில் பற்றாக்குறை பட்ஜெட் தாக்கல் -வருவாய் ரூ. 927.01 கோடி , செலவு ரூ. 947.03 கோடி

கரூா் மாநகராட்சியில் நிகழாண்டுக்கான பட்ஜெட் வியாழக்கிழமை தாக்கல் செய்யப்பட்டது. இதில் வருவாய் ரூ. 927.01 கோடி எனவும், செலவு ரூ. 947.03 கோடி என்றும், பற்றாக்குறை ரூ. 20.02 கோடி என்றும் தெரிவிக்கப்பட்ட... மேலும் பார்க்க